Wednesday 15 August 2012

ஹறப்பா




5000 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்களுக்கான அடையாளங்கள் சிந்து நதிக்கரை ஓரத்தில் தோண்டி எடுக்கப்பட்டது. தொடர்ந்து இன்றளவும் துப்பறியப்படுகிறது.

சிந்து நதிக்கரையின் சமமான வெளியில், தோன்றிய இந்த நாகரீகம் உலகத்தின் முதல் நாகரீகம் என்றும், எகிப்து மற்றும் மெசபதோமியா போன்ற பழமையான நாகரீகஙகளோடு தொடர்பு கொண்டுள்ளது என்றும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தக்க சான்றளித்துள்ளனர்.

இன்றைய பாகிஸ்தானிலிருந்து பலுகிஸ்தான் வரையும் சிந்துவெளி நாகரீகம் பரவியிருந்தது.

ஹறப்பா மற்றும் மொஹஞ்சதாரோ பகுதிகளையே சிந்து சமவெளி மக்கள் மையமிட்டிருந்ததாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மொஹஞ்சதாரோ என்றால், செத்தவர்களின் மேடு என்ற பொருள்படுவதாகச் சொல்கிறார்கள்.

இந்நாகரிக வளர்ச்சியின் உச்சக்கட்டம் கிமு.2500 என்றே அறிஞர்கள் கொள்ளுகின்றர்.

கடல் கோளாலால் மூழ்கிய தமிழகத்தின் தென்னகப்பகுதியான லெமூரியா கண்டத்தில், கண்ணடெடுக்கப்பட்ட முத்திரைகளும் எழுத்துக்களும் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களின் தடயங்களில் காணப்படுகிறது.

பிராமி என்று சொல்லப்படும் தாய்மொழித் தமிழின் மூத்த வரிவடிவம் சிந்து சமவெளிக் கல்வெட்டுகளிலும், லெமூரியா கண்டத்தின் கல்வெட்டுகளிலும், செதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழினம் எப்போது தோன்றிய இனம்?
தமிழ்மொழி ந்தக் காலத்தில் தோன்றியது?
தமிழர்களின் வாழ்க்கை எப்படி நடந்தது?
சிந்து சமவெளி மக்களுக்கும், தமிழர்களுக்கும்,
எப்படி தொடர்பு ஏற்பட்டது?
சிந்து சமவெளி மக்களே தமிழர்கள் தானா?

ஆங்கிலேயராலும், வேறு வெளிநாட்டு ஆராச்சியாளர்களாலும், இந்திய அறிஞர்களாலும் வெளிடப்பட்ட தொல்லியல் ஆய்வுகள
பல விதமான தகவல்களை தந்துள்ளன.
சிந்து சமவெளியில் திராவிடர்கள் வாழவில்லை, அவர்கள் வேறு இனம் என்றும், அவர்கள் பேசிய மொழி தமிழ் அல்ல அது ஆரியம் சார்ந்த மொழி என்றும், சொல்லுவோர்கள் உண்டு.

1856ல் கராச்சிக்கும் லாகூருக்கும் இடையேயான புகையிதத் தண்டவாளப் பாதையினை அமைக்க கிழக்கு இந்திய ரயில்வே கம்பனி, சர் ஜோன் மற்றும் வில்லியம் என்ற இரண்டு பொறியியலாளர்களை அப்பகுதிக்கு அனுப்பினார்கள்;.  

ரயில் பாதையினை அமைக்க நிலத்தினைத் துப்பரவு செய்தபோது அங்கு நன்றாகச் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட மிகப்பழைய கட்டிடங்கள் புதையுண்டிருப்பதனைக் கண்டார்கள். தொடந்து வடக்கு நோக்கித் தமது வேலைகளைச் செய்து கொண்டு போகும்போது ஹறப்பா என்னும் பிரதேசத்தில் புதையுண்டிருந்த செங்கற்களை அகழ்ந்தெடுத்தார்கள்.

1922ல் ஆங்கில நாட்டுத் தொல்லியலாளர் சேர் ஜோன் மாஷல் அவர்கள் சிந்துநதியின் கரையோரங்களில் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாய்வழிக் கிடைத்த ஆதாரங்களையும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கண்ட தொல்லியல்
சின்னங்களின் அடிப்படையிலும் தொல்லியல் ஆராய்ச்சி செய்தபோது செழித்தோங்கிய ஒரு மனித நாகரீகம் நிலத்துள் 60அடி ஆழத்தின் கீழ் புதையுண்டு கிடந்ததனை முதலில் கண்டார்.

400 நகரஙகளும் கிராமங்களும் செழித்து வளர்ந்த ஒரு சீர்மையான
நாகரீகம் இருந்ததற்கான செய்திகள் ஆதாரப்பூர்வமாக வெளிப்பட்டன.

ஆங்கிலேயர்களின் ஈடுபாட்டினையும் அவர்களோடு சேர்ந்து வடவிந்திய இந்துகளும் வடவிந்திய முஸலிம்களும் ஆய்வில் ஈடுபட்டார்கள்.

அதன் தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் பழைய கட்டிடங்களும்
எலும்புக் கூடுகளும், ஒழுங்காக அமைக்கப்பட்ட தெருக்களும்,
பெரிய நீச்சல் குளமும், மண்பாண்டங்களும், முத்திரை பதித்த நாணயங்களும், கல்வெட்டுகளும், ஓவியங்களும் அடங்கிய நினைவுச் சின்ங்களைக் கண்டார்கள்.

ஹறப்பாவிலும், மொஹஞ்சதாராவிலும் மட்டும் தான், உலக ஆராய்ச்சியிலே முதன் முதலில் சுட்ட செங்கல் இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பாதாளச் சாக்கடை அமைத்து முறையான நகர சுகாதார அமைப்பில் சிந்து சமவெளி மக்கள் வாழ்ந்தார்கள் என்றால், நாம் இப்போது வாழும் நவீனத்துவத்தை அவர்கள் அப்போதே வாழ்ந்து பார்த்திருக்கிறார்கள். 

ஆண் பெண் தனித்தனியாக குளிக்க வசதியாக குளங்களும் தானியக் களஞ்சியங்களும் ஹறப்பாவில் இருந்திருக்கிறது.
தென் ஆசியாவின் முதன் முதலான விவாசாயம் பற்றி அறிதல்
சிந்துவெளியிலிருந்தே கிடைக்கின்றது. பலுகிஸதானின் மேட்டு நிலங்களிலும் சிந்துவின் மேற்குக் கரைகளிலும் கிமு.6500களில் விவசாயம் புரிந்துள்ளார்கள். அங்கு கோதுமையும் பலவித மிருக வளர்ப்பும் செய்துள்ளார்கள். இவர்கள் செய்த விவசாயத்துக்கு சிந்து நதியே உயிர் நாடியாக இருந்திருக்கக் கூடு்ம்.

சுமேரிய மற்றும் மெசதோமிய மக்களின் முத்திரைகளோடு சிந்து சமவெளி மக்களின் முத்திரைகள் ஒத்திருப்பாதால் இவர்கள் செய்த பன்னாட்டு வணிகம் தெரிய வருகிறது. 

பன்னாட்டு வணிகத்திற்கு பெரிய அளவில் நீர்ப்பாசன
வசதிகள் உதவியாக இருந்திருக்கும் என்றேஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
கோவில்கள் இருந்ததற்கான எதுவித ஆதாரங்களும் இதுவரை
கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஒரு மத குருவின் உருவம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரசர்கள் பற்றிய தகவலோ, அடிமைகள் அல்லது வேறு ஏவல் செய்யும் வேலையாட்கள் பற்றிய எந்தத் தகவலோ எங்கும் கிடைக்கவில்லை.  

நகரில் வாழ்ந்தவர்கள் பலர் வர்த்தகர்களாகவும் கலைஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.


பண்டைய சிந்துசமவெளிச் சிற்பங்களும், விதவிதமான மட்பாண்ட உற்பத்திகளும், உலோக கைவினைப் பொருட்களம், தங்க, செப்பு நகைகளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

செப்பினாலும் வெள்ளியினாலும் செய்யப்பட்ட வட்டத்தாழிகள்
கண்டுபிடிக்கப்பட்டன. கழுத்தில் அணியும் மாலைகள் மணிகளும் முத்துக்களும் சேர்த்துச் செய்யப்பட்டிருந்தன.

யாழ் வடிவ முத்திரை காணப்படுவதால் இசையிலும் ஹறப்பா மக்கள் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகின்றது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்ட ஓவியங்களின் வண்ணங்கள் இன்னும் மறையாமல் இருக்கின்றது.

வீடுகள் கட்டும்போது அதனை அலங்கரிக்க பழிங்கு கற்களும்
விஷேட உருளைக் கற்களும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சில வீடுகள் பெரியதாக அமைந்திருப்பதைப் பார்க்கும் போது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களின் நிலை நமக்குப் புரிகிறது.

யோக அல்லது தியான நிலையில் உள்ள முத்திரைகள் காணப்படுவதால், சிந்து சமவெளி மக்கள் யோக கலை பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பதை நாம் உணர முடிகிறது.

ஏறத்தா 4000 முத்திரைகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.

இம்முத்திரைகளில் காணப்படும் சித்திர எழுத்துக்கள் தமிழின் முத்தைய எழுத்து வடிவமாக இருப்பதால், சிந்து சமவெளிமக்கள் பேசிய மொழி, தமிழ் மொழி தான் என்றும், அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்களே என்றும், உலகத்தில் தோன்றிய முதல் மனிதர்கள் தமிழர்கள் தான் என்றும் தமிழ் அறிஞர்கள் வாதாடுகிறார்கள்.

உலக மொழிகளின் வடிவங்கள், மூத்த தமிழ் எழுத்துக்களின் வடிவமான பிராமி எழுத்துக்களோடு சம்மந்தப்பட்டிருக்கிறன.

சிந்து சமவெளி முத்திரைகளில்...
பிரமி எழுத்துக்களின் வடிவங்கள் ஏராளம் இருக்கின்றன.

சிந்து சமவெளியின்
பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் புதைத்தது
பஞ்சமா....
வெள்ளப் பெருக்கில் மூடி மறைந்த துன்பமா....
விரட்டியத்த அன்னியர்களின் பலவந்தமா...

நிச்சயக் குறிப்புகள் எதுமில்லை...
அவர்கள் விட்டுச் சென்ற தடங்களே
தொடர்ந்து குறிப்பெழுதுகின்றன.











No comments:

Post a Comment