Wednesday 29 August 2012

ரிக்சா


இந்த நவீன உலகத்தில் அழுக்குப்படாமல் எத்தனையோ வேலை வாய்ப்புகள் வந்து விட்டாலும், ரிக்சா ஒட்டுபவர்கள் இன்னும் பழைய நூற்றாண்டின் வடிவமாகவே இருக்கிறார்கள்.

மனிதனை மனிதன் சுமந்து செல்லும் பல்லக்குத் தூக்கிகள் போலவே, இந்த ரிக்சா தொழிலும் இன்னும் மாறவில்லை.

வயிற்றுப் பிழைப்புக்காக ரோட்டோர இடுக்குகளில் ரிக்சா மிதித்தே தேய்ந்த எலும்புகளோடு கிட்டத்தட்ட 50 வயதை கடந்தவர்களும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

நகர வீதிகளில் சாலை நெரிசலில் இருமிக்கொண்டே நகரும் மோட்டார் வண்டிகளை இயக்குவதே சிரமமாக இருக்கும் போது, இந்த மிதி வண்டி ரிக்சாக்களை ஓட்டுவது மிகுந்த வலியாக இருக்கும்.

வெயில் காலங்களை விட மழைக்காலங்களில் ரிக்சாவை ஓட்டிப் பிழைப்பவர்களின்  நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.

மழை வரும் போது, பயணிகள் நனையாமல் ஷேர் ஆட்டோக்களில் பறந்து விடுகிறார்கள்.

மழை வந்தால் சந்தோஷம் தான். ஆனால் நடைமுறையில்....?

தரையில் விரித்து வியாபாரம் செய்பவர்களுக்கும், பிளாட்பார குடியிருப்பில் காலம் தள்ளுபவர்களோடு சேர்த்து ரிக்சா ஓட்டுபவர்களுக்கும், மழைக்காலத்தில் பஞ்சப்பாடுதான்.

பீளாஸ்டிக் பேப்பரையோ கோணிப் பையையோ தலையில் மாட்டிக் கொண்டு மழைத்துளிகள் வழிந்து ஓட, பல்லைக் கடித்துக் கொண்டு சந்தைகளில் காய்கறி மூட்டைகளை அடுக்கி ரிக்சா மிதிக்கிறார்கள்.

கைவண்டியில் நவீன வடிவமாக கண்டிபிடிக்கப்ட்ட ரிக்சா பல மாற்றங்களைத் தாண்டி வந்திருக்கிறது.

பின்னால் இரண்டு சக்கரங்களும், முன்னால் ஒரு சக்கரத்தோடும்....

வசதிக்குத் தக்கவாறு மூட்டை முடிச்சுகள் ஏற்றிச் செல்ல பின்னால் ஒரு சக்கரமும், முன்னால் இரண்டு சக்கரஙகளும் கொண்ட ரிக்சாக்களும் இன்று அதிகமாக இருக்கின்றன.

மோட்டார் ரிக்சாக்களே... நவீன ரிக்சாக்களின் கடைசி வடிவமாக இருக்கின்றன.

கல்கத்தா பீகார் போன்ற மாநிலஙகளில் 18000க்கும் மேற்பட்ட ரிக்சாக்கள் ஓடுகின்றன.
................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

நா வயசு முறுக்குல இருக்கப்ப ரிக்சா ஓட்ட ஆரம்புச்சே...
அன்னைக்கெல்லாம் இம்புட்டு கார் பஸ்செல்லாம் இல்லப்பா...

இன்னைக்கி...
இந்த ரோட்ல பாருங்க...
எத்தினி ஆட்டா, பைக்கு ஒதுங்க முடியில...

அப்ப எல்லாம் எங்களுக்குப் போட்டியா
குதிர வண்டிக்காரவுக இருப்பாக...
இன்னைக்கு அவுகயெல்லாம் என்னன்னமோ தொழில் பண்ணிட்டுப் போயிட்டாக...

இந்த ரிக்சாவத் தவற எனக்கு வேற தொழிலு செஞ்சு பழக்கமில்ல...
அதனாலதான இத விடமுடில...

முன்னமாதி பெருசா எங்குட்டும் சுத்தரதில்ல...
இந்தத் தெரு மொக்குலே தான் நின்னுக்குறது...
சவாரி வந்தமிட்டக்கு ஓட்டுவேப்பா...
பழக்கமானவுக... எப்பவும் வர்றவுக... வந்தாலே
அன்னைக்குப் பொழப்பு ஓடியிரும்...

முன்னமாதியெல்லாம் தூரம் தொலைக்கு
சவாரிக்குப் போறதில்ல...
கொஞ்சம் ஒடம்புக்கு ஒருமாதிரி இருந்தா
பேசாமா வீட்ல இருந்துக்குவே...

இரத்தம் சுண்டிப்போச்சுல...
பெடல மிதிக்க முடியல..
கால் நடுக்கம் கொடுக்குதுப்பா...

இந்த ரிக்சா தொழில்ல நாலு காசு பார்க்கனும்னா,
சந்த மார்க்கட்டுனு சுத்தியடிச்சா சம்பாரிச்சுப் புடலாம்...

ஒரு நா பொழுதுக்கு 1000 - த்திலிருந்து  -1500 பார்க்குறவனுக இருகானுக...

மாங்கு மாங்குனு மிதிச்சு ஓட்ன காசுல நல்ல குடிக்கிறது... அன்னக்கி சம்பாரிச்ச காச அன்னக்கே செலவுபண்ணிட்டு
ரிக்சா மிதிப்பானுக...

நானும் குடிப்பேன்...
ஒடம்பு இப்ப ஒத்துக்கிறது இல்ல...
அளவா வச்சுக்கிறது...
........................................................................................................................................................................................................

எ பெரு ரிக்சாங்க...
ஏதாவது ஒரு வெள்ளைக்கார பயதா எனக்கு பெரு வச்சுருக்கனும்னு நெனக்கிறேன்...

1940 தாம் வருசத்துல கை வண்டிக்குப் பதிலா எனைய ஓடவிட்டாங்க...

அன்னைக்கு தேதிக்கு எனக்குதான் நல்ல மவுசு...

மோட்டாரு வாகனத்துல போற அளவுக்கு பெரிய மனிசங்க, அப்ப ஊர் நாட்டுல ரொம்பக் கொறவுதான்...

எத்தன மைலு தூரமுனாலும் நடந்தே போயிருவாக...
கத பேசிக்கிட்டே கெளம்புனாகனா போற தூரம் தெரியாதும்பாக...

தலை சொமையா கொண்டு போக முடியாத மூட்ட முடிச்ச ஏ மேல ஏத்தி கொண்டு போவாக...
நடக்க முடியாதவுக... ஒடம்பு சவுரியமில்லாதவுக ஏமேல வந்து ஏறிக்குவாக...

படிச்சவுக... பணகாசு இருக்கவுக, அறையண - ஒரண கொடுத்து சவாரி செய்வாக...
ஆனா இன்னைக்கு எ நெலமா மாறி போனது எல்லாத்துக்கும் தெரிஞ்ச ஒன்னுதான்...

பக்கத்துத் தெருவுக்குப் போகனும்னா கூட பைக்க எடுத்துக்கிட்டு பறக்குறாக...
ரோட்ட நெறைச்சுக்கிட்டு வண்டிவாசிக எறும்பு புத்த இடிச்ச மாதி போகுதுக...

ஏதோ வடநாட்டுக்காரவுக... தொழில் பண்ணுறத்துக்கு வரும்போதும்,  வெளிநாட்டுக்காரவுக... ஊர் சுத்த வரும் போதும் அதிகமா சவாரி செய்றது ஏ மேலேயும் இருக்கும்..

பெட்ரோல் டீசல் வெல ஏறிப்போனதால நல்லாதப் போச்சு, நேரம் ஆனாலும் பரவாயில்லனு வயசான பெரிய மனுசங்க எங்கிட்ட வர்றாங்க...
மார்க்கட்டுக்குப் போற வீட்டு அம்மாவுக சவுரியமா இருக்குமுனு எனைய பயன்படுத்துறாக...

பிஞ்சுக் கொழந்தைகள பள்ளிக்கொடத்துக்குக் கொண்டு போறப்ப கொழந்தைகளோட கத மொழியும்... பாட்டுச் சத்தத்தையும் கேப்பதுல ஒரு சொகம் இருக்குதுங்க...
.....................................................................................................................................................................................................

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகத்தை மாற்றிப்போட்ட அச்சுக்கலையும், நீராவி யந்திரமும் போக்குவரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது.

மின்னல் வேகத்தில், வானத்தையும் தாண்டிப் போக நினைக்கும் இந்த விஞ்ஞானப் பயணத்தில்...
இந்த ரிக்சாக்களின் நிலை எப்படி இருக்கிறது…?

மொட்டார் வாகனங்களின் புகை சுகாதார மாசுபாடாக இருந்தாலும் இந்த நெருக்கடியான உலகத்தில் பயணிப்பதற்கு மோட்டார் வாகனங்களே சிறந்ததாக இருக்கின்றது.

ரிக்சாக்களின் மாற்று வடிவங்கள் மோட்டார் வசதியோடு வந்தாலும், அதைக் கூட வாங்க முடியாமல் வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு மட்டும் அழுக்கேறிய ஆடையோடு ரிக்சா மிதிப்பவர்களின் நிலையை என்ன மாற்ற முடியாதா....!

இந்த ரிக்சாக்களின் கதையும், வலியும் அரசுக்கென்ன தெரியாதா....!

எத்தனை இலவசத் திட்டங்களும்...
ஆதரவற்றவருக்கு வழங்கும் பணமும்...
வரவேற்கத்தக்கதுதான்.

அதோடு, ரிகசாக்காரங்களுக்கும் வாழ்வாதாரம் வழங்க வேண்டும்.


தையலும் தையல்காரர்களும்...


இன்றைய உலகத்தில் ஆடைகளின் வடிவங்களெல்லாம் பாரம்பரியங்களைக் கடந்து சென்று விட்டது.

அலங்கோலமாய் களைத்துப்போட்ட வடிவங்களே நடைமுறையில் ஆடைகளின் கலாச்சாரமாக இருக்கின்றன.

பெரும்பாலும், ஆண்களை விட பெண்களே, கவர்ச்சியாக உடையணிந்து வருதில் கூச்சப்படுவதில்லை.

சட்டை மற்றும் பேன்ட் மடிப்புகளில் பல நூறு டிசையின்கள் ஜவளிக்கடைகளில் குவிந்து கிடக்கின்றன.

ஆடைகளை இறுக்கமாகவும், இல்லையென்றால் மிகவும் நீளமாகவும் தைத்து அணிந்து கொள்கிறார்கள்.

எம்பிராய்டிங் என்ற முறையில் பெண்களுக்குப் பூக்களிலும் ஆண்களுக்கு கட்டஙகளிலும் உடைகள் தயார்செய்கிறார்கள்.

பனியன் கம்பெனிகளில் நடிகர்களையும் அல்லது கிரிக்கட் வீரர்களையும் பயங்கரமான படங்களாக அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள்.

திரைப்படத்துறையில் ஆடைகளுக்கான டிசைனர்கள் பிரமாதமாகச் செயல்படுகிறார்கள்.

இந்த சினிமா டிசைன்ரகளே இளைஞகர்கள் எந்த வடிவத்தால் ஆடைகளை உடுத்தலாம் என்பதை முடிவு செய்கிறார்கள்.

அழகிப் போட்டிகளி்ல், ஆடைகளில் வடிவங்கள் முக்கியமானதாக இருக்கின்றன.

வேலை வாய்ப்புகளில் இருக்கும் போது உடுத்தும் ஆடைகளில் நிறங்களும், வடிவங்களும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கின்றன.


ஆசிரியராக வேலை பார்ப்பவர்கள் விரசம் இல்லாத விதத்தில் ஆடைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பெரும்பாலும் ஒரே நேர்கோட்டில் நிர்ணையித்த வடிவங்களைத் துணிக்கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

இளைஞர்களை மையப்படுத்தி தயாரிக்கப்ட்ட ஜீன்ஸ் ஆடைகள் இன்றைய காலக் கட்டத்தில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை எல்லாதரப்புக்கும் பொதுவானதாக மாறிவிட்டன.

இந்த ஆடை டிசைன்களுக்கெல்லாம் பின்னால் இருக்கும் சமூகம் பல தரப்பட்ட நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

பெரும் முதலாளிகலாகவும், மிகவும் சிறிய குடிசைத் தொழில்களாகவும் இவற்றுக்கிடையில் இடைத்தரகர்களாகவும் இந்த மின்னணு உலக்த்தில் வாழ்க்கையைத் தொடர்ந்து பயணிக்கிறார்கள்.

பஞ்சிலிருந்து நூலாக நெய்யப்பட்ட தரியாக பெரும் பண்டல்களாக கொண்டுவரப்பட்ட துணியை, ஆடை வடிவமைப்பு வல்லுநர்கள் புதிய டிசைன்களில் வரைபடம் வரைகிறார்கள்.

ஒரே இடத்தில் பல பிரிவுகளில் குழுக்களாக இருந்து கொண்டு சில மணிநேரத்தில் நூற்றுக்கணக்கில் ஆடைகளை விதவிதமாகத் தைத்து அனுப்புகிறார்கள்.

தையல் முறைகளில் காஜா பட்டன் வைக்கும் தனித்த தொழிலமைப்பை மட்டும் வைத்து இயங்கும் கடைகள் ஏராளம் இருக்கின்றன.
மின்சாரத்தின் மூலம் அதிநவீன அயணிங் யந்திரங்கள் தினித்துறையாகச் செய்ல்படுகிறது.

நூற்றுக்கணக்கில் மட்டும் ஆடைகளைத் தயார் செய்யும் கார்மென்ஸ்களில் தினக்கூலிகளாக அயணிங் வேலையை நம்பி வாழ்க்கை நடத்துகிறார்கள்.

வீட்டில் இருந்து கொண்டே உருப்படிகளை வாங்கி எடுத்து பெண்கள் ஆடைகளைத் தைத்துக் கொடுக்கிறார்கள்.

திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் துணிக்கடைகளிலும் தையல்கடைகளிலும் மிகவும் நெருக்கடியாக இருக்கும்.

தையல் கடைகளுக்கு ஆட்கள் சரியாக அமையாமல் பெரும் ஏற்படுவது மிகச் சாதராணமாக இருக்கும்.

தையல் கடையில் தைப்பதற்காக அதிகமாக துணிகள் வரும் போதெல்லாம் தையல்காரர்கள் பெரும் குழப்பம் அடைகிறார்கள்.

இந்த அவர காலங்களைச் சமாளிக்க முடியாமல் தையல் தொழிலை விட்டு விடுகிறார்கள்.

எப்பேர்பட்ட டிசைன் வந்தாலும் யந்திரத்தேடு யந்திரமாக இந்தத் தையல்காரர்கள் செயல்படுகிறார்கள்.

தைக்கும் துணிகளை எங்கோ ஓர் தேசத்தில் யார் யாரோ அணியும் கொள்கிறார்கள்.

ஆனால் தைக்கும் துணிகளுக்கும் தையல்காரர்கள் உடுத்தும் ஆடைகளுக்கும் சம்மந்தம் இருப்பதில்லை. அவர்கள் மிகச் சாதாரமாண ஆடைகளையே அணிகிறார்கள்.

ஆடைகள் உடல் மறைக்கும் பங்கில் கவன ஈர்ப்பிலும் சரிபாதியாக இருக்கின்றன.

இதையே ஆள் பாதி ஆடை பாதி சொன்னால் அது மிக்க பொருத்தமானதாக இருக்கும்.


ஸ்டெம் செல்கள்...


ஸ்டெம் செல்கள் உலகில் உள்ள அனைத்து உயிரிகளுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்றன. ஸ்டெம் செல் இல்லாமல் எந்த ஒரு உயிரும் இதுவரை வாழ்ந்ததில்லை. 

அதாவது, உடலின் எந்த ஒரு செல், தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, உடலில் இருக்கும் 200 - க்கும் மேற்பட்ட செல்களை தேவையான தருணத்தில் உருமாற்றிக் கொள்கிறதோ அந்த செல்லை, ஸ்டெம் செல் என்கிறது அறிவியல்.

நம் மனித உடலில் சுமார் 1 லட்சம் கோடி செல்கள் இருந்தாலும், அதற்கெல்லாம் ஸ்டெம் செல்களே அடிப்படையாக இருக்கின்றன. 
 
நம் உடலில் உள்ள எந்த ஒரு செல்லுக்கும் இல்லாத சிறப்பு ஸ்டெம் செல்களுக்கு மட்டுமே உண்டு.

ஸ்டெம் செல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வதோடு, வேறொரு பண்புடைய மற்றொரு செல்லையும் அது உருவாக்கும். மேலும், உடலில் உள்ள எல்லா வகையான செல்களாகவும் உருமாறிக் கொள்ளும்.

ஃபீடல் ஸ்டெம் செல், அடல்டு ஸ்டெம் செல், ஆம்னியாட்டில் ஸ்டெம் செல், இன்டியூஸ்டு ப்ளூரிபொடென்ட் ஸ்டெம் செல் என பல்வேறு வகையான ஸ்டெம் செல்கள் நம் உடலில் இருக்கின்றன.

மனிதனின் விந்தனுவிலும், கருமுட்டையிலும் இருப்பது தான் முதல் ஸ்டெம் செல்கள். இவைகள் கரு உருவாவதற்குப் பயன்படுகிறன. இரண்டும் இணைத்த பிறகு 4 அல்லது 5 தினங்களில் உருவெடுப்பது தான் embryonic stem cell கள். இது மனிதனின் முழு செல்களையும் உருவாக்க கூடிய ஸெடெம் செல்களாக இயங்குகின்றன.

மேலும் குழந்தை பிறந்த பின், தொப்புள் கொடியில் adult stem cellகள் வளர்கின்றன.

மனிதனின் முழு உடலையும் உருவாக்க கூடிய செல்கள் இல்லையெனிலும் அதிகப்படியான உறுப்புகளை உருவாக்க கூடிய செல்லாக மாறும் சக்தி adult stem cellகளுக்கு வாய்க்கப்ட்டிருக்கிறது.
 
வளர்ந்த மனிதனின் முதுகுத் தண்டில் அதிகப்படியான செல்களை உருவாக்க கூடிய stem cells உள்ளன. இது மட்டுமல்லாமல் உடம்பின் பல பாகங்களில் இந்த stem cell கள் இருக்கும்.

 
பொதுவாக ஸ்டெம் செல்கள், சிசுகளில் இருந்தும், உடலின் திசுக்களிலிருந்தும் எடுக்கப்படுகின்றன..

மேலும் இது மட்டும் இல்லாமல் செயற்கையான ஸ்டெம் செல்களும் உருவாக்கப்படுகின்றன. அவை, தூண்டப்பட்ட ஸ்டெம் செல்களாகும்.

நமது உடலில் தோல் ரோமத்தில் உள்ள செல்களை, மரபணுவியல் தொழில் நுட்பத்தின் மூலம் ஸ்டெம் செல்லாக மாற்றுகிறார்கள்.  இதுவே தூண்டப்பட்ட செல்களாகும்.

ஸ்டெம் செல்களின் ஆய்வுகள், வெறும் ஆய்வாக மட்டுமே இல்லாமல், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு சில உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து மனித இனத்தை காக்க முடியும் என்பதை 1975 ஆம் ஆண்டு மருத்துவர்கள் நிரூபித்தார்கள்.  

1970 களில் உடலில் ஏற்படும் எல்லாவகையான புற்று நோய்களுமே, சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும் வளர்ந்துவிடும் தன்மையில் இருந்து வந்தன.

புற்று நோயில் உள்ள ஒரு குறிப்பிட்ட வகை செல்கள், ஸ்டெம் செல்களின் பிரத்தியேக குணங்களைக் கொண்டிருந்தது தான், இதற்கான அடிப்படைக் காரணம் என்பதைக் கண்டறிந்தார்கள்.

அதனால், சிகிச்சையாக வேறு ஒருவரின் எலும்பு மஞ்சையிலிருந்து, ஸ்டெம் செல்கள எடுத்து ஒரு நோயாளிக்கு செலுத்தும் போது,  அங்கு புதிய நோய் எதிர்ப்பு சக்திஏற்படுகிறது. 

எலும்பு மஞ்சையால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, நோயாளியின் புற்றுநோயை எதிர்த்து போராடி அழிக்கும் திறன் கொண்டதுஎன்பதை அறிஞர்கள் கண்டறிந்தார்கள்.
  
இதை 1975-ல், ரத்தப் புற்றுநோயாளி ஸ்டாலின் என்பவருக்கு உலகின் முதல் எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை செய்தார்கள்.

இச்சிகிச்சையில், அவர் சகோதரரின் எலும்பு மஜ்ஜையையும்கதிர்வீச்சு  மற்றும் மருந்து சிகிச்சையையும், சேர்த்து வெற்றிகரமாக செய்து முடித்ததார்கள். இதுவே உலகத்தின் முதல் stem cells  சிகிச்சை என்கிறார்கள்.

தூண்டப்பட்ட ஸெடம் செல்கள் உருவாக்கும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, தோலில் இருக்கும் செல்களில் ரத்த அணுக்களை உருவாக்க முடியும் என்பதை கனாடா நாட்டு ஸ்டெம் செல் ஆய்வாளர் மிக் பாட்டியா நிரூபித்துள்ளார்.

தோல் செல்களிலிருந்து ரத்தத்தை உருவாக்கியிருக்கும் இந்தக் குழு, இனி அதே தோல் செல்களில் இருந்து உடலின் வேறுபகுதிகளின் செல்கள் பலவற்றையும் உரிவாக்க முடியுமா என்று ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

மூளையைப் பாதிக்கும் டிமென்ஷியா போன்ற பல்வேறு மூளைக் கோளாருகள் மூளையின் செல்களை அழித்து விடுவதால், மூளை செயலிழந்து விடுகிறது. இந்தப் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தோல் செல்களிலிருந்து முளைசெல்களை உருவாக்க முடிந்தால் அவற்றை மூளைக்குள் செலுத்தி மூளையின் செயல்பாட்டை சீரமைத்து விட முடியும் என சொல்கிறார்கள்.  

இதனால், ஸ்டெம் செல்கள் மருத்துவத்துறைக்கு கிடைத்துள்ள ஒரு `அட்சயப் பாத்திரம்அல்லது `அமுதசுரபிஎன்றே சொல்லலாம்.

ஏனென்றால் மருத்துவத்துறை இதுநாள் வரையில் சந்தித்து வரும் எண்ணற்ற சவால்களை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டே வருகின்றது இந்த ஸ்டெம் செல்களில் கண்டுபிடிப்புகள்.

பால் பற்கள், மற்றும் கடைவாய் பற்களைப் பிடுங்க நேரும்போது அவற்றிலிருந்து ஸ்டெம் செல்களை உருவாக்கும் முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. அதில் அண்மையில் ஜப்பானிய ஆய்வாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

அதன்மூலம்ஸ்டெம் செல் வங்கிகள் உருவாக்கப்பட்டு, அவை ஜப்பானியர்களுக்கு ஒத்துப்போகிறதா என்றும் ஆராயந்தார்கள். ஏறக்குறைய 20 சதவீத ஜப்பானியர்களின் மரபியலில் இந்த ஸ்டெம் செல்கள் ஒத்துப்போவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

 யேல் பல்கலைகழக ஆய்வாளர்கள் முடி வளர தூண்டும் ஸ்டெம் செல்களைக் அணாமையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆதார செல் தோலின் கொழுப்பு அடுக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

இதன்மூலம், முடியின் வேர்ப் பகுதியில் உள்ள ஸ்டெம் செல்களைத் தூண்டி வழுக்கை தலை உள்ளவர்களுக்கு வேர்க்கால் பகுதியில் உள்ள முடியை சீக்கிரமாக வளரச் செய்தார்கள். 

இந்த வரிசையில் மேலும் ஒரு மைல்கல்லாக, உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஸ்டெம் செல்களில் இருந்து, இயற்கையான இதயத்தைப் போலவே துடிக்கும் திறனுள்ள புதிய இதய தசைகளை உருவாக்கினார்கள்.

வருடா வருடம் லட்சக் கணக்கான உயிர்களை பலிகொண்டு வரும் இதய நோய்களுக்கு ஸ்டெம் செல்கள் மூலம் தீர்வு உண்டு என்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் நிரூப்பித்தார்கள்.
  
இந்த பிரத்தியேகமான இதய தசை உயிரணுக்களின் துடிக்கும் வேகம், ஓய்வாக உள்ள மனிதர்களின் இதய துடிப்பின் வேகத்தை ஒத்து இருக்கிறது.

அதாவது, ஒரு நிமிடத்துக்கு 60 துடிப்புகளாக இதயம் இயக்குவதாகும்.
 இதயத்தின் ரத்தத்தை வெளியேற்றும் திறனைப் பாதிக்கும் குறைபாடான `அரித்மியாநோயிற்கு தீர்வு கிடைக்கவே இந்த ஸ்டெம் செல் ஆய்வு, மேற்கொள்ளபட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்தும் ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்பட்டு, அதற்கென உள்ள வங்கிகளில் 0 டிகிரிக்கும் குறைவான தட்ப வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கிறார்கள்.

சம்பந்தப்பட்ட நபருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படும்போது, இந்த ஸ்டெம்செல்கள் மூலம் நோயைக் குணப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களையும் ஸ்டெம்செல்கள் குணப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஸ்டெம்செல்களை இதய நோயாளியின் உடலில் செலுத்தப்பட்டு ஒரே நாளில், ரத்தக்குழாயில் உள்ள கோளாறுகளைக் குணப்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெம் செல்களை வைத்து, எலும்பு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளுக்கும் தற்போது செயற்கையாக தயாரிக்கப்பட்ட எலும்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்க்கான பரிசோதனையில் இஸ்ரேல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு புதிய செல்களை அகற்றி விட்டு புதிய செல்களை மனித உடலில் உருவாக்கும் முயற்சியே ஸ்செம் செல் ஆராய்ச்சியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இனி மனித உதிரி பாகங்கள் உண்டாக்க எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. தன் கையே தனக்குதவி என்று நம்மை நாமே மருத்துவர்கள் உதவி கொண்டு காப்பாற்றிக் கொள்ள முடியும். 

ஸ்டெம் செல்கள் வழியாக அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணமுடியும் என்று திட்டவட்டமான அறிக்கை இன்னும் வரவில்லை என்றாலும, இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் நிலமை மாறும்.

மருத்துவத்தில் புதுபுது கண்டுபிடிப்புகள் வரும் போதெல்லாம் புதுபுது நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன.

உலகத்தில் கடைசி மனிதன் இருக்கும் வரை, கண்டுபிடிப்புகள் தொடந்து கொண்டே இருக்கும்.

அதோடு, ஸ்டெம் செல்கள் உலக மருத்துவத்தில் மாபெரும் மாற்றமாக இருக்கும்.

மெட்ரோ ரயில்...



கண்டுபிடிப்புகளின் யுகப்புரட்சி தான் இந்த யுகம்.
இன்றைய மனிதர்களின் தேடுதல் முழுக்க முழுக்க யந்திரமாக்கப்பட்டு விட்டது.
அந்த வகையில், அச்சு யந்திரமும், போக்குவரத்தும் உலகத்தில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறன.
சமீப காலத்தில் தான், அச்சுக் கலைக் கண்காட்சியின் பிரமாண்டத்தை ஜெர்மன் நாட்டில் ட்ரூபா என்ற இடத்தில் நடத்திக் காட்டினார்கள்.
போக்குவரத்தில், பால் வெளி அண்டம் வரை தொட்டு விட்டார்கள்.
பூமி தாண்டிப் பறக்கும் நாம், மண்ணைக் குடைந்து குகை வழிப்பாதைகள் அமைத்து, புகைவண்டிப் பயணத்தில் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்தச் சுரங்க வழிப்பாதைகளை நமது தமிழ் மன்னர்கள் ரகசிய வழித் தடங்களுக்காகப் பயன்படுத்தி யிருக்கிறார்கள்.
குகைவழிப் பயணத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம்.....
 1670 களில்... போக்குவரத்தில் மௌவுண் பேட்டன் என்ற மாமனிதனால் சென்னையின் கோட்டையிலிருந்து பரங்கி மலை வரைக்கும் தார்ச் சாலைகள் போடப்பட்டது.
 1856 களில்... ராயபுரத்துக்கும் ஆர்க்காட்டுக்கும் இடையில் ரயில் பயணங்கள் தொடங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இந்த மக்கள் தொகை பெருக்கத்தைச் சமாளிக்க சென்னையிலும் பூமியைக் குடைந்து காலுக்கடியில் ஓடப்போகிறது, மெடரோ ரயில் பயணம்.
மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்தும் சென்னையில் மெட்ரோ ரயில் பயணத்தைக் கொண்டு வர, ஒப்பந்தகள் முடிந்து செயலில் இறங்கி விட்டார்கள்.
16 நகராட்சிகள், 20 நகரப்பஞ்சாயத்துகள், 214 கிராமங்கள் என்று 1,189 சதுர கிலோ மீட்டர் சுற்றவு கொண்ட சென்னையில், 723 வழித்தடங்களில் 3500 பேருந்துகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
இதோடு 450 ரயில்கள் சென்னையில் இயங்கினாலும் போக்குவரத்தின் நெருக்கடியில் எறும்பு புற்றை இடித்தது போல மக்கள் பொங்கி வழிகிறார்கள்.
கார்களும், டூவிலர்களும் இருமிக்கொண்டே சாலை நிறைக்கும் இந்தக் காலத்தில், ச்ஷேர் ஆட்டேக்களே பெரும்பாலும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியப் பங்கு வகிக்கிறன.
தரைக்கு அடியிலும், ராசசத் தூண்கள் தாங்கும் பாலங்களிலும் மெட்ரோல் ரயில் அமைக்க சென்னையில் பெரும் வேலைப்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறதன.
தரையைக் குடைந்து ரயில் பாதை அமைக்க மண்ணியல் நிபுணர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
பாறைகளும், சேற்றுப் பகுதிகளும் ஆராய்ந்து தகுந்த முறையில் வழித் தடம் அமைத்துக் கொண்டியிருக்கிறார்கள்.
டனல் போரிங் மிஷின் என்ற மிகப் பெரிய யந்திரத்தில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மண்ணைக் குடைய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
24 மணி நேரத்தில் 8 லிருந்து 10 மீட்டர் வரை டனல் போரிங் மிஷினால் சுரங்கப் பாதை அமைக்கிறார்கள்.
டனல் மிஷினின் முகப்பு எடை 170 டன் என்று சொல்கிறார்கள்.
கடினமான பாறைகளையும் அறுத்து எடுக்கும் வகையில், புள்ளி புள்ளியாகத் தெரியும் 60 பிளேடுகள், மிஷினின் வெவ்வேறு திசையில் பொருத்தப்பட்டுள்ளன. 
ஜெனரேட்டர், கம்பியூட்டர் அறை, கேண்டின், ஓய்வு அறை என்று 100 பேர் வேளை செய்யும் ஒரு அலுவலகம் போல டனல் மிஷின் இருக்கிறது.
மணல், பாறைத் துகள்கள், சகதி போன்றவைகள் கன்வேயர் பெல்ட் மூலம் வெளியேற்றப்படுகிறன.
ஒரு கி.மீட்டருக்கு மேல் தோண்டும் போது குழாய்களின் வழி ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது.
நூற்றுக்கும் மேல் வேளை செய்யும் இடத்தில், ஆட்களைக் கொண்டு செல்லவும், உணவு இடைவேளைக்கு மாற்றவும் தற்காலிக மினி ரயில் ஒன்று அஙகு இயங்கும்.
மோனோ ரயிலுக்கு பராமரிப்புச் செலவு அதிகமாக இருப்பதால் மெட்ரோ ரயில் உகந்ததாக சொல்கிறார்கள்.
மெட்ரோ ரயில் பெட்டிகள் பிரேசில் நாட்டிலிருந்து கொண்டு வந்து இயக்கப்படுவதாக, இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஒரு மெட்ரோ ரயிலுக்கு 4 பெட்டிகள் பொருத்தப்பட்டு ஒரே நேரத்தில் 1200 பயணிகள் பயணிக்க முடியும் என்கிறார்கள்.
மெட்ரோ ரயிலின் அதிக பட்ச வேகம் 80 கி.மீட்டராகவும், சரசரி வேகம் 35 கி.மீட்டராகவும் இருக்கிறது.
நிறுத்தத்தில் 5 நிமிட இடைவெளிக்குப் பிறகு, அடுத்தடுத்து வருவதாக இயக்கப்படுகிறது, இந்த மெட்ரோல் ரயில்.
டிக்கட் வாங்க தானியங்கி வசதியும், செல் மற்றும் லேப்டாப் சார்ஜ் ஏற்றும் வசதியும் இந்த மெட்ரோ ரயிலில் இணைக்கப்பட இருக்கிறது.
மெட்ரோல் ரயில் பற்றிய படிப்புகள் சென்னைலும் இப்போது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறன.
சிவில். மெக்கானிக்கல், ஆர்க்கிடெக்சர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ரானிக்ஸ், எலக்ரானிக்கஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் போன்ற பாடத்திட்டங்களில், 70 / சதவிதம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.
சென்னை ஐ.ஐ.டி.யில் மெட்ரோ ரயில் டெக்னாலஜி அண்ட் மேனேஜ் மெண்ட் என்ற படிப்புக்கு 13 மாணவர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப் படுவதாக சொல்கிறார்கள்.
மெட்ரோ ரயில் படிப்புக்காக ஒவ்வொரு மாதமும் 20000 ரூபாய் மெட்ரோல் ரயில் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் அமைக்க தோண்டும் இடத்தில் பாரம்பரியச் சின்னங்களும், புரதான நினைவிடங்களும் இருப்பதால் அது குறித்த அமைப்புகள் மெட்ரோ ரயிலுக்கு தடை விதிக்கின்றன.
மெட்ரோல் ரயிலின் முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமைக்குறியவர் பிரியங்கா என்பவர்தான்.
உலகத்திலே மிக நீளமான மெட்ரோ ரயிலை சீனாவின் தலைநகரான பெய்ஜிகில் அமைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
தரைக்கு மேலே 19 பாதைகள் ஏற்படுத்தி 516 கி. மீட்டர் நீளத்தில் மெட்ரோ ரயில் அமைக்கப் போவதாக இருக்கிறது.

பிச்சைக்காரர்கள்


யாரிடமும் எதையும் எதிர்பார்க்காத வரை நமக்குத் தோல்வியில்லை.

ஆனால், நடைமுறையில் யாரையாவது - எதையாவது சார்ந்து தானே வாழக்கையை நகர்த்த வேண்டியிருக்கிறது.

பணம் பதவி காதல் கண்ணீர் - பழங்கதை என்று கடந்து போன வாழ்க்கையிலும் கடக்க முடியாமல் அந்தந்த சூழலுக்குத் தக்கவாறு ஏதோ ஒரு எதிர்பார்பிலே கடைசி நிமிடம் வரை காத்துக் கிடக்கிறோம்.

பிச்சையெடுப்பது என்பது, பணமாகவும் - உணவாகவும் பொருளாகவும் பதவியாகவும் இருக்கும் கால ஓட்டத்தில், இன்னொரு மனிதனினை நம்பி பிழைப்பு நடத்தும் வாழ்க்கையை நாம் உணர முடியும். 

கோடியிலும் லட்சத்திலும் புரண்டு கொண்டு இருப்பவர்கள் மறைமுகமாக பிச்சையெடுக்கிறார்கள்.

அடுத்த நேர சோற்றுக்கே வக்கில்லாதவர்கள் தெருவில் வந்து திறந்தவெளியில் கையேந்தி விடுகிறார்கள்.

ஊனமுற்றவர்கள் மாற்றுத் திறனாளிகளாக உலகத்தைக் கலக்கிய எத்தனையோ சாகசஙகள் இருக்கின்றன.

ஆனால், பெரும்பாலும் ஊனத்தை மட்டுமே காட்டி குரல் தாழ்த்தும் பிச்சைக்கார்களை எந்தப் பேருந்து நிலையத்திலும் பார்க்கலாம்.

கலைக் கூத்தாடிகளின் வடிவத்தில் சாட்டையை முதுகில் மாறி மாறி அடித்துக் கொண்டும் பாட்டுப் பாடி, உடுக்கடித்துக் கொண்டும் பிச்சையெடுக்கிறார்கள்.

கையில் இரும்பு கம்பியைச் சுற்றிக் கொண்டு ரத்தத்தைப் பிழிந்து தன் குழந்தையின் வயிற்றில் சொட்டுச் சொட்டாய் வடியவிட்டு எல்லோரையும் அதைப் பார்க்க வைத்தும் பிச்சையெடுக்கிறார்கள்.

பூகம்பம்பத்தால் பாதிக்கப்பட்ட வடமாநிலத்து மக்கள் தங்கள் சோகத்தைத துண்டுச் சீட்டாக தமிழில் எழுதி வைத்துக் கொண்டு பிச்சையெடுக்கிறார்கள்.

குழந்தையைச் சுமந்து கொண்டு பரிதாபத்தோடு பெண்கள் கெஞ்சுகிறார்கள்.

அழுக்குக் குழந்தைகள் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டே காலில் விழுந்து கட்டிக்கொண்டு நம் ஒதுங்கினாலும் விடாமல் விரட்டுகிறார்கள்.

பணத்தையும் பெட்டியையும் தொலைத்து விட்டதாகவும் திரும்ப ஊருக்குப் போகக் கூட காசு இல்லையென்று இளைய வயது கொண்டவர்கள் 50 ரூபாயில் இருந்து 100, 200 வரை கேட்டு வாங்கி, பக்கத்துக் கடையில் சிகரட் குடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பேருந்து நிறுத்தத்திலோ அல்லது பூங்காக்களிலோ காதலரிடம் பிடிவாதமாக பிச்சை கேட்டு எப்டியும் காசு வாங்கிவிடுவார்கள்.

தெருக்களில் தினமும் வந்து பழக்கமானவர்களாக வீடு வீடாகச் சென்று உணவு வாங்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

திருநங்கைகள் என்றழைக்கப்படும் மூன்றாம் பாலின மனிதர்கள் பல இடங்களில் தனியுரிமை கேட்டுப் போராடி வருகிறார்கள்.

பல சமூக முற்போக்கான செயல்பாடுகளையும் நிகழ்த்துக் கலைகளையும் நடத்துகிறார்கள்.

அதே நேரத்தில் திருநங்கைகளில் சிலர், பெரும் அமைப்புகளிலும் ஹோட்டல் மற்றும் நகைக் கடைகளிலும், அடாவடியாக பிச்சை கேட்டு மிரட்டவும் செய்கிறார்கள். பிச்சை கேட்டு தராதவர்களுக்கு சாபமிடுகிறார்கள்.

*அழுக்குத் துணியைக் கிழித்துக் கட்டிக் கொண்டு பல நாட்களாக வெட்படாமல் சிக்கு பிடித்த தலை முடியோடும், சவரம் செய்யப்படாத தாடியோடும் பைத்தியக்காரர்கள் பஸ் டாப்பின் கம்பத்தில் சாய்ந்து கொண்டு பொல்லாத வார்த்தைகளில் புலம்பிக் கொண்டு இருப்பார்கள்.

*இந்தப் பைத்தியக்கார்கள் டீக்கடைகயின் முன்னால் சென்று நின்றாலே கையில் டீ ஆற்றிக் கொடுப்பதை நாம் பார்க்க முடியும்.

வயதானவர்கள் ஊனமுற்றவர்கள் பார்வையற்றவர்கள் சாலையோரங்களில் சுறுண்டு படுத்திருக்கும் போது சில அறக்கட்டளைகளும், சுய உதவிக் குழுக்களும் உணவுப் பொட்டலங்களை அவர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தின், கோயமுத்தூர் மாவட்டத்தில் ஏற்படுத்தப்ட்ட பிச்சைக்காரர்களின் மறுவாழ்வு சங்கம் சில முக்கிய முடிவுகளை எடுத்தது.


இச்சஙகத்தின் மூலமாக, பிச்சைக்காரர்கள் மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு முடி வெட்டி சவரம் செய்யப்பட்டது. சோப்பு ஷாம்பூ அளிக்கப்பட்டு குளிக்க செய்து புத்தாடைகள் அளிக்கப்பட்டது. சுட சுட உணவு அளிக்கப்பட்டு, மன நல கவுன்சல்லிங் அளிக்கப்பட்டது.

அதன்படி ஒவ்வொருவருக்கும் பிச்சை எடுக்காமல் உழைத்து வாழ வழி செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டன.

அரசு நாடளுமன்றங்களின் சட்டத்திலும் திட்டத்திலும் பிச்சைக்காரர்களுக்கென்று ஏதாவது வகுக்க வேண்டும்.

உழைக்கத் தெம்பு இருந்தும் பிச்சையெடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.

மனநோயாளிக்கு எந்தக் காப்பகம் எங்கிருக்கிறதென்று எப்படித் தெரியும்…?

மருத்துவ மனைகளுக்கு தெருப்புழுதியில் மணல் அள்ளித் திண்ணும் பைத்தியக்காரர்கள் தங்களாக எப்படி போக முடியும்....?

அதிகாரத்தில் இருப்பவர்கள் பணத்தில் மிதப்பவர்கள் மனிதர்களில் இப்படி வாழ்வின் கடை நிலையில் இருப்பவர்களுக்கு உதவினால் நாளைய சமூகம் நலமாக இருக்கும்.









பர்மா பஜார்


சென்னை நகரின் கிழக்கு கடற்கரையில்... உலக பொருட்கள் அடங்கிய நூற்றுக் கணக்கான கடைகளின் தொகுப்புதான் பர்மா பஜார்.

சில்லரை வருமானமாகவும், மொத்த வருமானமாகவும் விற்பனை செய்யும் இந்தக் கடைகள் 3 க்கு 3 அடியாக மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறன.

பர்மா பஜார் அருகில் உயர்நீதிமன்றம், பூக்கடை, பீச் ஸ்டேஷன், குறளகம் போன்ற பிரபல இடங்கள் இருக்கின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையம் உருவாக்கபடுவதற்கு முன்பு, பாரிஸ்தான் சென்னையின்  பிரதான பேருந்து நிலையமாக  இருந்தது.

இந்த பஜாரில் கிடைக்காத பொருளே இருக்காது என்பதைச்
சென்னைவாசிகள் அறிந்திருப்பார்கள்.
    

1960 ஆம் ஆண்டு வாக்கில் பர்மாவிலிருந்து திரும்பிய தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவேண்டி அன்றைய அரசால் அவர்களுக்காக  ஒதுக்கபட்டதுதான் இன்றைய பர்மா பஜாரின் பகுதிகள். 

1966 ஆம் ஆண்டு வாக்கில் இங்கு தொழில் செய்பவர்களுக்காக, பர்மா தமிழர் மறுமலர்ச்சி சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 1969 ஆம் ஆண்டு முதல் பர்மா பஜாரில் கடைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன் பிறகு இதன் வளர்ச்சி எவரெஸ்ட் சிகரத்தைப் போலத்தான்...
மற்ற மாநிலத்தில் உள்ளவர்களையும் வாடிக்கையாளர் வெகுவாக ஈர்த்துள்ளது.

 
கடல் கடந்து வந்த மேலை நாடுகளின் பலவகையான மின்சாதனப் பொருட்கள் பர்மா பஜாரில் வந்து குவிந்து கிடக்கின்றன.

பாப்புலரான பெரும் நிறுவனங்களின் பொருட்கள் விலை உயர்வாக இந்தாலும், அதே மாதிரியில் பிற கம்பெனிகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் பர்மா பஜாரில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

இதனால், நடுத்தர மக்களும், சிறுவர்களும் தங்களுக்குத்  தேவையான பொருட்களை வாஙகிச் செல்கிறார்கள்.

இங்கே சென்றால் நமக்கு தேவையான பொருள்களை ஒரே இடத்திலேயே வாங்கி விடலாம் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

துணி வகைகளாகட்டும் செல்போன்களாகட்டும் அழகு சாதன பொருளாகட்டும்...கம்ப்யூட்டர் முதல் ஹைஹீல்ஸ் வரை அத்தனையும் ஒரே இடத்தில் கிடைப்பதுதான் அதற்கு காரணம்.

ஒரு காலத்தில் பர்மாவிலிருந்து திரும்பிய தமிழர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி என்றாலும் கூட இன்றளவில் இந்த பகுதியில் பர்மா தமிழர்கள் இருப்பது குறைவுதான்.

பொருளாதாரத்தை உயர்த்திகொள்ளும் நோக்கத்தில் பல கடைகள் இங்கு வாடகைக்குக் கொடுக்கப்படுவதும், பணத்தேவைக்காகவும் சரியாக நடத்த முடியாத பட்சத்தில், கடையை விற்றுவிடுவதும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

 
இங்கே பலர் தின கூளிக்காகவே வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் நெறுக்கமான உறவினர்களாக இருக்கிறார்கள்.

 
வயது முதிர்ந்தவர்கள், இங்கு பல ஆண்டுகளாகவே தொழில் செய்துவருவதாகக் கூறுகிறார்கள்.
 
பல வண்ணங்களில் விதவிதமான பொம்மைகள் ரோட்டோரத்தில் விற்பனைக்காக அடுக்கி வைக்கபட்டிருக்கிறார்கள்.

 
டிவிக்களும், கீ போர்ட் வகைகளும் , செல், வாக்மேன் மற்றும் ஐ பாட் போன்ற பொருட்களும் பல மாடல்களில் பர்மா பஜாரின் விற்பனையில் முதல் வரிசையில் வந்து நிற்கின்றன.


ஆண்களுக்கான பெல்ட் வகைகளும், பெண்களுக்கான லிப்ஸ்டிக் வகைகளும், மற்றும் கைக்கடிகாரங்கள் முக கண்ணாடிகள் என்று பணத்துக்கேற்ற பொருட்கள் பர்மாபஜாரில் ஏராளம் இருக்கின்றன.

கடைகளின் நடை பாதையில் நடந்து போனால் போதும், அந்தந்த கடைகளின் இடைத்தரகர்கள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டே இருப்பார்கள்.

வாங்கும் பொருள்களைப் பற்றி ஒரு பேச்சுக் கொடுத்தால் போதும்...
பொருளைக் காட்டி பேச ஆரம்பித்து விடுவார்கள்.

வாங்குபவர்கள் ஒரு கடையில் நின்று பேசினால் பக்கத்தில் நிற்கும் மற்ற கடைக்காரர்கள் விலகிக் கொள்வார்கள்.

பேரம் பேசுவதில் கெட்டிக்காரர்கள், இந்த பர்மா பஜாரில் கடை நடத்துபவர்கள்.

தங்களுக்கு மட்டும் புரியும் தொழில் மொழியில் ஒரு பொருளை எந்த விலைக்கு விற்கலாம் என பேசிக் கொள்கிறார்கள்.

வாங்குபவர்களின் எண்ணம் திசை மாறாமல் பார்த்துக் கொள்வதை தொழில் உத்தியாக வைத்திருக்கிறார்கள்.

சில நேரங்களில் அதிக நேரம் பேரம் பேசி, எந்தப் பொருளும் வாங்கவில்லையென்றால் பார்மா பஜாரின் கடைக்காரர்கள் வெறுப்படைந்து விடுகிறார்கள். இதைக் கடந்து, கடையை விட்டு விலகி வருவதே பெரும் சிரமாக இருக்கும்.

இங்கு எந்த நாட்டு திரைப்பட சீடிக்களும் எளிதில் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.               

ஒரு படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில், பர்மா பஜார் சீடி வியாபாரிகளிடம் அதன் சிடி கிடைத்து விடும். அந்த அளவுக்கு படு வேகமானவர்கள் இவர்கள்.

பொதுவாக உலக சினிமாக்களை வாங்குவதற்கு, விசுவல் கம்யூனிகேசன் படிப்பவர்கள், துணை இயக்குனர்கள் போன்றவர்களின்  வாடிக்கையில் பர்மா பஜாரில் நல்ல வரேற்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஈரான், பிரெஞ்ச்,ஜப்பான், கொரியன், லத்தின், ஆகிய வெளிநாட்டுப் படங்கள் அதிக விற்பனையாகின்றன.

தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் எடுக்கப்படும் ஆவணப்படங்களும், குறும்படங்களும் அதிக லாபம் ஏற்படுத்துவதில்லை என்கிறார்கள்.

உலக சினிமாக்ளை தவிர தியாகராஜ பாகவேதர், சந்திரபாபு, டி.எம். சௌந்திர ராஜன், சுசிலா, ஹிந்தியில் முகம்மது ரஃபி, கிஷோர் குமார், லதா மங்கேஸ்கர் ஆகியோர் பழைய படப்பாடல்களையும் பொதுவாக வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இது தவிர சீசனுக்கு ஏற்றபடி ஐய்யப்பன் பாடல்கள் போன்ற பக்தி பாடல்களும் விற்பனையாகின்றன.

சிறுவர்களுக்கா கார்ட்டூன், விளையாட்டு சீடிகள் அதிகமாக பர்மா பஜாரில் வாங்கிச் செல்கிறார்கள்.

அடிக்கடி சீடிக்கடைகளுக்கு வரும் காவல் துறையின் கண்காணிப்பை பர்மா பஜாரில் கடை நடத்துபவர்கள் சமாளித்துக் கொள்கிறார்கள்.

விற்பனையாகும் திருட்டு வீசீடிகளால் பர்மா பஜார் மீது படத் தயாரிப்பளர்கள் எரிச்சலடைகிறார்கள்.

நெறுக்கமான சொந்தக்காரர்களாக இருந்தாலும் வியாபாரம் பார்க்கும் போட்டியில் பல குழப்பங்களோடும் சர்ச்சைகளோடும்  பர்மா பஜாரில் ஒவ்வொரு நாளும் கடந்து போகிறது.