என் கனவின் விடுதியில்
நீ தங்கிச் சென்ற
நாட்கள்
ஒரு பனிக்கட்டியைப்
போல
உருகியிருந்தால்
பரவாயில்லை
கூண்டுக்குள்
சிக்குண்ட கீரிப்பிள்ளையைப் போல
நினைகளை வெறித்துப்
பார்க்கின்றன
எனக்கு எட்டிய
வரை
எத்தனையோ ஆறுதல்களைச்
சொல்லிப் பார்த்து விட்டேன்
சொல்லித் தேற்றுமளவுக்கு
அவ்வளவு எளிதானதா அது.
No comments:
Post a Comment