நினைவுகள் நுரை
தள்ளி
இரவைக் கிழித்துத்
தொங்கவிடும் பிம்பங்கள்
சலங்கை கட்டி
ஆடுகின்றன
உயிர் அனத்தித்
துடியாய் துடிக்கின்றது
மாயைச் சிலந்தியாக
மனம்
தப்பிக்க வழியிருந்தும்
சுருண்டு கத்தையாக
வழிகின்றது
வழி துணை இழந்த
நடுப்பாதையில்
வலக்கையிலும்
இடக்கையிலும்
மாறி மாறித் திரும்பி
ஊர்வலத்தில்
ஒரு அடி கூட எடுத்து
வைக்க முடியாமல் அலறுகின்றன
ஒரு சிரிப்பின்
ஒளி வந்து வந்து பிழிய…
No comments:
Post a Comment