கண்டுபிடிப்புகளின்
யுகப்புரட்சி தான் இந்த யுகம்.
இன்றைய மனிதர்களின் தேடுதல்
முழுக்க முழுக்க யந்திரமாக்கப்பட்டு விட்டது.
அந்த வகையில், அச்சு யந்திரமும், போக்குவரத்தும் உலகத்தில்
மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறன.
சமீப காலத்தில் தான், அச்சுக் கலைக் கண்காட்சியின் பிரமாண்டத்தை ஜெர்மன் நாட்டில்
ட்ரூபா என்ற இடத்தில் நடத்திக் காட்டினார்கள்.
போக்குவரத்தில், பால் வெளி அண்டம் வரை தொட்டு விட்டார்கள்.
பூமி தாண்டிப் பறக்கும் நாம், மண்ணைக் குடைந்து குகை வழிப்பாதைகள் அமைத்து, புகைவண்டிப் பயணத்தில் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
இந்தச் சுரங்க வழிப்பாதைகளை
நமது தமிழ் மன்னர்கள் ரகசிய வழித் தடங்களுக்காகப் பயன்படுத்தி யிருக்கிறார்கள்.
குகைவழிப் பயணத்தில் சென்னை
மெட்ரோ ரயில் திட்டம்.....
1670 களில்... போக்குவரத்தில்
மௌவுண் பேட்டன் என்ற மாமனிதனால் சென்னையின் கோட்டையிலிருந்து – பரங்கி மலை வரைக்கும் தார்ச்
சாலைகள் போடப்பட்டது.
1856 களில்...
ராயபுரத்துக்கும் – ஆர்க்காட்டுக்கும் இடையில் ரயில் பயணங்கள் தொடங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இந்த மக்கள் தொகை பெருக்கத்தைச் சமாளிக்க சென்னையிலும்
பூமியைக் குடைந்து காலுக்கடியில் ஓடப்போகிறது,
மெடரோ ரயில்
பயணம்.
மத்திய அரசும் தமிழக அரசும்
இணைந்தும் சென்னையில் மெட்ரோ ரயில் பயணத்தைக் கொண்டு வர, ஒப்பந்தகள் முடிந்து செயலில் இறங்கி விட்டார்கள்.
16 நகராட்சிகள், 20 நகரப்பஞ்சாயத்துகள்,
214 கிராமங்கள்
என்று 1,189 சதுர கிலோ மீட்டர் சுற்றவு கொண்ட
சென்னையில், 723 வழித்தடங்களில் 3500 பேருந்துகள்
இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
இதோடு 450 ரயில்கள்
சென்னையில் இயங்கினாலும் போக்குவரத்தின் நெருக்கடியில் எறும்பு புற்றை இடித்தது
போல மக்கள் பொங்கி வழிகிறார்கள்.
கார்களும், டூவிலர்களும் இருமிக்கொண்டே சாலை நிறைக்கும் இந்தக் காலத்தில், ச்ஷேர் ஆட்டேக்களே பெரும்பாலும் போக்குவரத்து நெரிசலுக்கு
முக்கியப் பங்கு வகிக்கிறன.
தரைக்கு அடியிலும், ராசசத் தூண்கள் தாங்கும் பாலங்களிலும் மெட்ரோல் ரயில் அமைக்க
சென்னையில் பெரும் வேலைப்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறதன.
தரையைக் குடைந்து ரயில் பாதை
அமைக்க மண்ணியல் நிபுணர்கள் ஆய்வு செய்கிறார்கள்.
பாறைகளும், சேற்றுப் பகுதிகளும் ஆராய்ந்து தகுந்த முறையில் வழித் தடம்
அமைத்துக் கொண்டியிருக்கிறார்கள்.
‘டனல் போரிங் மிஷின்’ என்ற மிகப் பெரிய
யந்திரத்தில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மண்ணைக் குடைய திட்டமிட்டு
இருக்கிறார்கள்.
24 மணி நேரத்தில் 8 லிருந்து
10 மீட்டர் வரை டனல் போரிங் மிஷினால் சுரங்கப் பாதை அமைக்கிறார்கள்.
டனல் மிஷினின் முகப்பு எடை
170 டன் என்று சொல்கிறார்கள்.
கடினமான பாறைகளையும் அறுத்து
எடுக்கும் வகையில், புள்ளி புள்ளியாகத் தெரியும் 60
பிளேடுகள், மிஷினின் வெவ்வேறு திசையில்
பொருத்தப்பட்டுள்ளன.
ஜெனரேட்டர், கம்பியூட்டர் அறை, கேண்டின், ஓய்வு அறை என்று 100 பேர் வேளை செய்யும் ஒரு அலுவலகம் போல டனல்
மிஷின் இருக்கிறது.
மணல், பாறைத் துகள்கள், சகதி போன்றவைகள் கன்வேயர்
பெல்ட் மூலம் வெளியேற்றப்படுகிறன.
ஒரு கி.மீட்டருக்கு மேல்
தோண்டும் போது குழாய்களின் வழி ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது.
நூற்றுக்கும் மேல் வேளை
செய்யும் இடத்தில், ஆட்களைக் கொண்டு செல்லவும், உணவு இடைவேளைக்கு மாற்றவும் தற்காலிக மினி ரயில் ஒன்று அஙகு
இயங்கும்.
மோனோ ரயிலுக்கு பராமரிப்புச்
செலவு அதிகமாக இருப்பதால் மெட்ரோ ரயில் உகந்ததாக சொல்கிறார்கள்.
மெட்ரோ ரயில் பெட்டிகள்
பிரேசில் நாட்டிலிருந்து கொண்டு வந்து இயக்கப்படுவதாக, இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஒரு மெட்ரோ ரயிலுக்கு 4
பெட்டிகள் பொருத்தப்பட்டு ஒரே நேரத்தில் 1200 பயணிகள் பயணிக்க முடியும்
என்கிறார்கள்.
மெட்ரோ ரயிலின் அதிக பட்ச
வேகம் 80 கி.மீட்டராகவும், சரசரி வேகம் 35
கி.மீட்டராகவும் இருக்கிறது.
நிறுத்தத்தில் 5 நிமிட
இடைவெளிக்குப் பிறகு, அடுத்தடுத்து வருவதாக
இயக்கப்படுகிறது, இந்த மெட்ரோல் ரயில்.
டிக்கட் வாங்க தானியங்கி
வசதியும், செல் மற்றும் லேப்டாப் சார்ஜ் ஏற்றும்
வசதியும் இந்த மெட்ரோ ரயிலில் இணைக்கப்பட இருக்கிறது.
மெட்ரோல் ரயில் பற்றிய
படிப்புகள் சென்னைலும் இப்போது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறன.
சிவில். மெக்கானிக்கல், ஆர்க்கிடெக்சர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ரானிக்ஸ், எலக்ரானிக்கஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் போன்ற பாடத்திட்டங்களில், 70 / சதவிதம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.
சென்னை ஐ.ஐ.டி.யில் மெட்ரோ
ரயில் டெக்னாலஜி அண்ட் மேனேஜ் மெண்ட் என்ற படிப்புக்கு 13 மாணவர்கள் மட்டும்
சேர்த்துக் கொள்ளப் படுவதாக சொல்கிறார்கள்.
மெட்ரோ ரயில் படிப்புக்காக
ஒவ்வொரு மாதமும் 20000 ரூபாய் மெட்ரோல் ரயில் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் அமைக்க தோண்டும்
இடத்தில் பாரம்பரியச் சின்னங்களும், புரதான நினைவிடங்களும்
இருப்பதால் அது குறித்த அமைப்புகள் மெட்ரோ ரயிலுக்கு தடை விதிக்கின்றன.
மெட்ரோல் ரயிலின் முதல் பெண்
ஓட்டுனர் என்ற பெருமைக்குறியவர் பிரியங்கா என்பவர்தான்.
உலகத்திலே மிக நீளமான மெட்ரோ
ரயிலை சீனாவின் தலைநகரான பெய்ஜிகில் அமைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
தரைக்கு மேலே 19 பாதைகள்
ஏற்படுத்தி 516 கி. மீட்டர் நீளத்தில் மெட்ரோ ரயில் அமைக்கப் போவதாக இருக்கிறது.
No comments:
Post a Comment