Sunday 16 September 2012

மழலையர் பள்ளி



பிஞ்சு நடை பழகும் வயதில் கொழுந்து மொழி பேசும் குழந்தைகள், விளையாட்டாகப் படிக்கும் அழகைப் வளர்க்க மழலையர் பள்ளிகள் இன்று ஏராளம் வந்து விட்டன.

குழந்தைகளுக்கு சிறு வயதிலே நற்பண்புகளையும், படிப்பில் ஆர்வத்தையும் இயல்பாகக் கொண்டு வரும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட மழலையர் பள்ளிகள் தொடக்கநிலைக்கும் முந்தைய நிலையாக இருக்கின்றது.

அதிகப்படியான புத்தரங்களோ, வீட்டுப் பாடங்களோ மழலையர் பள்ளி இருப்பதில்லை.
பெரும்பாலும் மழலையர் பள்ளியில் கற்றுத் தரப்படும் பாடங்கள் பாடல்களாகவும், படங்களாகவும், கதைகளாகவும் இருக்கின்றன.

நல்ல விசாலாமான வகுப்பறையாகவும், தனித் தனி இருக்கைகைகள் அமைக்கப்பட்டு,விளைப் பொருள்களோடு பாடம் நடத்துகிறார்கள்.

மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு வகுப்பிலே,பழங்கள் இனிப்பு ரொட்டிகள் என்று பால் முதற்கொண்டு கொடுக்கிறார்கள்.

குழந்தைப் பருவத்திலே நட்பை வளர்த்துக் கொள்ளும் விதங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, ஆசிரியர்கள் குழந்தை  
மொழியில் பேசிகிறார்கள். குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள்.

அடிப்படையான ஆங்கில வார்த்தைகளைத் தாய் மொழியைப் போலக் கற்று கொடுக்கிறார்கள்.

அழகான சீருடையில் வரும் பழக்கத்தை மழலையர் பள்ளி முதல் பழக்கத்துக்குக் கொண்டு வருகிறார்கள்.   

கிளிக்குஞ்சுகளைப் போல தாவிக்கொண்டு, இரட்டை சடை பின்னி மை எழுதிய விழிகள் அசையும் நேரம் ஏதோ ஒரு ஆங்கிலப் பாடலை சரளமாக ஒப்பிக்கும் குழந்தைகளின் சிரிப்புக்கு உலகில் எதுவும் ஈடாகாது.

சட்டையை இடுப்பில் மடித்துக் கொண்டு டை கட்டி சின்ன பாதங்கள் நடந்து   வரும்  அழகில் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் அத்தனையும் பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

தொடக்கத்தில் பெற்றோர் அணைப்பில் பிரிய மறுக்கும் குழந்தைகள், மழலையர் பள்ளியில் விளையாடும் நினைவிலும் பாட்டுப் பாடும் ஆர்வத்திலும் உற்சாகமாகி விடுகிறார்கள்.

காலை எழுந்தவுடன் கிளம்பி புத்தகப் பையை மாட்டிக் கொண்டு வாசலில் நிற்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஈடு கொடுக்க முடியவில்லை என்கிறார்கள்.

பொம்மைப் படங்கள் நிறைந்த புத்தகத்தில் எத்தனை பொம்மைகள்  கிருக்கிறதென்று குழந்தைகள் எண்ணிக் காட்டுகிறார்கள்.

பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட பொம்மைகளைக் களைத்துப் போட்டாலும் குழந்தைகள் கற்றுக் கொண்ட பயிற்சியால் ஒழுங்காக அடுக்கி ஒன்று சேர்த்து விடுகிறார்கள்.

பல வண்ணங்களைக் கொண்டு விதவிதமான ஓவியங்களை குழந்தைகள் வரையக் கற்றுக் கொள்கிறார்கள்.

இம்மாதிரியான செய்முறைப் பயிற்சிகளே மழலையர் பள்ளிகளில், அடிப்படை பாடத்திட்டமாக இருக்கின்றது.

பல வீடுகளில் பெற்றோர்களுக்கு சுட்டிக் குழந்தைகள் பாடம் நடத்துகிறார்கள். படம் வரைந்து காட்டுகிறார்கள்.

வகுப்பில் இருக்கும் ஆசிரியர்கள் பெயரையும் நண்பர்கள் பெயரையும் குழந்தைகள் சொல்ல கேட்பதே பெற்றோர்களுக்கு ஒருகதை போல இருக்கும்.

வீட்டுக்கு வந்த விருந்துநர்கள் முன்னால் வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடலைப் பாடிச் சொல்லி குழந்தைகளிடம் கெஞ்சும் பெற்றோர்கள் பலரும்  இருப்பார்கள்.

இரண்டு வயதின் தொடக்கத்திலே பள்ளிக்குச் செல்ல பழகி விடுவதால் நடையுடை பேச்சில் பெற்றோர்களை விஞ்சுகிறார்கள், இந்தச்  சுட்டிக் குழந்தைகள்.

கீழ்படிதல்விட்டுக் கொடுத்தல்பகிர்ந்து உண்ணுதல்வணக்கம் செய்தல்சுத்தமாக  ஆடையணிதல் போன்ற ஒழுக்கங்களே மழலையர் பள்ளிகளில் முதன்மைப் பாடங்களாக இருகக்கின்றன. 

விவரம் அறியாத பருவத்தில் அர்த்தம் விளங்காத பத்து  - முத்து வரிகள் கொண்ட  
பாடல்களையும் நுனி நாக்கில் சரளமாக சொல்கிறார்கள்.

வகுப்பறைச் சுவர்களில்பெரும் பெரும் படங்களைக் கட்டித் தொங்க விட்டுக் கொண்டு படங்களில் பாடம் நடத்து கிறார்கள். இதனால் மிக எளிதாக படிக்கும் விஷியங்களை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள்.

மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் மேடையேறுகிறார்கள்.
சுதந்திரமாகப் படித்ததைச் சொல்லிப் பார்க்கிறார்கள்.

விளையாட்டாகவும், குழுச்செயல்பாடாகவும் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் நல்ல சிந்தனைகளை வளரக் உதவுகின்றன.

குழந்தைகள் எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர்கள் தொடந்து பாராட்டும்  
போதெல்லாம் குழந்தைகள் தன்னம்பிக்கை மிக்கவராக வளர மழலையர் பள்ளிகள் காரணமாக விளங்குகின்றன.

பல வேடங்களில் மேடையில் குழந்தைகள் வசனம் பேசும் மொழி அழகும் உடல் அசைவும் பெற்றோர்களைக் கௌரவிக்கிறது.

மழலையர் பள்ளியில் கற்றுத் தந்த அடிப்படை பாடங்கள் முதல் நிலை கல்வியில் சிறந்து விளங்குதற்கு உகந்ததாக இருக்கின்றன.

குழந்தைகளின் போக்கில் அவர்களுக்குத் தேவையான களத்தை இச்சிறு வயதிலே மழலையர் பள்ளிகள் தொடங்கி வைக்கின்றன. 

மழலையர் பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் பயிற்சிகள் குழந்தைகளுக்கு விடா முயற்சியை வளர்க்கின்றன.

பெரும்பாலும் வீட்டில் ஒரே குழந்தை,என்ற நிலையில் வளந்த குழந்தைகள் மழலையர் பள்ளிக்கு வரும்போது பல குழந்தைகளுடன் பழகி நட்பும், சகோதரத்துவமும் கற்றுக் கொள்கிறார்கள்.

வளர்ந்த குழந்தைகளே சாலையைக் கடக்க முடியாத நெருக்கடியில்  இருக்கும் போது வீட்டுக்குள்ளே இருக்காமல் மழலையர் பள்ளியில் கூட்டம் கூட்டமாக குதூகளிக்கும் வாய்ப்பைக் குழந்தைகள் பெறுகிறார்கள்.

இரண்டு மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரத்துக்குள் ஆடிப் பாடி படித்து விட்டு வகுப்பறையில் புறாக் குஞ்சுகளைப் போல் உறங்குகிறார்கள்.

இந்தச் சிறிய வயதிலே பெரிய அழுத்தங்களைப் படிப்பு என்ற பெயரில் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார்கள் என சிலர் கருதினாலும், மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்குப் பாடங்களைச் சிரமப்பட்டு புகுத்துவதில்லை என பள்ளி நிருவாகத்தினர் சொல்கின்றனர்.

குழந்தைகளின் விருப்பத்தின் வழியாக விளையாட்டு முறையிலே பாடங்கள் கற்றுக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.

விவரம் அறியாத வயதிலே நல்ல பழக்கங்கள் அடி மனதில் நிறைவதால், பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறார்கள். இதனால் மழலையர் பள்ளியைத் மிகவும் தேவையானதாக நினைக்கிறார்கள்.















 

No comments:

Post a Comment