Monday 17 September 2012

புல்லாங்குழல்...


உலக இசைக் கருவிகளில், கம்பிக் கருவிகளுக்கெல்லாம் முன்னோடியாக யாழும், தாளத்தத்துக்கு அடிப்படையாக பறையும், கற்றுக் கருவிகளுக் கெல்லாம் முன்னோடியாக புல்லாங்குழல் இருந்தது.

மூங்கில் தண்டில் வண்டுகள் குடைந்த துளைகளில் நுழைந்த காற்று, இசையாக வெளிவருவதை உணர்ந்த மனிதன் புல்லாங்குழல் செய்து கொண்டான்.

மெல்லிய மூங்கில் தண்டை நெருப்பில் இலேசாக வாட்டி, குறிப்பிட்ட இடைவெளியில் துளைகள் இட்டு, குங்கிலியம் என்னும் மெழுகு தடவி புல்லாங்குழல் தயாரிக்கப்படுகிறது.

எட்டு அங்குலத்திலிருந்து மூன்று அடி நீளம் வரை புல்லாங்குழல் தயாரிக்கிறார்கள்.

மூங்கில் மரத்தைத் தவிர மற்ற மரத்தண்டுகளையும் லெகுவாக இளைத்து உருளையாகச் செய்து புல்லாங்குழல் செய்கிறார்கள்.

உலோகத்தகடுகளிலும் விலங்குகளின் எலும்புகளிலும் இன்று, புல்லாயங்குழல் செய்கிறார்கள்.

துளைகளுக்குப் பதிலாக காற்றின் விசைக்கேற்ப கீ வைத்த பட்டன்களை புல்லாங்குழலில் பயன்படுத்துகிறார்கள்.

சீனர்கள் புல்லாங்குழலில் மாறுபட்ட ஒலிகளை வரவவைப்பதற்காகக், கொத்து கொத்தாக குழல்களை அடுக்கி ஊதும் சாம்போனா (Zampona) கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.

எலெக்ரானிக் கீ போர்டில் புல்லாங்குழல் ஒலியைப் பதிவு செய்து வாசித்தாலும், புல்லாங்குழலில் ஊதி வாசிக்கும் போது கிடைக்கும் இசை போல கீ போர்டில் வாசிப்பது இருக்காது என்கிறார்கள்.

கமகம் என்ற இசை உத்திகள் எல்லாம் புல்லாங்குழல் வாசிப்பவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும்.

அதிகாலை மற்றும் மாலை நேர சூழலுக்கு பெரும்பாலும் புல்லாங்குழல் இசை ஏற்றதாக இருக்கும்.

ஹரிப் பிரதாச் சவ்ராசியர் என்பவர் இந்தியப் புல்லாங்குழல் இசைக் கலைகர்களில் முக்கியமானவராக இருக்கிறார்ர்.

உலப் புகழ் பெற்ற திரைப்படமான டைட்டானிக் படப் பாடலில் வாசித்த புல்லாங்குழல் இசை கல் மனதையும் கரைக்கும் என்பதுண்மை.

80 - களுக்குப் பிறகு, வெளிவந்த இளையராஜாவின் நாட்டுப்புற மரப்பைத் தழுவிய பாடல்களில், புல்லாங்குழலின் பங்கு அதிகமாக இருந்து வந்தது.

A.R. ரகுமான் முதல் படமான ரோஜா திரைப்படத்தில், தொடக்க இசையாக வரும் புல்லாங்குழல் ஓசை தேசிய விருதை பெற்றுத் தந்திருக்கிறது.

சமீபத்தில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பாடலுக்கு வாசித்த இசை முறை சீனர்களின் புல்லாங்குழல் இசையைச் சார்ந்ததாக இருப்பதை நாம் உணர முடியும்.

பெரும்பாலும் சூழலுக்குத் தக்கவாறு வசனங்களுக்குப் பின்னால் புல்லாங்குழல் வாசிப்பது திரைப்படங்களில் பிரமாதமாக இருக்கின்றது.

மேலை நாடுகளில் புல்லாங்குழலுக்கென்றே தனிக்கச்சேரிகள் நடப்பது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சங்க இலக்கியங்களில் புல்லாங்குழல் பற்றிய பாடல்கள் ஏராளம் இருக்கின்றன.

பெரும்பாணாற்றுப்படை மற்றும் குறிஞ்சிப்பாட்டில் ஆம்பல் பண்ணில் குழல் வாசிப்பதாகக் குறிப்புகள் வருகின்றன.

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர். என்று திருக்குறளில் புல்லாங்குழல் பற்றி பேசப்படுகிறது.

"துளை செல்லும் காற்று மெலிசையாதல் அதிசயம்......"என்ற வைரமுத்துவின் பாடல் வரியும், எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற முழுப்பாடலும், புல்லாங்குழல் பற்றி பேசுகிறது.

வளையாத மூங்கிலில் ராகம் வளைந்து ஓடுதே என்று எழுதிய நா. முத்துக்குமார் பாடல் வரியும், புல்லாங்குழலின் அருமையை உணர்த்துகிறது.

பெரிய திருவிழாக்களில் நுற்றுக்கணக்கான புல்லாங்குழலைச் சுமந்து கொண்டு தனக்குப்பிடித்த மெட்டை வாசித்துக்கொண்டே புல்லாங்குழல் விற்பவரக்ளைப் பார்க்க முடியும்.

அவர்களின் குழலிசை பத்துப் பதினைந்து ரூபாய் விற்பனையிலே முடிந்து விடுகிறது.

செனாய், ரம்பெட் போன்ற, புல்லாங்குழலின் வழிவந்த பிற காற்றிசைக் கருவிகளும் புல்லாங்குழலின் சாயலாகவே இருக்கின்றன.

இனிவரும் நூற்றாண்டுகளில் விதவிதமான காற்றிசைக் கருவிகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டாலும், இயற்கையோடு இணைந்த புல்லாங்குழலுக்கு தனி இடம் இருந்து கொண்டே இருக்கும்.






No comments:

Post a Comment