Monday 17 September 2012

கதை சொல்லிகள்

என் கனவின் விடுதியில்
நீ தங்கிச் சென்ற நாட்கள்
ஒரு பனிக்கட்டியைப் போல
உருகியிருந்தால் பரவாயில்லை
கூண்டுக்குள் சிக்குண்ட கீரிப்பிள்ளையைப் போல
நினைகளை வெறித்துப் பார்க்கின்றன
எனக்கு எட்டிய வரை
எத்தனையோ ஆறுதல்களைச்
சொல்லிப் பார்த்து விட்டேன்
சொல்லித் தேற்றுமளவுக்கு அவ்வளவு எளிதானதா அது.

No comments:

Post a Comment