Monday 3 September 2012

எனக்குத் தெரியும்...


இது தான்
நமது கடைசி சந்திப்பென்று
அப்போதெனக்குத் தெரியவில்லை...

உன் முதல் பார்வை
அனைத்தையும் எனக்கு விளக்கவில்லை...

என் பிடிவாதங்களுக்குக்
கடிவாளம் இடாத
உன் மெல்லய இதயத்தில்
இப்போதும் நான் இருக்கிறேனா...?

அப்படி இருந்தால்
அதற்கென வருந்துகிறேன்...

நினைவுகளோடு
எந்தக் கனவாயில் நான் வந்தாலும்
அது உன்னைக் காயப்படுத்தும் என்பதறிவேன்...


2 comments:

  1. காதல் இருந்தா தான் தொல்லை என்பதில்லை. விட்டு ஓடினாலும் அது தொடர்ந்து இயக்கிக் கொண்டே இருக்கும் .

    ReplyDelete