Monday, 17 September 2012

அலறல்

நினைவுகள் நுரை தள்ளி
இரவைக் கிழித்துத் தொங்கவிடும் பிம்பங்கள்
சலங்கை கட்டி ஆடுகின்றன
உயிர் அனத்தித் துடியாய் துடிக்கின்றது
மாயைச் சிலந்தியாக மனம்
தப்பிக்க வழியிருந்தும்
சுருண்டு கத்தையாக வழிகின்றது
வழி துணை இழந்த நடுப்பாதையில்
வலக்கையிலும் இடக்கையிலும்
மாறி மாறித் திரும்பி
ஊர்வலத்தில்
ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் அலறுகின்றன
ஒரு சிரிப்பின் ஒளி வந்து வந்து பிழிய…

No comments:

Post a Comment