Wednesday 15 August 2012

தாய்ப்பால்



தாய்ப்பால் என்பது, பாலூட்டிகள் உயிர் நனைக்கும்
வெள்ளை பந்தம்.

செழித்து வளர குழந்தைக்குப் ஸ்பரிஸித்து ஊட்டும் அடி உரம்.
பிள்ளை, தாய்பால் குடிக்கும் சப்தம் பெற்றவளுக்கு இனம் புரிந்த சந்தோஷம்.

தாய்பால் பசிக்கு மட்டும் கொடுப்பதல்ல.
தாய்ப்பால் மட்டுமே சிறந்த வயித்தியம்.

தானாக எழுந்து நடந்து, உணவு செரிக்கும் வரை,
தாயின் கதகதப்பும் அரவணைப்பும் சேர்ந்துதான் தாய்ப்பால்.

உயிர்களில் மனிதர்களைத் தவிர எல்லா உயிரினங்களும், தானாக தான் தாயிடம் சென்று பால் குடிக்கின்றன.மனிதனுக்கு மட்டும் அடுத்தவன் உதவி தேவைப்படுகிறது.

மாடல் அழகிகளுக்கு மத்தியில், தாய்ப்பாலுக்கும் நல்ல விலை கிடைக்கிறது.

பாலூட்டுவதைச் சலிப்பாக நினைத்து, அதற்கு நேரமில்லை என்று ஓடிக் கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் எதைத் தேடுகிறார்கள் என்பது விளங்கவில்ல.

வேலை சம்பளம் என்று ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் பிள்ளைகளுக்கு சீக்கீரமே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்கள். வேலைக்காரப் பெண்களிடமும், வாடகைத் தாய்களிடமும் பெற்ற பிள்ளைகளை ஒப்படைத்து விடுகிறார்கள்...

வசதி குறைந்த பெண்களை விட, சொகுசான வசதி வாய்ப்புடைய  தாய்களே பிள்ளைகளுக்குப் புட்டிப் பால் கொடுக்கிறார்கள்.

தாய்ப்பால் கொடுப்பதால் தங்கள் அழகு கெட்டு விடுகிறார்கள்.
தாய்ப்பால் ஊட்டுதில் குழந்தை மட்டும் பயனடைவதில்லை. தாயும் சேர்ந்து தான் பயனடைகிறாள்.

தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கு, மார்பக புற்று நோய் வருவாத மருத்துவர்கள் கணித்திருக்கிறார்கள்.  

அதுமட்டும் அல்ல தாய்ப்பால் குடிக்கும் குழந்தை, பெண் குழந்தையாக இருந்தால் பிற்காலத்தில் அந்தக் குழந்தைக்கும் மார்பக புற்று நோய் வருவதைத் தடுக்கலாம். குழந்தையின் இரத்த சக்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் தாய்ப்பால் ஆரஞ்சும் -  மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்கும். இதனை நீர்ம கங்தங்கம் என்று அழைக்கின்றனர். 

இதில் ஊட்டச் சத்துக்கள் பெருமளவில் இருக்கின்றன. இதனால் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்திகள் அதிகம் கிடைக்கின்றன. 

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகிவிடும். இதனால், குழந்தைக்கு ஏற்பபடும் ஆஸ்துமா, ஒவ்வாமை, டைப்பாய்டு, உடல் பருமன் இழப்பு போன்ற நோய்கள் எதும் வராமல் தடுக்கப்படுகிறது.

குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு தினமும் சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்பதற்காக அந்தப் பெண் தினமும் 600 கலோரியை கூடுதலாக இழக்கிறது.

சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவுப் பொருள்கள், நீர் போன்றவை சரியான விகித்ததில் அந்த தாய் எடுத்து வந்தால் தான், அவள் தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால்,அவளது உடல் திறன் பாதிக்கப்படு்ம். தாய்ப்பால் சுரப்பு குறைந்து விடும். 

தாய்ப்பால் ஊட்டும் பெண்களின் மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை.
சில பெண்களுக்கு மார்பகம் பெரிதாக இருக்கும். ஆனால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு மார்பகம் சிறிதாக இருக்கும். அதே நேரம் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டும் விதத்தையும், பொறுத்து தான் ஒரு பெண்ணுக்கு எந்த அளவு தாய்ப்பால் சுரக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் கூட ஒரு பெண்ணின் தாய்ப்பால் சுரப்பு திசுக்களைத் தூண்டிவிடும்.

சில தாய்மார்புகளுக்கு சில நாட்களிலேயே தாய்ப்பால் சுரப்பு வெகுவாகக் குறைந்து விடும். இதற்கு காரணம் அவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாததும், ஹார்மோன் சுரப்புக் குறைபாடும் தான்.

பல இளந்தாய்கள் அலுவலகத்தில் பாலூட்ட சரியான இடம் இல்லாததால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்கள்.

மேல் நாட்டில் தாய்ப்பால் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரத்த தானத்தைப் போல தாய்ப்பால் தானமும், உயிர்காக்கும் செயலாகக் கருதப்படுகிறது.

சேமிக்கப்பட்ட தாய்ப்பால், அநாதைக் குழந்தைகளுக்கும், எயிட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் வழங்குகிறார்கள்.
  
தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஒவ்வோரு ஆண்டும் தாய்ப்பால் வாரமாக ஆகஸ்ட் முதல் வாரம்  கொண்டாடப்படுகிறது.

இவ்வாறாக, இன்றைய பெண்கள், தங்களும் - தங்கள் பிள்ளைகளும் நலமுடன் வாழ  தாய்ப்பாலின் முக்கத்துவத்தை உணர வேண்டும்.
























No comments:

Post a Comment