Wednesday 5 September 2012

எதிர் நீச்சல்

வெள்ளத்தில் பழகிய நீச்சல் இது
பள்ளத்தைக் கண்டு நீந்தாமலா நின்று விடும்
கெக்கென்று உலகம் கூச்சல் இடும்
சிக்காமல் காற்று வெண்மேகமும் தொட்டு வரும்
ஓநாய்கள் ஒப்பாரி வைக்கும்…
ஏராளம் கண்ணீரைக் கக்கும்…
இசை பாட்டு மொழி சிலுசிலுப்புக்கு என்னோடு 
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது…

இருண்ட கருப்பு என் மேல் இருக்கும் 
திரண்ட வெறுப்பும் நெஞ்சோடு உரசும்
காலம் தட்டித் தட்டி எனை வளர்க்கும்
வைரம் தீட்டித் தீட்டிப் பளபளக்கும்
என் பாடு கல்லோடு முள்ளோடு
எந்நாளும் கண்ணீரு செல்லாது 
ஐயோ ஐயோ
குய்யோ முய்யோ
அது கண்டு எந்தக் கண்ணும் பார்க்காது
நீ எழுந்து வா என்றென்னை என் நெஞ்சம் சொல்லாமல் இருக்காது…

பறக்க இறகு எனக்காக வளரும்
கிழக்கில் பயணம் அதற்காக விடியும்
மேகம் விட்டு விட்டு மழை கொடுக்கும் 
தாகம் கேட்டுக் கேட்டு விடை கொடுக்கும்
நெஞ்செல்லாம் சங்கீதப் பூக்காடு
நஞ்சென்னும் செடியிங்கு பூக்காது
திக்கும் முக்கும்
உள்ளம் வெல்லும்
எனைத் தீண்டும் என்னைத் தோண்டும் ஓயாது
தீ வளர்த்து தான் இரு கண்ணில் விடி வெள்ளி இப்போது இது போதும்…



2 comments:

  1. Awesome writing!!
    I really wish u for your bright future!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete