யாருமற்ற
இரவில்
பனிப்புள்ளிகள்
எழுதிய கவிதைகளை
நீயும்
நானும் வாசித்துக் கொண்டிருக்கையில்
என்
இருதய விக்கிப்பீடியாவைத் திறந்து
ஏதேதோ
பதிவு செய்திருக்கிறேன்
உன்னோடு
மீன்
குஞ்சுகள் பிடித்து விளையாடிய
டெல்டாப்
பகுதிகளில்
இன்று
கான்கிரீட் மரங்கள் முளைத்திருக்கலாம்
என்
மௌனத்தின் இடைவெளியை
நிறைக்க
முடியாமல் கரைந்த தவிப்புக்களுக்கு
இதுவரைக்கும்
- நான்
எத்தனையோ
இலக்கணங்கள்
எழுதியிருக்கிறேன்
காகிதப்பூக்களில்
நான்
தேனெடுக்க அலைந்த போதெல்லாம்
என்
பால்வெளி அண்டத்தில்
தும்பைச்
செடிகள் வெடித்ததாகச் சொன்னார்கள்
இருந்தும்
காலம்
தூரம் எல்லாம்
கடந்து
போன பெருவெளியில்
சிந்தனைக்
கொலைகள்
ஏராளம்
செய்திருக்கிறேன்
இன்னும் உன்னை
பத்திரமாய்
வைத்திருக்கிறேன்
No comments:
Post a Comment