Wednesday 19 September 2012

இதய நோய்


இயற்கையிலிருந்து மனிதர்கள் விலகும் போதெல்லாம் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த மின்னணு உலக்ததில், மனிதர்களும் யந்திரமாகச் செயல்படத் தொடங்குவதால், அழுத்தங்களின் சுமை பொறுக்க முடியாமல், மனிதர்களின் மெல்லிய இதயம் பழுதடைந்து விடுகிறது.

இதய ரத்தக் குழாய்கள் பாதிப்படையும் போது, இதயத்துக்கு ரத்தம் செல்லாமல் மாரடைப்பு என்ற திடீர் மரணங்கள் ஏற்படுகின்றன.

இதய மாற்று அறுவைச் சிகிச்சைகள்  என்று, மருத்துவத்தில் புதிது புதிதாகக் கண்டு பிடிக்கப்படிப்புகள் வந்தாலும், வெவ்வேறு வடிவங்களில் இதய நோயாளிகள் மருந்துச் சீட்டெழுதி, வரிசையில் வந்து நிற்கிறார்கள்.

களைத்துப்போட்டதெல்லாம் கலாச்சாரமாகின்ற இந்த முரண்பட்ட சமூகத்தில் வாழ முடியாமலும், வெள்ளத்தில் விழுந்த எறும்பைப் போல நீந்த முடியாமலும், நிறைவேறாத ஆசைகளால், இதயக் கோளாறுகள் வந்து விடுகிறது.

ஒரு நகர வீதியில் சென்று திரும்பினால் கோடி ரூபாயாக இருந்தாலும், சில மணி நேரங்களில் செலவாகும் ஆடம்பரங்கள் இன்று ஏராளம் வந்து விட்டன.

வருமானத்துக்கு மிஞ்சிய செலவுகளைச் செய்யும் போது, ஏற்படுகிற கடன் தொல்லைகளால், மனிதர்கள் தனக்குள்ளே அடைபடும் அழுத்தத்தில், இதய துடிப்பின் வேகத்தைக் குறைத்து விடுகிறார்கள்.

தீ பந்தம் கொண்டு எழுதும் பந்த பாசங்களில் ஏற்படும் சிக்கல்களால்,  இதயம் வெந்து விடுகிறது: இதய நோய்கள் வந்து விடுகிறது.

வயது வரம்புகள் மீறிய பிள்ளைகளின் சுதந்திரத்தில் உண்டாகும் சிக்கலைத் தட்டிக் கேட்க முடியாமல், சுமைகள் தாங்கும் இதயம் விரிசலடைகிறது.

இதயப் புண்கள்  அல்லது ஓட்டைகள் ரத்தக் குழாய் அடைப்புமாரடைப்பு என்று ஏற்படும் திடீர் மரணங்கள்தினசரி பத்திரிகைளின் செய்திகள்  போல தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

ஒரே ஆண்டில் ஆயிரக்கணக்கான மக்கள் இதய நோயால் இறந்து விடுகிறார்கள்.  

ஒவ்வொரு ஆண்டும் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.  

மன உழைப்பில் மட்டுமே சம்பாதிப்பவர்களுக்கு உடல் கனத்து பக்க விளைவுகள் வீடு தேடி விலாசம் கேட்கிறது.

நீண்ட நேரம் நகராமல் அமர்ந்த இடத்திலே வேலை பார்ப்பதால், உடல் நரம்புகள் அசைவுகளற்று சோர்ந்து விடுகிறது. அது மொத்தமாய் இதயத்தில் வந்து சேர்ந்து விடுகிறது.

எண்ணைய் வடியும் உணவுப்பொருள்கள் மூலம் உடம்பில் கொலும்புச் சக்தி அதிகரிக்கும்போதெல்லாம் அது இதயத்தைப் பாதிக்குமென்று மருத்துவக் கழகம் அறிக்கை எழுதுகிறது. 

அதிகளவு கொழுப்பு சேரும் போது, ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால், இதயத்திற்கு செல்லும் காற்றின் அளவு குறைந்து இதய திசுக்கள் பழுதடைந்து விடுகிறது.

புகைப்பிடித்தல், மது அருந்துதல், போன்ற காரணங்களாலும் இதயத் தமனிகளில் புண்கள் ஏற்பட்டு, இதயத் துடிப்பின் வேகம் குறைகின்றது.

இதயத்தில் இருக்கும் மூன்று ரத்தக் குழாய்களில் ஒன்று பழுதடைந்தால், மருத்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தலாம்.

இதயத்தில் மூன்று ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படும் போது, இதய அறுவைச் சிகிச்சைகள் செய்ய வேண்டியிருக்கிறது.

ECG என்கிற மின் இதயத் துடிப்பு வரைவு அறுவைச் சிகிச்சையும், MRI என்கிற இதய காந்த ஒத்ததிரிவு அறுவைச் சிகிச்சையும் மற்றும் மின் ஒலி இதய வரைவு என்கிற மூன்று இதய அறுவை சிகிச்சைகள் இன்று நடைமுறையில் உள்ளன.

காலை விடிந்தது முதல் பரபரப்பான நெருக்கடியில் ஓடிக் கொண்டிருக்கும் மக்கள், இதய நோயிலிருந்து தப்பிக்க நடைப்பயிற்சியிலும் சில உடற்பயிற்சிளிலும், தங்களை இணைந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மாறுபட்ட நேரத்தில் உறங்குவதால் சின்னச் சின்ன அழுத்தங்கள் கூட இதயத்தில் தேங்கி அதன் மெல்லிய படலத்தைக் கிழிக்கிறது.

உடலிலும் மனதிலும் வலி ஏற்படும் போது தான் நம்மவர்கள் யோகாசனங்களைச் செய்யத் தொடங்குகிறார்கள்.

தியானப்பயிற்சிகள் நம் உணர்வுகளை நல்வழிப் படுத்தி, எளிதான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது. இதய நோய்களை தியானப்பயிற்சிகள் தடுத்து நிறுத்துகிறது.  

பறவைகளும், விலங்குகளும் மரடைப்பு போன்ற இதய நோய்களால் இறப்பதில்லை.  

இயற்க்கையோடு இயற்கையாக உறங்கி அலாரம் ஏதும் வைக்காமல் அதிகாலையில் எழுத்து விடுவதால், மனிதனைத் தவிர மற்ற உயிர்கள் நிம்மதியாக வாழ்கின்றன.

எளிமையான வழியில், இயற்கையின் விதிகளை மீறாமல் நடந்தால், இதய நோய்களிலிருந்து தப்பிக்கலாம். அதற்காக இப்போதிருந்தே சிந்திக்கலாம்.




   

செல்லமொ செல்லம்



வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் நம்முடைய நேரத்தை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

குழந்தைகளுக்குப் பொம்மைகளைப் போல, செல்லப் பிராணிகள் விளையாட்டுக்காட்டும்.
நம்மையும் குழந்தையாக மாற்றி விளையாட வைக்கும்.

தாவிக் குதித்துக் கொண்டும், அங்கும் இங்கும் ஓடிக் கொண்டும் வீட்டில் இருக்கும் நாய் அல்லது பூனைக்குட்டியைப் பார்க்கும் போது, நம்முடைய மனஅழுத்தம் குறைந்து விடும்.

விலங்குகளையும், பறவைகளையும் நேசிக்கும் மனிதர்கள் மனதில் கர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். மிக எளிதாக வாழப் பழகிக்கொள்கிறார்கள்.

நாய்கள், பூனைக்குட்டிகள், கலர்க் கலர் மீன்கள், பச்சைக் கிளிகள், வெளிநாட்டுப் பறவைகள், புறாக்கள், முயல், கோழிகள் என்று செல்லமாக வளர்க்கும் உயிர்களிடம் மனம் இளகி விடுகிறது. அதன்வழி மற்றவர்களிடம் ஆனந்தாமாக பேச முடிகிறது.

கழுத்தை ஆட்டிக்கொண்டு, மாறி மாறி நாக்கால் நக்கும் நாய் குட்டிகளே செல்லப் பிராணிகளில் முதலிடத்தில் வந்து நிற்கின்றன.

வளப்புப் பிராணிகளில் பாசம் மிகுந்தாகவும், ஓடி விளையாட உகந்ததாகவும் நாய்கள் இன்று பல ரகங்களில் இருக்கின்றன.

நாய்கள் காவலுக்காவும், வேட்டையாடவும் வளர்க்கப்பட்டு வந்த காலம் மாறி, நாய்களைச் செல்லமாக வளர்க்கத் தொடங்கி விட்டார்கள்.

நாய்கள் குட்டியாக இருக்கும் போதே வாங்கிச் சென்று குழந்தை போல சொல்லிக் கொடுக்கிறார்கள்.
ஒவ்வொரு ரக நாய்களுக்கும் சில தனிப்பட்ட குணங்கள் இருக்கின்றன.

கிராமங்களில் பெரும்பாலானோர் வீட்டில் வளர்க்கப்படும் நாட்டு நாய்கள், தெருவில் எங்கு சென்று சுற்றினாலும் இரவு நேரத்தில் வீட்டு வாசலில் வந்து படுத்திருக்கும். வயல்வெளிக்களுக்குச் சென்றால் கூடவே வந்து கொண்டிருக்கும்.

வீட்டில் சாப்பிடும் போது காலால் தொட்டு, உணவு கேட்கும் நாய்களும் இருக்கின்றன.

அல்சிசன் டாபர்மேன் போன்ற நாய்களை அதிகாலையில் வாக்கிங் போகும் போது கூடக் கூட்டிச் செல்வதை மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள்.

பந்தையோ அல்லது ஏதாவது ஒரு பொருளையோ தூக்கிப் போட்டால் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்கள் அதைக் கவ்விக் கொண்டு வருவதைப் பார்த்துக் கைதட்டிக் கொண்டிருக்கலாம்.

வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வரும் போது வாசலில் செல்ல நாய் காலைக் கட்டிக் கொஞ்சிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டே இருக்காலாம்.

பல இடங்களில் நாய்களுக்கென்று கண்காட்சிகளும் நடத்துகிறார்கள். இதுவரை பார்த்திராத பல வகையான நாய்களைப் பண்ணைகளில் இருந்தும் வீடுகளில் இருந்தும் கொண்டு வருகிறார்கள்.

நாய்க்கு அடுத்தபடியாக பூனைதான் வீட்டின் எல்லா இடத்திலும் சென்று விளையாடும்.

பூனைகள் சுயநலம் மிகுந்த உயிராக இருக்கும். பூனைகள் செய்யும் குறும்பு நம்மை வேடிக்கைப் பார்க்க வைக்கும்.

பூனைகள், குட்டியாக இருக்கும் போது எந்த நேரமும் விளையாடிக் கொண்டே இருக்கும்.

காலையில் டீ போட்டவுடன், பூனை கத்திக் கொண்டே வந்து விடும். கண்ணாடியில் தலை வாரிக் கொண்டிருக்கும் போது மறைத்துக் கொண்டு வந்து நிற்கும்.

பூனை கண்ணைச் சிமிட்டிக் கத்தும் போது அதன் மெல்லிய உடம்பை தடவிக் கொடுத்தால் அது மெதுவாக கடித்து வைக்கும்.

உறங்கும் போதும் பக்கத்தில் படுத்துத் தூங்கும் பூனைக்கு தான் வீட்டில் சுதந்திரம் ஏராளம் இருக்கும்.

கண்ணாடித் தொட்டிகளில் கலர் மீன்கள் வளப்பது சிலருக்கு விருப்பமானதாக இருக்கிறது.

வீட்டுத் தாழ்வாரத்தின் முன்பாக வைத்து வளர்க்கும் கலர் மீன்கள், நீந்தும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

சிறிய மின் மோட்டார்களை வைத்து வரும் காற்றை மீன் தொட்டிகளில் விட்டு, அதனால் வரும் நீர் குமிழிகளில் மீன்கள் விளையாடுகின்றன.

மீன் தொட்டிகளில், பிளாஸ்டிக் மரங்களும் - கொடிகளும் இருக்க, அதற்குள் மீன்கள் வளைந்து வளைந்து நீந்துகின்றன.

கிராமங்களில், குளத்திலும் - ஓடைகளிலும் சிறுவர்கள் மீன் குஞ்சுகளைப் பிடித்து வந்து தொட்டிகளில் வளர்ப்பார்கள்.

சரியான நேரத்தில் தண்ணீர் மாற்றும் பக்குவம் தெரியால், பிடித்து வந்த மீன் குஞ்சுகள் அடுத்த நாள் காலையில் செத்து மிதக்கும்.

பனைமரப் பொந்துகளிலிருந்து, கிளிக் குஞ்சுகளை எடுத்து வந்து வளர்ப்பதை கிராமத்துச் சிறுவர்கள் பெரிதும் விரும்புவார்கள்.

கிளி வளர்க்கும் வீட்டின் மேல் மற்ற கிளிகள் பறந்து வந்து எப்போதும் கத்திக் கொண்டே இருக்கும்.

பேசத் தெரியாத குழந்தையைப் போல, பேசும் கிளியின் மொழியை ரசிக்கிறார்கள்.

Love birds என்ற பெயரில், வெளிநாட்டுப் பறவைகளைப் வீடுகள் போல, பெரும் பெரும் கூண்டுகளில் வளர்க்கிறார்கள்.

எல்லா வண்ணத்திலும் இருக்கும் இந்தக் கலர் குருவிகள், விசில் அடித்துக் கொண்டே நிமிடத்துக்கு 100 முத்தமிடுகின்றன.

ஊஞ்சலாடிக் கொண்டே இந்த வெளிநாட்டுப் பறவைகள், தம் இணைகளுக்குப் பேன்பார்க்கும் அழகில் நம் மனம் கரைந்து விடும்.

வளர்ப்புப் பறவைகளில் வெகுதூரம் சென்று வீடு பறவையாக இருப்பது புறாக்கள் மட்டும் தான்.

மூன்று மாதங்களுக்கொருமுறை புறாக்கள் இரண்டு முட்டைகளிட்டுக் குஞ்சு பொரிக்கும்.

மயில் புறாக்கள் மாடப்புறாக்கள், மணிப்புறாக்கள் மற்றும் சவுடால், கிரிசல், என பல வகையாக புறாக்கள் இருக்கின்றன.

புறாக்களின் அனத்தும் சத்தத்தை வைத்து, புறாக்கள் வளப்பது வீட்டுக்கு ஆகாது என்று ஒரு ஐந்தீகத்தை இன்றளவும்  சொல்லி வருகிறார்கள்.

வீட்டில் வளர்க்கும் புறாக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் போது, காட்டுப் புறாக்களையும் உடன் அழைத்து வரும்.

நூற்றுக் கணக்கணக்கான புறாக்களுக்கு கம்பு சோளம் போன்ற இரைகளைத் தூவும் போது, பறந்து வந்து புறாக்கள் கொத்தும் அழகு, பார்க்க அற்புதமாக இருக்கும்.

பல வண்ணங்களில், கலர்க் கோழிக் குஞ்சுகளைச் செல்லமாக வளர்க்கிறார்கள்.

கழுகும் - காக்கையும் தூங்கி செல்வதிலிருந்து பாதுகாக்க ஒரு மாதா காலம் வரை வீட்டுக்குள்ளே கலர் கோழிக்குஞ்சுகள் இருக்க வேண்டும்.

கலர் கோழிக் குஞ்சுகள் தாயில்லாமல் வளர்வதால் காலில் மிதிபடும் சூழல் உருவாகும்.

முயல்கள் கறிக்காகவும், வளர்க்கும் செல்லப் பிராணியாகவும் இருக்கின்றன. நான்கைந்து குட்டிகளை முயல்கள் ஈனுகின்றன.

வெண்ணீற முயலகள் மற்றும் சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் முயல்கள் இருக்கின்றன. வாசலோரத்தில் புல்தரைகள் இட்டு முயல்கள் வளர்க்கப் படுகின்றன.

நீண்ட கழுத்தைக் கொண்ட வாத்துகளும், வான் கோழிகளும் அதன் நடை அழகில் கத்தும் ஓசையில் நம் அழகான நேரங்களை வாங்கிக் செல்கின்றன.

காடுகளில் மட்டுமே வளரக்கூடிய வனவிலங்குகளையும் கூண்டுகளில் அடைத்து வளர்த்து வருகிறார்கள்.

அழிந்து வரும் அரிய வகையான விலங்குகளை இனப்பெருக்கம் செய்யச் செய்து பாதுகாத்து வருகிறார்கள்.

மிக நீழமான மலைப்பாம்புககள் சிங்கங்கள் - வரிப்புலிகள் அபூர்வப் பறவைகள் என்று அதிசயக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கென்று தனி துறை செயல்படுகின்றன.

விவரம் அறியாதா குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் அழகாக இருக்கும். வீட்டில் வளர்க்கும், விலங்குகளும் பறவைகளும் குழந்தைகள் போல இருக்கும். 
  
செல்லப்பிராணிகள் நம் ஆனந்தத்தை 
வைப்பு நிதாயாக வைத்திருக்கும் வங்கிகள்.
அர்த்தமில்லாத உற்சாகத்தை எழுதும் சங்கதிகள்.
இருதயத்தில் கொட்டிக் கிடக்கும் பொன்மணிகள் இந்தச் செல்லப்பிராணிகள்.








 










  

நீச்சல்


மழைக்காலம் வந்தாலே குளம் குட்டைகளில் முங்கி நீச்சலடிப்பது கிராமத்தின் மத்தியான நேரங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

கிராமங்களில் பெரும்பாலும், குளத்தில் தான் ஆண்களும் பெண்களும் நீச்சல் பழகியிருப்பார்கள்.

காற்றடைத்த டின்னை இடுப்பில் கட்டிக் கொண்டும், அல்லது கயிற்றைக் கட்டிக் கொண்டும் நீச்சல் பழகுவார்கள்.

தண்ணீரில் மிதக்கும் காய்ந்த சுரக்குடுக்கையைக் கட்டிக் கொண்டும், இருசக்கர வாகன டியூப்களில் காற்றடைத்துக் இடுப்பில் கட்டிக் கொண்டும் நீச்சல் அடித்துப் பழகுவார்கள்.

விடுமுறை நாட்களில், சிறுவர்கள் கூட்டமாகச் சென்று கிணற்றில் குதித்து விளையாடுவதை பெரிதும் விரும்புவார்கள்.

சிறு பிள்ளைகள் கிணற்றில் நீச்சலடிக்கும் போது அவர்களை விரட்டுவதே கிணற்றின் சொந்தக்காரர்களுக்கு ஒரு வேலையாக இருக்கும்.

சிறுவர்கள் உற்சாகமாக நீந்திக்கொண்டு இருக்கும் போது, பின்னால் வந்து கிணற்றுக்குச் சொந்தக்காரர்கள், கிணற்று மேட்டில் கழற்றி வைத்த சட்டை டவுசர்களை எடுத்துக் கொண்டு விரட்டியது, ஒவ்வொரு கிராமத்துச் சிறுவர்களுக்கும் நினைவில் இருக்கும்.

நீச்சலில் தொட்டுப் பிடித்து விளையாடுவது மகிழ்ச்சியைத் தரும்.

கிணற்று உச்சிக்குச் சென்று கத்திக் கொண்டே குதிப்பதை சிறுவர்கள் கொண்டாட்டமாக நினைப்பார்கள்.

உள்நீச்சல் அடித்து நீண்ட நேரம் முங்குவார்கள். அடி மண்ணை எடுத்து வந்து காட்டுவார்கள்.

கைகால்களை அசைக்காமல் மல்லாந்த நிலையில் கிடந்து நீத்துவது தனித்திறமையாக வைத்திருப்பார்கள்.

காசையோ, கல்லையோ கிணற்றுக்குள் போட்டு அதை முங்கி எடுத்து வருவார்கள்.

கிராமங்களில் யாரும் சொல்லித்தரமால் தன் போக்கில் நீச்சல்யடித்துப் பழகுவார்கள்.

ஒவ்வொரு கிராமத்து குளத்திலும் எப்போதோ ஒரு சிறுவன் முழ்கி இறந்த கதை நிச்சயம் இருக்கும்

மழை காலங்களில் ஆழமான குழிகளின் தேக்கத்தில், குதித்து விளையாடும் போது சேற்றில் மாட்டி நீச்சல் தெரிந்திருந்தும் இருந்திருப்பார்கள்.

நகரங்களில் பெருபாலான மக்களுக்கு நீச்சலடி்ககத் தெரிந்திருக்காது.

நீச்சல் குளங்களில் மாத அல்லது வருடக்கண்க்கில் நீச்சலடிக்க விண்ணப்பித்து நிச்சலடிப்பவர்கள் நகரங்களில் இருக்கிறார்கள்.

நீச்சல் குளங்களில் பணம் கட்டி நீச்சல் பழக தொடக்க நிலைக்கு 15 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

முதல் நாள் நீச்சல் பயிற்சியில், 3 அடி அளவு தண்ணீரில்  மூழ்கி கொண்டு காற்றை நீருக்குள் செலுத்தக் கற்றுத் தருகிறார்கள்.

பிரஸ்டோக், பிரிஸ்டெயில், பட்டர்பிளைவ் போன்ற நீச்சல் வகைகளைக் கற்றுத் தருகிறார்கள்.

நீச்சல் போட்டிகளுக்குப் பயிற்சியெடுக்கும் குழந்தைகள் பிரிஸ்டெயில் என்ற வகை நீச்சலைப் பயன்படுத்துகிறார்கள்.

எல்லா கிராமத்திலும் ஒரே வகையான நீச்சலைத் தான் பின்பற்றுகிறார்கள்.

நீச்சல் குளங்களில், கிராமத்து நீச்சலைப்போல் இல்லாமல் தண்ணீருக்கு மேல் இழத்த மூச்சை மீண்டும் தண்ணீருக்குள் விட்டுக் கொண்டே நீந்துவார்கள்.

பன்னிரண்டு வயதில் மாரத்தான் நீச்சலில் கைதேர்ந்த குற்றாலீஸ்வரன், ஆறு கடல் வழிகளைக் கடந்து கின்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நீச்சல் போட்டியும் நடைபெற்று வருகிறது. இந்த உலக அளவிளான நீச்சல்ப்போட்டிகளில் மீன்களைப் போல நீந்துகிறார்கள். அதிநவீன கேமராக்களில் தண்ணீருக்கடியில் இருந்தும் நீச்சலடிப்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.

உடற்பயிற்சிகளில் நீச்சலும் முக்கியமானதாக இருக்கின்றது. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக பெரும் பணக்காரர்கள், வீட்டிலே நீச்சல் குளங்களைக் கட்டி வைத்துக் கொள்கிறார்கள்.

திரைப்படங்களில் நீச்சல் குளிங்களில் நீந்தும் பாடல் காட்சிகள் ஏராளம் இருக்கின்றன.

இன்னும் கிராமப்புரங்களில் சிறுவர்களின் கொண்டாட்டங்களில் நீச்சல் என்பது தனிப்பட்ட சந்தோஷமாகவே இருந்து வருகிறது.












Monday 17 September 2012

மாமல்லபுரம்


ஆண்டுகள் ஆயிரக்கண்க்கில் கடந்து போகலாம்...

மனிதர்கள் எலும்புக்கூடுகளாகச் சிதைந்து
கோடிக்கணக்கில் பிறந்து வரலாம்...

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், மேதைகளும்-ஞானிகளும்-
ஜாம்பவான்களும் நிச்சயம் காலம் சுமந்து வந்து கொண்டே இருப்பார்கள்...

கலையும் அறிவியலும் மனித குலத்தின் நாடி நரம்புகளில் பிறக்கும் போதே பின்னப்பட்டிருக்கிறது.

உலகம் அறிவியலில் வியந்து நடக்கிறது...
கலையில் தன்னை மறந்து மயங்கிக் கிடக்கிறது...

அறிவியலும், கலையும் பசியும் காமமும் போல, உயிரின் ஒவ்வொரு அணுவிலும் கலந்திருக்கிறது.

குகைவழிச் சந்துகளிலும், மரப்பொந்துகளிலும் கலை ரசித்து வந்த மனிதக் கூட்டம் அரியணையில் அமர்ந்தவுடன் தங்கள் பேழை திறந்து ஏதேதோ எழுதிக் கொண்டது.

நடுகல்-குத்துக்கல்-சமணப் படுக்கைகள்-புத்த மடாலயங்கள் என்று, கற்களும்-மிகப் பெரும் பாறைகளும், சிலைகளாக- புடைப்புச் சிற்ங்களாச் செதுக்கப்பட்டன.

உலோகங்களைக் கூட உருக்கி உருமாற்றி விடாலாம்...
இந்த கல் மனிதர்களின் கற்குகை மாடங்களை அழித்து விடாமல் செங்கோல் பிடித்த வேற்றரசர்களும் பாதுகாத்து வந்தார்கள்.

கடல் மல்லை’, ‘மாமல்லைஎன்றழைக்கப்படும் மாமல்லபுரம் பல்லவர்களின் மாபெரும் கோட்டைக் கொத்தளங்களாக, சில பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு விரிந்து கிடந்தது.


உலகத்தின் முக்கிய கலை அம்சத்தில் ஒன்றான கட்டக்கலையில் விரிந்த பல்வர்களின் சாம்ராஜ்யத்தை இனிவரும் கடைசி மனிதன் வரை யாரும் மறந்து விட முடியாது.

முதலாம் மகேந்திரனைத் தொட்டுத் தொடங்கிய பல்லவர்களின் பிரளயங்கள் ஒரு வியுகமாகக் காஞ்சிபுரத்தை மையமிட்டது.

மாமல்லன் என்று பட்டம் தாங்கிய முதலாம் நரசிம்மன் ஆட்சிக் காலத்தில் கட்டக்கலையில் சிற்பங்கள் மிக நுட்பமாக செதுக்கப்பட்டன.

சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவில, அமைந்த மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்ட கற்கோவில்களை உலக அருகாட்சியகத்தில் பாரம்பரியச் சின்னமாகப் பதிவு செய்திருக்கறார்கள்.

தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் மாமல்லபுரமும் சிறந்த ஒன்றாக இருக்கிறது.

கி.பி.6 ஆம் நூற்றாண்டுகளில்... இலங்கை, சீனா, தெற்காசிய நாடுகள் மற்றும் ரோம் நகரத்துடன் பல்லவர்கள் வாணிபத் தொடர்பு கொண்ட ஒரு முக்கியத் தொடர்புத்தளமாக மாமல்லபுரம் இருந்தது.

மாமல்லபுரத்தில் ஏழு கோயில்கள் இருந்ததாகவும் இதனால் இதனை ஏழு கோயில் நகரம் என்று அழைத்திருக்கிறார்கள். இக்கோயில்களைக் கடல் குடித்ததாகத் தொல்பொருள் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
பல்லவ பேரரசர்களின் கலை ஆர்வம் உலகம் அறிந்தத ஒன்று. அந்த வரிசையில் தன் பாட்டனார்களாமகேந்திர வர்மனையும், நரசிம்மவர்மனையும் கலைத்துறையில் ராஜசிம்மன் என்கிற இராண்டாம் நரசிம்மவர்மன் மித மிஞ்சியவனாக இருந்தான். 
பல்லவ வம்சத்தின் மாமன்னர்களைத் தொடர்ந்து காஞ்சி கைலாசநாதர் கோவிலும், மாமல்லபுர கடற்கரை கோவிலும் இன்றும் ராஜசிம்மனின் கலையார்வத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறன.
கற்களில் பலவகை உண்டு. எல்லாக் கல்லிலும் சிற்பம் வடிக்க முடியாது.
கருங்கல், சலவைக்கல், மணற்கல், மாக்கல் போன்றவற்றில் மட்டும் சிற்பங்கள் வடிக்கப்படுகின்றன.
மகாபலிபுரத்தில் காணப்படுவது கருங்கல் சிற்பம் என்று சொல்கிறார்கள்.
குடைவரைக்கோயில் ஒற்றைக்கல் சிற்பங்கள்- புடைப்புச் சிற்பங்கள் கட்டுமான சிற்பங்கள் என சிற்பங்கள் நால்வகைகள் இருக்கின்றன
மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில் குகைக்கோயில்கள் அர்ஜுனன் தவம் செய்யும் சிற்பம்- ஐந்து ரதம்- புலிக்குகை
மற்றும் ஏராளமான குறுஞ்சிற்பங்கள் இருக்கின்றன.
தர்மராஜரதம்- பீமரதம்-அர்ஜுனரதம்-நகுல சகாதேவரம்-திரௌபதிரதம் என்ற ஐந்து ரதங்கள் இருக்கின்றன. 
பஞ்ச பாண்டவர் ரதங்கள் என்றழைக்கப்படும் இந்த ரதங்களைச் பெரிய பாறையில் சிறுகச்சிறுக செதுக்கியிருக்கிறார்கள்.
நான்கு ரதங்கள் ஒரே பாறையில் உருவாக்கியதாக ஆய்வாளர்கள்  சொல்கிறார்கள்.
தர்மராஜ ரதம் ரதங்களில் மிகப் பெரிய ரதமாக இருக்கிறது.
பீம ரதம் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது.
துவாரபாலர் சிற்பங்பளைத் தவிர இதில் வேறு சிற்பங்கள் இல்லை. இது திருமாலுக்கு உரியதெனச் சொல்கிறார்கள்.
அர்ஜுனரத்தின் கிழக்குச் சுவரிலும் தெற்குச் சுவரிலும் பெண்களின
உருவங்கள் சிறந்த கலைப்படைப்புகளாக இருக்கின்றன.

இந்திரனுக்கு வடிக்கப்பட்டதாகச் சொல்லும் நகுல-சகாதேவரதம்
கொஞ்சம் முற்றுப்பெறாநிலையில் உள்ளது.

குடிசை போன்ற தோற்றத்தையுடைய திரௌபதி ரதம் மாமல்லபுர ரதங்களிலே சிறியதாக இருக்கிறது.
30 மீட்டர் உயரமும் 60 மீட்டர் நீளமும் கொண்ட அருஜுனன் தவம் செய்த வடிவில் அமைந்த சிற்பம் நான்கு நிலையைக் கொண்டிருக்கிறது.
முதல் நிலை விண்ணுலகத்தைக் குறிப்பதாகவும், இரண்டாம் நிலை விண்ணுலகத்திற்கும் மண்ணுலகத்திற்கும் இடைப்பட்ட நிலையைக் குறிப்பதாகவும், மூன்றாம் நிலை மண்ணுல கத்தையும், நான்காம் நிலை பாதள உலகத்தைக் குறிப்பிடுவதாக ஆராய்ந்தவர்கள் சொல்கிறார்கள்.


வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் என ஏராளமான சிற்பங்கள் அர்ஜுனன் தவத்தில் காணப்படுகின்றன. இதற்கு வலப்புரமாக ஒரே கல்லில் வடிக்கப்பட்ட குரங்கு குடும்பம் ஒன்று உள்ளது. ஏதோ ஒரு புராணக்கதை அடிப்படையில் இவை உருவாக்கப் பட்டிக்கலாம் எனத் தெரிகிறது.

ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததை குறிப்பதால் இச்சிற்பத்தை அர்ச்சுனன் தபசு என்றழைக்கிறார்கள்.
இங்கு கிருஷ்ணரின் வெண்ணெய்க்கல் எனப்படும் இயற்கையாய் அமைந்த பாறை ஒன்று உள்ளது. சரிவொன்றில் அமைந்து இருந்தும் இது உருண்டு விழுந்து விடாமல் இருப்பது விநோதமாகவே இருக்கிறது.
8-ம் நூற்றாண்டில் வடிக்கபட்ட உலக நாதர் ஆலயத்திலிருந்து பார்த்தால் மொத்த நகரமும் கண்ணுக்கு தெரிகிறது.
இதன் தென் மேற்கே மகிஷாசுரமர்த்தினி குகை கோவில், ஆதிவராக குகை கோவில், திருமூர்த்தி குகை கோவில், ஆகியன மூன்று குகைக் கோவில்கள் உள்ளன.


இன்னும் தெற்கே சென்றால் கணேசரதம் என்னும் மலைக் கோவில் உள்ளது.


கடற்கரைக் கோவிலில் வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான சில விஷயங்கள் இருக்கின்றது.
சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரே இடத்தில் சன்னதிகள் அமைக்கப்பட்டது இந்திய ஆண்மீகத்தில் குறிப்பித்தக்க ஒன்றாக இருக்கிறது.
கர்ப்பகிரகத்திற்கு பின்புறம் அமைக்கப் பட்டிருப்பது, சுற்றுப்புற சுவரில் வரிசையாக இருக்கும் நந்திகள் அற்புதமாக இருக்கிறது.


புத்த விகாரங்களின் சாயலிலும் பல்லவர்களின் சிற்பக்கலைக் காணப்படுகிறது.
அஜந்தா, எல்லோரா வகைக் குகைக் கோயிலின் மாதிரி வடிவத்தில் மாமல்லபுரத்தில் சில சிற்பங்கள் இருக்கின்றன.  
நரசிம்ம வர்மன் கி.பி.642 இல், சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியைப் போரில் வென்ற போது, அங்குள்ள சிற்பிகளையும், கலைஞர்களையும் போர்க்கைதிகளாக சிறைப்பிடித்திருக்கலாம் என்றும்,
அவர்களை காஞ்சிக்கும், மாமல்லபுரத்திற்கும் அழைத்து வந்து,  சிற்பங்கள் செதுக்கப்பட்டியிருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பெழுதிருக்கிரார்கள்.
இன்னும் பல சில சிற்பங்கள் முற்றுப்பெறாமலே இருக்கின்றன.
சாளுக்கியர்களின் படையெடுப்பும் விஜய நகரப் பேரரசின் தொடக்கமும் பல்லவர்களின் கலையை களைத்துப் போட்டிருக்கலாம்.

50 ஆண்டுகளுக்கு முன்னால் தனஷ்கோடியிலும் 2004 ஆம் வருடம் சென்னையிலும் இதனைத் தொடர்ந்து கடலோர நாடுகள் ஆலிப்பேரலையில் எழுதிய இரங்கல் கதைகளை நம் கண் முன்னால் பார்த்திருக்கிறோம்.

மாமல்லபுரமும் கடல்கொந்தளிப்பில் சிக்கியிருக்கக் கூடும்...

கற்சிலைகளும் கோவில்களும் முழ்கடிக்கப்பட்டிருக்கக் கூடும்...

இன்றைய சூழலில்... பல்லவர்களின் கட்ட சிற்பக்கலை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

கூட்டுச் சிற்பங்கள் அனைத்தும் புராண இதிகாச கதைகளின் மையமாக இருக்கிறது.

இச்சிற்பக்கலையைப் பற்றி திருமங்கையாழ்வார்கள் பாடல்கள் தொட்டு, நவீன இலக்கியம் வரை பல கதைகளும் கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.


பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி தனது South Indian History  என்ற நூலும், ராஜசிம்மனின் கலையார்வம் பற்றி சுவைபட எழுதப்பட்ட சாண்டில்யனின் ராஜதிலகமும் வரலாற்றுப்பதிவாக இருக்கிறது.
சரித்திர நாவலாசிரியரான கல்கி எழுதிய சிவகாமி சபதம் பல்லவர்களின் மகாபலிபுர சிற்பக்கலையை கட்டுக்கட்டாக எடுத்துச் சொல்கிறது.
சுவாமிநாதன் எழுதிய மகாபலிபுரம் என்ற புத்தகம் பல்லவர்களின் கட்டடக்கலையை நன்கு விளக்கியிருக்கிறது.
தமிழ் நாட்டின் பாரம்பரியச் சிற்பக்கலையில் மாமல்லபுர கடற்கரை கோயில் இன்று சுற்றுலாத் தளமாக மாறிவிட்டது.
மாமல்லனின் கலை அம்ச அழகைக் காணவரும் சுற்றுலாவாசிகளை மகிழ்விக்க கடலலைகள் வந்து ஏதேதோ சொல்லி விட்டுப் போகிறது.
கடலோரத்தில் சவாரி செய்வதற்குத் தயாராக நிற்கும் குதிரைகள், பாறைகளில் ஓடும் நண்டுகள், கடலலைகளில் சறுக்கி விளையாடும் இளைஞர்கள், காதலர்கள், கடைகள் விரித்துக் காத்திருக்கும் வர்த்தகர்கள், சிறு தெய்வப் பீடங்கள், எனக் காலை நேரத்து நிமிடங்கள் மாகபலிபுரத்தில் இன்னும் எத்தனையோ கோடி மனிதர்களால் கண்டு மகிழாமலே கடந்து போகிறது.
பல்லவ சாம்ராஜ்யத்தில் நம் மக்கள் கலையின் ஒவ்வொரு நுணுக்கத்தையும் நிதானமாகத் தியானித்திருக்கிறார்கள்.
சடங்குகளும் இறை வழிபாடும் கலையின் பெரும் பரப்பை நிறைத்திருக்கின்றன.


கி. மு. இரண்டாம் நூற்றாண்டுகளிலே மகாராஷாராவின் மலைத்தொடரில் அஜந்தா எல்லோர குகை ஓவியங்களை குதிரை லாட வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட குகைகளைப் புத்த மடாலங்களாக அமைத்து தீட்டிய ஓவியம் இன்று வாய்பிளக்க வைக்கிறது.
மாமல்லாபுரத்தின் கட்டக்கலைக்கெல்லாம் முன்னோடியாக இருக்கும் சித்தன வாசல் என்ற கற்கோயிலை புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பாறையில் செதுக்கியருக்கிறார்கள்.
ராஜராஜ சோழனின் தஞ்சை பிரகதீஷ்வரர் ஆலயம், மகன் ராஜேந்திரச் சோழனின் கங்கை கொண்ட சோழபுரம் போன்றவைகள் தமிழதப் பாரம்பரிய கலைச் சொத்தாக இன்று வரைப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பல்லவர்களிடமிருந்து 1500 வருடங்களுக்கும் அதிகமாக நாட்களை கடந்து வந்து விட்டோம். ஆனால் நம் சமகாலத்தில் மாகபலிபுரத்தைப் போல் ஓரே ஒரு கற்கோவில் செதுக்கி விட நம்மால் முடியுமா...?

முடியாதென்பது எதுவுமில்லை. மகாபலிபுரச் சிற்பஙகளை-என்ன வான தூதர்களா வந்து வடித்தார்கள்...?

இன்றும் கற்கோய்ல்களும் புடைப்புச் சிற்பங்களும் செதுக்கும் திறனுடையவர்கள் தமிழக்த்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காலம் சூழல் என்று எல்லாம் மாறிவிட்டது. ஒரு சாமானியன் நினைத்தால் பெரும் பாறைகளை சிற்பங்களாக காட்டி, திறப்பு விழா நடத்த முடியாது.


அரசனுக்கு கலை ஆர்வம் இருந்தால் மட்டும் அது சாத்தியமாகும். ஆனால் இன்றைய காலத்தி்ல் அதுவும் முழுமை பெறாது.


 ஆண்டுகள் ஆயிரக்கண்க்கில் கடந்து போகலாம்...

மனிதர்கள் எலும்புக்கூடுகளாகச் சிதைந்து
கோடிக்கணக்கில் பிறந்து வரலாம்...

ஒவ்வொரு காலக்கட்டத்திலும், மேதைகளும்-ஞானிகளும்-
ஜாம்பவான்களும் நிச்சயம் காலம் சுமந்து வந்து கொண்டே இருப்பார்கள்...


















புகைப்படம்


உலகத்தின் முதல் மனிதன் தன் முகத்தை தண்ணீரில் தான் பார்த்திருப்பான்.  

அதன் பிறகு கண்ணாடியின் பயன்பாடுகள் எந்த நூற்றுகளில் கண்டுபிடிக்கப்பட்டதென்று சரியாகத் தெரியவில்லை.

இருந்தாலும், கி.பி. 2 நூற்றாண்டுகளாகக் கணக்கிடப்படும் சங்க இலக்கியப் பாடல்களில் ஆடிப்பாவை போல கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல என்று சில பாடல்களில், கண்ணாடி பற்றிய பயன்பாட்டுத்  தகவல்கள் கிடைக்கின்றன.

மனிதர்கள் தங்கள் உருவங்களைப் பதிவு செய்து வைக்க ஓவியங்களில் தொடங்கி, சின்னச் சின்ன அங்க நெளிவுகளையும் சிற்பமாக வடிக்கும் கலைகளில் பெரும் ஆச்சர்யங்களை ஏற்படுத்தினார்கள்.  

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலே, ஈரான் நாட்டைச் சேர்ந்த அபு அலி என்பவரால் இரும்பு பெட்டி என்ற பெயரில்  புகைப் படம் பற்றியான பரிசோதனை முயற்சிகள் நடத்தப்பட்டன.

இந்தப் படமெடுக்கும் சோதனைகள் அனைத்தையும், ஓவியங்கள் வரைவதற்காகப் பயன்படுத்தினார்கள்.

சீன தேசத்து மனிதர்கள் இதனைத் தொடர்ந்து, ஒளியை ஆராய்ச்சி செய்து நுட்பமான முறையில் புகைப்படம் எடுப்பை வளர்க்க ஆரம்ப கட்ட முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

1831 ஆம் ஆண்டுகளில் லூயிஸ் டோக்ரே என்ற அறிஞர் புகைப்பட கண்டுபிடிப்பில் முதற்படியை மிதித்ததார்.

8 மணி நேரத்தில் இருந்து, 12 மணி நேரம் வரை ஆட்களை உட்கார வைத்து, ஒளியைப் பாய்ச்சி பிம்பத்தை நிலை நிறுத்த போராடியிருக்கிறார்.

டோக்ரேவுக்குப் பிறகு, ஜோசப் மெசீர் என்பவர் சில உலோகத் தகடுகளைப் பயன்படுத்தி புகைப்படங்களை நிலை நிறுத்த செய்தார்.

வெண்ணிற உப்பைத் தூளாக்கி மெல்லிய வெள்ளித் தகடுகளில் புகைப்படங்களை ஜோசப் மெசீர் பதிவு செய்தார்.

1939 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் வில்லியம் கர்சல் என்பவர் முக பாவனைகளை மட்டும் 30 விதமான புகைப்படங்களில் பதிவு செய்து அமெரிக்காவில் கண்காட்சியாக வைத்த போது மக்கள் ஆச்சர்யத்தின் எல்லை கடந்தனர்.

ஆனாலும் சில மணி நேரம் மட்டுமே படத்தை நிறுத்த முடிந்ததால் புகைப்படம் எடுப்பதில் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி மக்கள் காத்திருந்தார்கள்.

புகைப்படம் எடுப்பதில் சில குறிப்பிட்ட மாற்றங்களான,லென்ஸ் பயன்பாடுகளுக்குப் பிறகு, ஆகஸ்டு 19 ஒளிப்பட  தினம் அனுசரிக்கப்பட்டு புகைப்படக் கலை என்பது, அறிவியலாகவும், கலையாகவும் வளர்த்தெடுக்கப்பட்டது.

புகைப்படங்கள் பத்திரிக்கைத் துறையில் பெரும் மையில் கல்லாக உருவெடுத்தது.

இது நாள் வரை வெறும் எழுத்து வடிவிவ் மட்டும் தகவல்களைச் சான்றுகளாக அடுக்கி வந்த காலம் கடந்து ஆயிரம் வார்த்தை சொல்லி புரியவைக்கும் உணர்வுகளை ஒரு புகைப்படத்தின் வழி காட்ட முடிகிறது.

செய்திகளுக்கு புகைப்படங்களே வலு சேர்க்கின்றன. நம்மகத்தன்மையை ஏற்படுத்துகின்றன. தடங்களைக் காட்டும் ஆதாரமாக இருக்கின்றன. காலம் கடந்த பின்னாலும் மிக முக்கிய ஆவணமாக இருக்கின்றன.

மிகக் குறுகிய வடிவங்களில் புகைப்படக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்தில் சுறுக்கி நக இடுக்கில் வைத்து விட்டன.

ஒரு பெரிய பத்து முப்பது அடிகளில் கண்டறிப்பட்ட புகைப்படக் கருவிகள், இன்று கைக் காமராவில் தொடங்கி, செல்போன்கள் தொட்டு,கடிகாரத்திலும், பேனாவிலும், கண் கண்ணாடிலும் சட்டைப் பட்டன்களிலும் காமராக்கள் வந்து விட்டன.

இதனால் நெகட்டிவ் கழுவும் அவகாமெல்லாம் இன்று மாறிவிட்டது.
டிஜிட்டல் காமராக்களில்  எடுத்த நொடியில் புகைப்படங்கள் வந்து விழுகின்றன.

2ஜீயிலிருந்து இன்றைய நடைமுறையின் 3ஜியைத் தாண்டி 4ஜி திட்டங்கள்  இன்று உருவாக்கத்தில் இருக்கின்றன. புகைப் படக் கலையில் பல வகைகள் இருக்கின்றன.

இயற்கைப் புகைப்படங்கள் என்ற வகையில், ஒரு மொட்டு மலர்வதையும் சூரியன் தோன்றி மறைவதையும் விரைவுக்காட்சிகளில் ஒரே நேரத்தில் பார்க்க முடிகிறது.

விலங்குகள் மற்றும் பறவைகள் என்று பக்கத்தில் இருந்து பார்க்க முடியாத காட்சிகளையும் பல திட்டமிட்டு பொருத்தி வைக்கப்பட்ட ஆளில்லா காமராக்களில் கண்டு ரசிக்க முடிகிறது. பல ஆய்வுகளை மேற்கொள்ள முடிகிறது.

தெருப் புகைப்படங்கள்உணவுப்புகைப்படங்கள்என்ற வகையில், பயணப்புகைப்படங்கள் பிரமாண்டமாக இருக்கின்றன.
சு
ற்றுலாத் தளங்களில் இருக்கும் நினைவுச் சின்னங்களைச் சென்று பார்த்து வர வாய்ப்புக் கிடைக்காதவர்களும்  புகைப்படத்தின் வழி பார்த்து மகிழ்கிறார்கள்.

கடல் அடியில் எடுக்கப்படும் புகைப்டங்களும், மலைவாழ் மக்களைப் பற்றிய புகைப்படங்களும் பல புரிதல்களை நமக்குத் தந்து கொண்டிருக்கின்றன.

பத்திரிக்கையிலும், காட்சி ஊடகங்களிலும், புகைப் படக்காரர்களைப் பல பிரிவுகளாக பிரிக்கலாம்.

திருவிழாக்கள்கண்காட்சி உண்ணாவிரதம் கலை நிகழ்ச்சிகள் அரசியல் கூட்டங்கள் என்று நடைபெறும் நிகழ்ச்சிகஹ்களைப் படம் பிடிக்கும் புகைப்படக்காரர்கள் தனியாக நியமிக்கப்பட்டிருப்பார்கள்.

தடி அடி - மோதல்  - ஆர்பாராட்டம் - சாலை மறியல்வெள்ளம்பூகம்பம் - அடித்தட்டு மக்கள் விடும் கோஷம் என்று பிரட்ச்சனைக் குரிய சம்பவங்களைப் புகைப்படம் எடுப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்கள்.

அரசியல் தலைவர்கள்விஞ்ஞானிகள் என்ற பிரமுகர்களை படம் எடுக்கும் போது அதற்கேற்ற பக்க அடையாளங்களையும் காட்டுவதில் புகைப்படக்காரர்களின் திறமை விளங்கும்.

கள்ளக்கடத்தல் விபச்சாரம் செய்தல் ரேசன் பொருள்கள் கடத்தல் மணல் திருட்டு போன்ற தீய செயல்பாடுகளை அதன் அக்கிரமங்களைப் புகைப்படம் எடுப்பதில் மிகுந்த நுணுக்கத்துடன் செயல்பட வேண்டியிருக்கிறது.

புகைப்படத்தில் இருக்கும் நபர் அவரில்லை, இவரில்லை என்று வரும் பிரட்ச்சினைகளுக்கு இடம் கொடுக்காமல் தத்துருவமாக நுண்பொருள் கருவிகளைப் பயன்படுத்தி புகைப்படம் எடுக்க வேண்டியுள்ளது.

போர்கள் மதக் கலவரங்கள் என்ற கொடூரமான நிலையில் புகைப்படம் எடுப்பவர்களுக்கு மன தைரியம் குறையாமல் இருக்க வேண்டியுள்ளது.

புலனாய்வு துறையால் இரண்டொரு இஞ்சுகளில், அதி நவீனப் புகைப்படக் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன.

விளையாட்டு சாகசங்களைப் படம் பிடிக்கும் சமயங்களில் அகன்ற வெளிக் கோணங்களைப் பெரிதும் பயன்படுத்த வேண்டியிருக்கின்றன.

மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டவர்களான தலைவர்கள்நடிகர்கள்சமூக வாதிகள்தொழிலதிபர்கள் என்று இருப்பவர்களைப் பற்றி செய்தி வெளியிடும் போதும் அதற்கான சூழலுக்கேற்ப புகைப்படங்கள் கோப்பாக முன் கூட்டிய சேமித்து வேப்பது தேவையான சமயத்தில் வசதியாக இருக்கும்.

புகைப்படப் பிரிவில் கலையின் உச்சமாக விளங்கும் திரைப்படங்களுக்கு அதிக கற்பனை திறமை இருக்க வேண்டியது அவசியமாகிறது.

பல வேறுபட்ட கோணங்கள் வழி பிம்மங்களைக் காட்டினால் தான் பார்வையாளர்கள் சலிப்படையாமல் இருப்பார்கள்.

விழி அசைவுகள்உதடு அசைவுகள் என்று நெறுக்கமன காட்சிகளை அடுத்துக் காட்டுவதைப் பெரிதும் விரும்புகிறார்கள்.

இருளில் ஒளி பாய்ச்சப்பட்டு, மிகக் குறுகிய ஒளியில் செதுக்கப்படும் பிம்பங்களை மையமிட்டே புகைப்பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.

பல லட்சம் செலவு செய்து காமரா வாங்கி வைத்தால் மட்டும் திறமையான புகைப்படக் கலைஞனா விளங்க முடியாது.

பல பரிசோதனை முயற்சிகள் பிம்பங்களில் மேற்கொண்டவர்களின் புகைப்படங்கள் உலக அரங்கில் மனிதர்களை கவர்ந்து கலம் கடந்து நிற்கின்றன.

புகைப்படங்கள் கலையாகவும்  முக்கியமான சான்றுகளில் ஒன்றாகவும் இருக்கின்றன.

பள்ளிக் கல்லூரி சான்றிதழலகளிலும், சுய விபர குறிப்புகளிலும் இன்று புகைப் படங்கள் அச்சிடுவது இயல்பாகிவிட்டது.

பத்திரிக்கை முகப்பை புகைப்படங்களில் அலங்கரிப்பதில்  
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க வசதியாக இருக்கிறது.

வியட்டம் போர்க்களத்தில்  எடுக்கப்பட்ட புகைப்படங்களால் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர  முடிந்தது.

போபால் விஷவாயு போன்ற மர்மங்கள் புகைப்படங்களால் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்கள்.

புகைப்படங்களால் மாபெரும் மனிதர்களின் உருவங்களைக் காலம் கடந்தும் பார்க்க முடிகிறது.

புகைப்படங்களின் வளர்ச்சி இன்றைய சூழலில் காற்றையும் கடந்து விண்ணவெளியில் பறந்து கொண்டிருக்கின்றது.

பூமியில் இருந்து கொண்டே ராக்கட்டுகளையும் செயற்கோள்களையும் இயக்குவதில் தானியங்கிக் கருவிகள்  பக்கத்துக் கோள்களில் இருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பிக் கொண்டே இருக்கின்றன.

பால் வெளி அண்டத்தில் சுற்றும் செயற்க்கைக் கோள்கள், பூமியைப் போல வேற்றுக் கிரக வாசிகளை இருந்தால் அவர்களைப் படம் பிடித்தும் அனுப்பும் காலம் வெகுதூரம் இல்லை.  

- சந்திரபால் .