முகம் வெளிரிய
வார்த்தைகள்
ஆயிரம் கொலைக்குறிப்புகளுக்குத்
தேதிகளிட்டு வக்கிழந்த
சாயத்தில்
உச்சரிப்பின்
முடிவுகளில் எச்சிலூறுகின்றன
மரியாதை நிமித்தமாக
வேஷமிடுகின்றன
தெளிவற்ற தூரங்களில்
உடைந்த கால்களோடு
பயணிக்கின்றன
பறவைகளின் ஒலி
அதிரவுகளில்
சங்கதிகள் எழுதிய
கமகத்தில்
இவர்களின் சிரிப்புகள்
கூட
ஏதோ இரைச்ச லெனப்பட்டது.
இருளுக்குள் பதுங்கிய
மௌனத்தின் மீது
டார்ச் அடித்து
விளையாடுவார்கள்
என்பது தெரிந்த
ஒன்று தான்
சித்தர்களின்
மனவெளி வேண்டி
கெஞ்சுகிறேன்
அதனாலும் உருகும் என் தொனி.
No comments:
Post a Comment