ஸ்டெம் செல்கள் உலகில் உள்ள அனைத்து உயிரிகளுக்கும் ஆதாரமாகத்
திகழ்கின்றன. ஸ்டெம் செல் இல்லாமல் எந்த ஒரு உயிரும் இதுவரை வாழ்ந்ததில்லை.
அதாவது,
உடலின் எந்த ஒரு செல், தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டு, உடலில் இருக்கும் 200 - க்கும் மேற்பட்ட
செல்களை தேவையான தருணத்தில் உருமாற்றிக் கொள்கிறதோ அந்த செல்லை, ஸ்டெம் செல்
என்கிறது அறிவியல்.
நம்
மனித உடலில் சுமார்
1 லட்சம் கோடி
செல்கள் இருந்தாலும், அதற்கெல்லாம் ஸ்டெம் செல்களே
அடிப்படையாக இருக்கின்றன.
நம்
உடலில் உள்ள எந்த ஒரு செல்லுக்கும் இல்லாத சிறப்பு ஸ்டெம் செல்களுக்கு மட்டுமே
உண்டு.
ஸ்டெம்
செல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வதோடு, வேறொரு பண்புடைய மற்றொரு
செல்லையும் அது உருவாக்கும். மேலும், உடலில் உள்ள எல்லா
வகையான செல்களாகவும் உருமாறிக் கொள்ளும்.
ஃபீடல்
ஸ்டெம் செல், அடல்டு ஸ்டெம் செல், ஆம்னியாட்டில் ஸ்டெம் செல், இன்டியூஸ்டு
ப்ளூரிபொடென்ட் ஸ்டெம் செல் என பல்வேறு வகையான ஸ்டெம் செல்கள் நம் உடலில்
இருக்கின்றன.
மனிதனின்
விந்தனுவிலும், கருமுட்டையிலும் இருப்பது தான் முதல் ஸ்டெம் செல்கள். இவைகள் கரு உருவாவதற்குப்
பயன்படுகிறன. இரண்டும் இணைத்த பிறகு 4 அல்லது 5
தினங்களில்
உருவெடுப்பது தான் embryonic stem cell கள். இது மனிதனின் முழு செல்களையும் உருவாக்க கூடிய
ஸெடெம் செல்களாக இயங்குகின்றன.
மேலும்
குழந்தை பிறந்த பின், தொப்புள் கொடியில் adult stem cellகள் வளர்கின்றன.
மனிதனின்
முழு உடலையும் உருவாக்க கூடிய செல்கள் இல்லையெனிலும் அதிகப்படியான உறுப்புகளை
உருவாக்க கூடிய செல்லாக மாறும் சக்தி adult stem cellகளுக்கு வாய்க்கப்ட்டிருக்கிறது.
வளர்ந்த
மனிதனின் முதுகுத் தண்டில் அதிகப்படியான செல்களை உருவாக்க கூடிய stem cells உள்ளன. இது மட்டுமல்லாமல்
உடம்பின் பல பாகங்களில் இந்த stem cell கள் இருக்கும்.
பொதுவாக
ஸ்டெம் செல்கள், சிசுகளில் இருந்தும், உடலின்
திசுக்களிலிருந்தும் எடுக்கப்படுகின்றன..
மேலும்
இது மட்டும் இல்லாமல் செயற்கையான ஸ்டெம் செல்களும் உருவாக்கப்படுகின்றன. அவை, தூண்டப்பட்ட ஸ்டெம்
செல்களாகும்.
நமது
உடலில் தோல் ரோமத்தில் உள்ள செல்களை, மரபணுவியல் தொழில் நுட்பத்தின் மூலம் ஸ்டெம்
செல்லாக மாற்றுகிறார்கள். இதுவே
தூண்டப்பட்ட செல்களாகும்.
ஸ்டெம்
செல்களின் ஆய்வுகள், வெறும் ஆய்வாக மட்டுமே இல்லாமல், மருத்துவத்திலும்
பயன்படுத்தப்பட்டு சில உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து மனித இனத்தை காக்க முடியும்
என்பதை 1975
ஆம் ஆண்டு
மருத்துவர்கள் நிரூபித்தார்கள்.
1970
களில் உடலில்
ஏற்படும் எல்லாவகையான புற்று நோய்களுமே, சிகிச்சைக்குப் பிறகும் மீண்டும்
வளர்ந்துவிடும் தன்மையில் இருந்து வந்தன.
புற்று
நோயில் உள்ள ஒரு குறிப்பிட்ட வகை செல்கள், ஸ்டெம் செல்களின் பிரத்தியேக
குணங்களைக் கொண்டிருந்தது தான், இதற்கான அடிப்படைக் காரணம் என்பதைக்
கண்டறிந்தார்கள்.
அதனால்,
சிகிச்சையாக வேறு ஒருவரின் எலும்பு மஞ்சையிலிருந்து,
ஸ்டெம் செல்கள
எடுத்து ஒரு நோயாளிக்கு செலுத்தும் போது, அங்கு ‘புதிய நோய் எதிர்ப்பு சக்தி’ ஏற்படுகிறது.
எலும்பு
மஞ்சையால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, நோயாளியின் புற்றுநோயை எதிர்த்து
போராடி அழிக்கும் திறன் கொண்டது” என்பதை அறிஞர்கள் கண்டறிந்தார்கள்.
இதை 1975-ல், ரத்தப் புற்றுநோயாளி ஸ்டாலின் என்பவருக்கு உலகின் முதல் எலும்பு மஞ்சை மாற்று சிகிச்சை செய்தார்கள்.
இச்சிகிச்சையில், அவர் சகோதரரின் எலும்பு மஜ்ஜையையும், கதிர்வீச்சு மற்றும் மருந்து சிகிச்சையையும், சேர்த்து வெற்றிகரமாக செய்து முடித்ததார்கள். இதுவே உலகத்தின் முதல் stem cells சிகிச்சை என்கிறார்கள்.
தூண்டப்பட்ட ஸெடம் செல்கள் உருவாக்கும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, தோலில் இருக்கும் செல்களில் ரத்த அணுக்களை உருவாக்க முடியும் என்பதை கனாடா நாட்டு ஸ்டெம் செல் ஆய்வாளர் மிக் பாட்டியா நிரூபித்துள்ளார்.
தோல் செல்களிலிருந்து ரத்தத்தை உருவாக்கியிருக்கும் இந்தக் குழு, இனி அதே தோல் செல்களில் இருந்து உடலின் வேறுபகுதிகளின் செல்கள் பலவற்றையும் உரிவாக்க முடியுமா என்று ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
மூளையைப் பாதிக்கும் டிமென்ஷியா போன்ற பல்வேறு மூளைக் கோளாருகள் மூளையின் செல்களை அழித்து விடுவதால், மூளை செயலிழந்து விடுகிறது. இந்தப் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தோல் செல்களிலிருந்து முளைசெல்களை உருவாக்க முடிந்தால் அவற்றை மூளைக்குள் செலுத்தி மூளையின் செயல்பாட்டை சீரமைத்து விட முடியும் என சொல்கிறார்கள்.
இதனால், ஸ்டெம் செல்கள் மருத்துவத்துறைக்கு கிடைத்துள்ள ஒரு `அட்சயப் பாத்திரம்’ அல்லது `அமுதசுரபி’ என்றே சொல்லலாம்.
ஏனென்றால் மருத்துவத்துறை இதுநாள் வரையில் சந்தித்து வரும் எண்ணற்ற சவால்களை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டே வருகின்றது இந்த ஸ்டெம் செல்களில் கண்டுபிடிப்புகள்.
பால் பற்கள், மற்றும் கடைவாய் பற்களைப் பிடுங்க நேரும்போது அவற்றிலிருந்து ஸ்டெம் செல்களை உருவாக்கும் முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. அதில் அண்மையில் ஜப்பானிய ஆய்வாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
அதன்மூலம், ஸ்டெம் செல் வங்கிகள் உருவாக்கப்பட்டு, அவை ஜப்பானியர்களுக்கு ஒத்துப்போகிறதா என்றும் ஆராயந்தார்கள். ஏறக்குறைய 20 சதவீத ஜப்பானியர்களின் மரபியலில் இந்த ஸ்டெம் செல்கள் ஒத்துப்போவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
யேல் பல்கலைகழக ஆய்வாளர்கள் முடி வளர தூண்டும் ஸ்டெம் செல்களைக் அணாமையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஆதார செல் தோலின் கொழுப்பு அடுக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
இதன்மூலம், முடியின் வேர்ப் பகுதியில் உள்ள ஸ்டெம் செல்களைத் தூண்டி வழுக்கை தலை உள்ளவர்களுக்கு வேர்க்கால் பகுதியில் உள்ள முடியை சீக்கிரமாக வளரச் செய்தார்கள்.
இந்த வரிசையில் மேலும் ஒரு மைல்கல்லாக, உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஸ்டெம் செல்களில் இருந்து, இயற்கையான இதயத்தைப் போலவே துடிக்கும் திறனுள்ள புதிய இதய தசைகளை உருவாக்கினார்கள்.
வருடா வருடம் லட்சக் கணக்கான உயிர்களை பலிகொண்டு வரும் இதய நோய்களுக்கு ஸ்டெம் செல்கள் மூலம் தீர்வு உண்டு என்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் நிரூப்பித்தார்கள்.
இந்த பிரத்தியேகமான இதய தசை உயிரணுக்களின் துடிக்கும் வேகம், ஓய்வாக உள்ள மனிதர்களின் இதய துடிப்பின் வேகத்தை ஒத்து இருக்கிறது.
அதாவது, ஒரு நிமிடத்துக்கு 60 துடிப்புகளாக இதயம் இயக்குவதாகும்.
இதயத்தின் ரத்தத்தை வெளியேற்றும் திறனைப் பாதிக்கும் குறைபாடான
`அரித்மியா’ நோயிற்கு தீர்வு கிடைக்கவே
இந்த ஸ்டெம் செல் ஆய்வு, மேற்கொள்ளபட்டுள்ளது.
இது மட்டும் இல்லாமல், பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்தும் ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்பட்டு, அதற்கென உள்ள வங்கிகளில் 0 டிகிரிக்கும் குறைவான தட்ப வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கிறார்கள்.
சம்பந்தப்பட்ட நபருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படும்போது, இந்த “ஸ்டெம்” செல்கள் மூலம் நோயைக் குணப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களையும் “ஸ்டெம்” செல்கள் குணப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
“ஸ்டெம்” செல்களை இதய நோயாளியின் உடலில் செலுத்தப்பட்டு ஒரே நாளில், ரத்தக்குழாயில் உள்ள கோளாறுகளைக் குணப்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டெம் செல்களை வைத்து, எலும்பு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகளுக்கும் தற்போது செயற்கையாக தயாரிக்கப்பட்ட எலும்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்க்கான பரிசோதனையில் இஸ்ரேல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு புதிய செல்களை அகற்றி விட்டு புதிய செல்களை மனித உடலில் உருவாக்கும் முயற்சியே ஸ்செம் செல் ஆராய்ச்சியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இனி மனித உதிரி பாகங்கள் உண்டாக்க எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. தன் கையே தனக்குதவி என்று நம்மை நாமே மருத்துவர்கள் உதவி கொண்டு காப்பாற்றிக் கொள்ள முடியும்.
ஸ்டெம் செல்கள் வழியாக அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணமுடியும் என்று திட்டவட்டமான அறிக்கை இன்னும் வரவில்லை என்றாலும, இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் நிலமை மாறும்.
மருத்துவத்தில்
புதுபுது கண்டுபிடிப்புகள் வரும் போதெல்லாம் புதுபுது நோய்களும் வந்து கொண்டே
இருக்கின்றன.
உலகத்தில்
கடைசி மனிதன் இருக்கும் வரை, கண்டுபிடிப்புகள் தொடந்து கொண்டே இருக்கும்.
அதோடு,
ஸ்டெம் செல்கள் உலக மருத்துவத்தில் மாபெரும் மாற்றமாக இருக்கும்.
No comments:
Post a Comment