Friday, 20 July 2012

எனவே சீமான் வடிவே!


வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்.
வாழ்வைத் தமிழுக்காக எழுதிக்கொடுத்த பச்சைத் தமிழன்.
தமிழனுக்குத் தோள் கொடுக்க மட்டும் குனியும் சுத்த தமிழன்.

சாதியா அதனால் என்ன?
மதமா இருந்தால் என்ன?

நீ தமிழன் நீதான் தமிழன்
அஃதே அஃதே ஓரினம்
அதுதான் அதுதான் ஒரே இனம்

நீ தமிழன் நீ தமிழன் என்று பிற மாநிலத்தால் நீர் இல்லாமலும்,
கடலில் மீன் இல்லாமலும் அவதியுறும், அனாதைகளாக அகதிகளாக அழிக்கப்பட்ட தமிழர்களை,
நான் தமிழன் நான் தமிழன் என்று, கர்வம் ஏற்றி நாம் தமிழராய் ஒன்றிணைத்த வைர நெஞ்சு. சறுகுகளைப் பட் பட் பட் பட்டென்றெரிபட வைத்த அக்னிக்குஞ்சு.

ஆதித்தனார் சொன்ன நாம் தமிழர் கொள்கையை உலகறியச் செய்த செல்லவச் சீமான் ஒரு கொள்கைச் சீமான்.

உலகில் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் வரும் பிரட்சனைக்கு எழும் முதல் குரல் இவர் குரல். எழுதும் முதல் மடல் இவர் விரல்.

ஈரமில்லாத நெஞ்சில் தமிழ் ஈழம் எப்படி நனையும்?
இருப்பாய் தமிழா நெருப்பாய் எனவே சீமான் வடிவே.

கற்புக்கரசி கண்ணகியா? மாதவியா? என்றால் கற்பிழந்தவன் கோவலன் மட்டும் தான் என்பது போல,
திராவிடனா? தமிழனா? -  எரிந்தது ஒரு ஜனக்கூட்டம் என்று பார்த்தால் என்ன?

பேச்சும் கூச்சலும் இருந்தென்ன லாபம்?      
எது நடந்தாலும் அது அதிகாரத்தின் வழி நடக்கும்.
வரும் ஒரு நாள் ஜனநாயக பாரதம்!
கூடாது இனியொரு தாமதம்!

No comments:

Post a Comment