Monday 17 September 2012

உருகும் தொனி

முகம் வெளிரிய வார்த்தைகள்
ஆயிரம் கொலைக்குறிப்புகளுக்குத்
தேதிகளிட்டு வக்கிழந்த சாயத்தில்
உச்சரிப்பின் முடிவுகளில் எச்சிலூறுகின்றன

மரியாதை நிமித்தமாக வேஷமிடுகின்றன

தெளிவற்ற தூரங்களில்
உடைந்த கால்களோடு பயணிக்கின்றன

பறவைகளின் ஒலி அதிரவுகளில்
சங்கதிகள் எழுதிய கமகத்தில்
இவர்களின் சிரிப்புகள் கூட
ஏதோ இரைச்ச லெனப்பட்டது.

இருளுக்குள் பதுங்கிய மௌனத்தின் மீது
டார்ச் அடித்து விளையாடுவார்கள்
என்பது தெரிந்த ஒன்று தான்

சித்தர்களின் மனவெளி வேண்டி
கெஞ்சுகிறேன் அதனாலும் உருகும் என் தொனி.

No comments:

Post a Comment