Sunday 30 June 2013

பல்கலையின் தேவதை’



china uni girl 2சீனாவின் ரென்மீன் பல்கலைகழ மாணவியின் புகைப்படங்களுக்கு பெரும் சர்ச்சை எழுந்ததைத் தொடரந்து ஆதரவும் கூடிக் கொண்டே வருகிறது .

சீனாவின் ரென்மீன் பல்கலைகழத்தில் சென்ற வாரம் பட்டமளிப்பு விழா கொண்டாடப்பட்டது . இப்பல்கலைகழகம் இசை மற்றும் கலையியல் சார்ந்தது என்பதால் , விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது .

இந்த விழாவில் பட்டம் பெற்ற காங் காங் என்ற மாணவியை புது புது கோணங்களில் நிற்க வைத்து படம் எடுத்தார்கள் .  இந்தப் படங்களை ரென்மீன் பல்கலைகழகம் தன்னுடைய வெப்சைட்டில் வெளியிட்டது .

இந்தப் படங்களைக் கண்டு பலரும் திட்டித் தீர்த்தார்கள். “போட்டாவில் பல ‘போஸ்’களில்  நிற்கும் மாணவி என்ன பெரிய அழகா ?- இது அநாகரிகமானது”. என விமசர்சித்துள்ளார்கள் .

அதே சமயம் காங் காங் க்கு , ‘பல்கலையின் தேவதை’ என்ற பட்டத்தைக் கொடுத்தும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

விமர்சனங்களுக்கு அஞ்சி ரென்மீன் பல்கலைகழகம் தனது வெப்சைட்டை மூடி விட்டதாம். 
 

காஞ்ச மண்ணு

“எந்த ஒரு நாட்லையும் விவசாயி பட்டினி இருக்கக் கூடாதுங்க  - இந்த வார்த்தைக்குள் இருக்கும்  வலி சதாரணமானதல்ல .

ஆனால் , நம் தமிழ் மண்ணில் மட்டும் விவசாயிகள் தற்கொலை செய்வதெல்லாம் அடிக்கடி நடக்கிறது . சொல்லப்போனால் , அது தற்கொலையல்ல . இதுவும் ஒரு வகையில் கொலை தான் .

“வம்பாடு பட்டு மண்ணக்கிட்டி மாரடிக்கிற பொழப்பெல்லாம் போதும்மப்பா …! எங்குட்டாவது அத்தக் கூலிக்குப் போனாலும் காவயித்துக் கஞ்சியாவது மிஞ்சும் . பெரும்பாலான விவசாயிகளின் மனமெல்லாம் இப்படி தான் பாலம் பாலமாகப் பிளந்து கிடக்கிறது .

பத்து - பதினைந்து ஏக்கர்கள் வைத்துப் பிழைக்கும் பெறும் விவசாயிகள் , கந்து வட்டிக்குக் கடன் வாங்கியாவது பயிரு பச்சைகளை விளைவித்துக் கொள்கிறார்கள் .

ஒரு ஏக்கர் , இரண்டு ஏக்கர் – என்று எச்சம் சொச்சமாக வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கெல்லாம் பஞ்சப் பாடுதான் .

பணப்பயிர்களான தென்னை , கொய்யா , எலும்பிச்சை போன்ற தோப்புத் தொறவுகள் ஓரளவுக்குக் கை கொடுக்கலாம் . மற்றபடி மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை மகசூல் கொடுக்கும் பயிர்கள் , களையெடுப்புக் கூலிக்குக் கூட  கை கொடுப்பதில்லை .

ஒரு பயிரை விளைவிக்க , நான்கிலிருந்து ஐந்தாரு முறை நிலம் உழுது -  ஆள்விட்டு பாத்தி கட்ட– விதை அல்லது நாற்று வாங்கி – நடவு கூலி கொடுத்து – முதல் தவணை களையெடுத்து – வெட்டிக் கட்டி மண் அணைத்து – மருந்தடித்து – உரமூட்டைக்குக் காசு திரட்டி கடன் பட்டு – அறுப்புக் கூலி கொடுத்து – ஏற்றுக் கூலி – இறக்குக் கூலி தொடங்கி  – கமிஷன் வரைக்கும்  குடும்பமே உழைத்த உழைப்பை சந்தையில் கொட்டி வைத்தால் , ஆளாளுக்கு வந்து நினைத்த விலையை நிர்ணைத்து ஏழம் விட , உழவன் ஒரு மூலையில் அமர்ந்து இருக்கிறான் . தரகர்கள் தாராளமாக லாபம் பார்க்கிறார்கள் .

நினைத்த இடத்திற்கு கை மாற்றி விடுகிறார்கள் .

விவசாயிகள் கமிஷன் கடையில் முன் கூட்டியே வாங்கிய பணத்திற்கு வட்டியோடு சேர்த்து பூக்களையோ – காய்களையோ கொடுத்து விட்டு , அதிலிருந்து கழித்த மிச்சத்தைப் பெற்று போகிற வழியில் அழுகிய பழங்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் கதைகளெல்லாம் எங்கும் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் .

“சம்சாரி வீட்டுல சாமத்துக்குத் தானப்பா சோறு – என்ற பழமொழிக்கு உதாரணங்களாகவே இன்னும் காயந்து கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு மத்தியில் , காவிரி நீர் பிரட்ச்சனை யெல்லாம் ‘எளைச்சவனுக்கு முதுகில் குத்து என்பது போல நடந்து கொண்டிருக்கின்றன .

கட்டட வேலை – 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் – என்ற வேலைகளுக்கெல்லாம் நல்ல சம்பளம் கிடைப்பதால் விவசாயத்துக்கு வேலையாட்கள் கிடைப்பதுமில்லை ,கிடைத்தாலும் கூலி கொடுக்க பெரும்பாலான உழவர்களுக்கு வக்கும்மில்லை .  
மானிபம் – உரம் தள்ளுபடி – விவசாயக் கடன்கள் – என்று பசுமையில் புரட்சி ஏற்படுத்துவதாக வரும் திட்டங்களெல்லாம் கோமணம் கட்டி பாடுபடும் மக்களுக்குத் தெளிவாகத் தெரிவதேயில்லை .

பெருநகரங்களில் காய்க்கடைகளில் டோக்கன் வாங்கிக் கொண்டு வரிசையில் நிற்கிறார்கள் . வேண்டிய காய்களை பேரம் பேசும் வேலைக்கே இடமில்லாமல் குறித்த விலையில் எண்ணிக் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள் .

சென்னை நீங்களாக, மற்ற மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து – விவசாய நிர்வாணத்தொகையாக ஏக்கருக்கு 15 மட்டும் தருவதாக தமிழக அரசு அறிவித்ததை புறக்கணித்து விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்திப் பார்க்கின்றன . ஏக்கருக்கு 30 ஆயிரம் இருந்தால் வரவேற்பதாகவும் வாடி பயிர்களுக்கு வாதாடி வருகிறார்கள் .

“எந்த ஒரு நாட்லையும் விவசாயி பட்டினி இருக்கக் கூடாதுங்க  - இந்த வார்த்தைக்குள் இருக்கும்  வலி சதாரணமானதல்ல .

ஆனால் ,நம் தமிழ் மண்ணில் மட்டும் விவசாயிகள் தற்கொலை செய்வதெல்லாம் அடிக்கடி நடக்கும் . சொல்லப்போனால் , அது தற்கொலையல்ல . இதுவும் ஒரு வகையில் கொலை தான் .

உழைத்து அழுத்த விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டியதெல்லாம் இடையில் உள்ள தரகர்களுக்கே கிடைக்கிறது . யாரிடம் கையேந்த முடியும் …? அடுத்த போகத்தை எப்படி விளைவிப்பது..?

- சந்திரபால் .

திருமணக் கடனாளிகள் .


இன்றைய நகரமயமான வாழ்க்கையில் திருமணச் சடங்கள் எல்லாம் பொருளாதாரத்தை மட்டுமே மையப்படுதியே நடந்து வருகின்றன .

30 வயதுக்கு மேலாகியும் திருமணம் நடக்காமல் ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஏராளம் இருக்கிறார்கள் .

உரிய வயதைக் கடந்தவுடன் திருமணமாகாத பிள்ளைகள் வீட்டில் 
இருப்பது, கிராமங்களில் பெறும் மானப்பிரட்சனையாக இருக்கும் .

மூத்த பெண்ணைத்தொடர்ந்து , நான்கைந்து பிள்ளைகள் இருந்தால் , அது இன்னும் சிக்கல் . அதில் தாயோ -  தந்தையோ , யார் ஒருவர் இல்லாமலும், இயலாமலும் இருந்தால் , அந்தக் குடும்பத்தில் குழந்தைகள் பிறந்ததே சாபமாக இருக்கும் .

கருப்பாகவோ , ஒச்சமாகவோ , இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண்ணைக் கரை சேர்க்க முடியாமல் பெற்றோர்கள் தவிப்பார்கள் .

ஒவ்வொரு முறை மாப்பிள்ளை வரும் போதெல்லாம் , டீ வாங்கிக் கொடுத்து , பெண்ணின் கையால் தண்ணீர் கொடுத்து நிற்கச் செய்வது பெறும் சலிப்பாகவும் வேதனையாகவும் இருக்கும் . மாப்பிள்ளை கொஞ்சம் அழகாக இருந்தால் பெண் வீட்டாருக்கு பயம் வந்து விடும் . “இந்தத் தடவையாவது , சம்மந்தம் கூடி வராதா …! என்றேங்கும் குடும்பங்கள் இயலாமையால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .

தோஷம் , சனி என்று ஜாதக் கோளாறுகளைக் காரணம் காட்டி பிழைக்கும் கூட்டம் இதில் புகுந்து சமத்தான லாபம் பார்க்கிறது .
அறிவிலிகளாக வாழ்ந்து கடக்கும் மக்கள் என்ன செய்வார்கள் …? மன திருப்திக்காகக் கண்டதைச் சொல்லிக் கேட்பதை ஆறுதலாக நினைக்கிறார்கள் .

அப்படிப் பார்த்தால் , கிராமத்து மக்களுக்குத் தான் இந்த கதியென்றால் …. நகரமக்களுக்கு திருமணங்களால் வரும் பிரட்சனைகள் முழுக்க முழுக்க பொருளாதாரத்தை மையப்படுத்தியே இருக்கிறது.
கிராமத்து வீட்டு வாசல்களில்  50 பேர் வரை, படுத்துறங்கும் வசதியெல்லாம் இன்றும் இருக்கிறது . ஆனால் நகரங்களில் வாசல் கூட இருப்பதில்லை .

புறாக் கூண்டுகளைப் போல நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வரும் நகரமக்கள் தங்கள் சொந்த வீட்டையே வாடகைக்கு விட்டு , பெரிய வீடுகளில் வாடகைக்குக் குடியிருக்கிறார்கள் .

கேட்டால் , வீட்டில் இருக்கும் மகளைப் பெண் கேட்டு வருபவர்களுக்குப் பெரிய வீடாக இருந்தால் தான் பிடிக்குமாம் . அதனால் தான் பெரிய வீடுகளைக் காட்டி திருமண்ததை முடிக்க ஏற்பாடு செய்து காத்திருக்கிறார்கள் .

அதுவும் திருமணத்தை வீட்டில் பந்தி வைத்து நடத்தும்  இடவசதி யெல்லாம் நகரத்தில் எந்த வீட்டிலும் இல்லை . அப்படியே இருந்தாலும் முகவரி கண்டுபிடித்து வருவதற்குள் கல்யாணம் முடிந்து பந்தியும் தீர்ந்து விடும் . [வேறென்ன, ரோட்ல ஒதுங்கவா முடியுது .]
திருமண மண்டபங்களின் வாடகை விலை யேற்றமெல்லாம் நடுத்தர மக்களுக்கு , சக்திக்கு மீறியதாக இருந்து வருகிறது . உறவுகளையும் – நண்பர்களையும் திருப்திபடுத்தவே , சம்மந்தப்பட்டவர்கள் படாத பாடுபடுகிறார்கள் . 

தங்கள் கௌரவத்தைக் காட்டவே இப்படிப்பட்ட கல்யாணக் காது குத்துகளை, மஹால்களில் நடத்தும் கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இதனால் , பல வருடங்கள் கடனாளியாக வாழ வேண்டியிருக்கிறது .
வரதட்சனையின் அளவில் தங்கத்தின் மதிப்பை ஈடு செய்ய முடியாமல் பெற்றோர்கள் ,பெண் பிள்ளைகளுக்காவே உழைத்து ஓய்ந்து விடுகிறார்கள். பருவம் எய்தியவுடன் , நகை சேர்க்க ஆரம்பிக்கிறார்கள் .

அதிலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் , தங்கள் திருமணங்களைத் தாங்களே முடித்து கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் .

“வீட்டைக் கட்டிப்பார், கல்லயாணத்தை முடித்துப் பார் - என்று ஒரு பழமொழி சொல்வார்கள் . இரண்டுமே நிறைவேறுவதற்குள் வாழ்க்கையில் பாதி முடிந்து விடுகிறது .

அரசு வேலை – எதிப்பார்ப்புகள் என்று , பேஜ்சுலர்களுக்கும் , முதிர் கன்னிகளுக்கும் ஏற்பட்ட முடிச்சுகளை அவிழ்ப்பது அவ்வளவு சுலபமானதல்ல .

நமது மூத்த பழங்கால திருமணச் சடங்கு சம்பிரதாயங்கள் எப்படி இருந்தது என்பதை எப்படி புரிய வைக்க முடியும் ….? யார் ஏற்றுக் கொள்வார்கள் …?
நெல்லும் , பூவும் சேர்த்து முடிந்து தாளியாகக் கோர்த்து திருமணம் நடத்துவார்கள் .  வீரம் – உழைப்பு மட்டும் நம்பி இருப்பார்கள் .  
பெண்கள் முன்னிலைப் படுத்தப்பட்டார்கள் . அதற்காக இப்போது இருக்கும் நடைமுறையைப் போல , வரனுக்குத் தட்சணை கொடுத்ததாகத் தெரியவில்லை .

காலம் மாறிவிட்டது . மதிப்பீடுகள் சிதைந்து விட்டது .
மானம் – கௌவரம் என்று பணத்திற்காகவும் அழகிற்காகவும் , கடைசி வரைக்கும் வாழமுடியாமல் அலைகிறார்கள் .


-         சந்திரபால் .

Friday 28 June 2013

சித்தர்களின் வெளி .

நினைவுகள் நுரை தள்ளி  
இரவைக் கிழித்துத் தொங்கவிடும் பிம்பங்கள்
சலங்கை கட்டி ஆடுகின்றன.

உயிர் அனத்தித் துடியாய் துடிக்கின்றது
மாயைச் சிலந்தியாக மனம் தப்பிக்க வழியிருந்தும்
சுருண்டு கத்தையாக வழிகின்றது.

வழி துணை இழந்த நடுப்பாதையில்
வலக்கையிலும் இடக்கையிலும் மாறி மாறித் திரும்பி
ஊர்வலத்தில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் அலறுகின்றன

முகம் வெளிரிய வார்த்தைகள்

ஆயிரம் கொலைக்குறிப்புகளுக்குத்
தேதிகளிட்டு வக்கிழந்த சாயத்தில்  
உச்சரிப்பின் முடிவுகளில் எச்சிலூறுகின்றன.
மரியாதை நிமித்தமாக வேஷமிடுகின்றன
தெளிவற்ற தூரங்களில்
உடைந்த கால்களோடு பயணிக்கின்றன

பறவைகளின் ஒலி அதிரவுகளில்
சங்கதிகள் எழுதிய கமகத்தில்
இவர்களின் சிரிப்புகள் கூட ஏதோ இரைச்ச லெனப்பட்டது.

இருளுக்குள் பதுங்கிய மௌனத்தின் மீது 
டார்ச்  அடித்து விளையாடுவார்கள்
சித்தர்களின் மனவெளி வேண்டி
கெஞ்சுகிறேன் அதனாலும் உருகும் என் தொனி. 

-சந்திரபால் .