Wednesday 15 August 2012

பெண்களுக்கான ஆடைகள் நேற்று...இன்று... நாளை...




இலை தழைகளும், விலங்குகளின் தோல்களும் தொல்குடி மனிதர்களின் ஆடைகளாக இருந்திருக்கலாமென்றே யூகிக்கலாம்.

பகுத்தறியாமல் இருந்திருந்தால், மனிதர்களும் விலங்குகளைப் போல, ஆடைகள் இல்லாமல் அழகாக இருந்திருப்பார்கள்.        

குளிரும் வெப்பமும்
ஆடைகளுக்கான தேவையைத் தீர்மானி்த்தன.
மதங்களும் அதன் சடங்குகளும்
ஆடைகளுக்கான வடிவத்தைத் தீர்மானித்தன.

நாடோடிகளின் வேட்டைச் சமூகத்திலும்,
சேறு கலக்கிச் சோறு குடிக்கும்  விவசாயக் குடியிலும்
மேல் சட்டை அணியும் பழக்கமெல்லாம் இருந்ததில்லை.

ஆண்கள் உடுத்தும் எந்த ஆடையையும்
பெண்கள் உடுத்த முடியும்.
ஆண்களுக்குச் சமமாக பெண்கள் இருப்பதில்,
ஆடைகளே முதல் வரிசையில் நிற்கின்றன...

பெண்களின் ஆடையில், பட்டும், பருத்தியும்
குறிப்பிட வேண்டிய தொழில் நுட்பங்கள்...

பருத்தி நூலைத் திரித்து நெய்த பக்குவம்,
முன்பொரு காலத்தில் கலிங்க நாட்டிலிருந்து வந்தது.

சீன தேசத்திலிருந்து பட்டு இறக்குமதி செய்யப்பட்டது.


பாம்பின் தோல் போல பளபளப்பும்,
முங்கில் கணுக்களின் இடை போல, மென்மையும் கொண்ட ஆடைகளைப், பெண்கள் உடுத்தியதாக 2000 ஆண்டுகளுக்கு முன்பே  இலக்கியக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் சேலைதான்
பெண்களுக்கான பாரம்பரிய ஆடை என்பது,
திறந்த வெளிச்செய்தியாகும்.

தொட்டில் கட்ட தலை துவட்ட தலைச் சுமைக்குச் சும்மாடு கட்ட மரத்து நிழலில் விரித்துப் படிக்க என்று தமிழச்சிகளிடம் சேலையின் பங்கு பலதரப்பட்டது.

திருவிழாக்களிலும், பண்டிகை நாட்களிலும், பட்டுப்புடவை அணிவது ஒரு மரபாக இருந்தது.

திருமணத்தில் மணமகளுக்கு பல லட்சங்களில் பட்டுப் புடவை எடுக்கிறார்கள்.

16 முழம் கொண்ட பெரிய கனமான சேலைகளை அணிவது பெண்கள் பேசும் புரணரியில் கௌரவமானது.

தாவணியும், பட்டுப்பாவாடைகளும், மஞ்சள் பச்சை சிவப்பு என்ற மூன்று நிறங்களை மையப்படுத்தியே நெய்யப்பட்டது.

கைதறியில் தரித்த கதர் நூல் ஆடைகளே, அனேக பெண்களின் ஆடைகளாக இருந்தன.

தொடக்கத்தில், வெள்ளை நிறத்தில் மட்டுமே பெண்கள் ரவிக்கைகள் அணிந்தார்கள்.

பூக்களே பெரும்பாலும் பெண்கள் உடுத்தும் ஆடைகளுக்கு டிசைன்களாக இன்றளவும் இருந்து வருகிறது.

தெருக்கூத்து, பரதம், நாடக சபாக்கள் போன்ற கலைகளில் இருந்து தான், பெண்களின் ஆடைகளுக்கான வடிவங்கள் மாறியது.

ஐரோப்பியரின் வருகையும், அன்னியப் படையெடுப்பும், உலக கலாச்சரத்தை வீதியெங்கும் விதைத்தது.

கலாச்சாரத்தின் அடிப்படைத் தேவையில், ஆடைகளின் புதிய வடிவங்கள் மேற்கத்திய மனிதர்களிடம் இறக்குமதி செய்யப்பட்டன. 


பெண்களுக்கான ஆடைகளில், வழிபாடுகள் வகுத்த அணுகு முறைகளின் அடையாளங்களைச் சொல்லியாக வேண்டும்.

இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணியும் முறையில் ஆடை என்பது, ஒரு மதத்தோடு சம்பந்தப் பட்டிருக்கிறது.

கிறித்தவர்களின் திருமணத்தில் பெண்கள் வெண்ணிற ஆடைகளை அணிகிறார்கள்.

இந்து மதத்தின் முந்தைய வழக்கத்தில், விதவைகளின் குறியீடாக வெள்ளை நிற ஆடைகள் இருந்திருக்கின்றன.
   
19 நூற்றாண்டின் தோற்ற மயக்கத்தில், திரைப்படக் கொண்டாட்டத்தில், பெண்கள் சுடிதார் அணிந்து கொண்டார்கள்.

வெயிலில் தொலைந்த வாழ்க்கையை களையெடுப்புக் காடுகளில், குனிந்து தேடிக்கொண்டிருக்கும் பட்டிக்காட்டு கண்ணம்மாவுக்கும், பொண்ணம்மாவுக்கும் சுடிதாருக்கான தேவை என்றுமே ஏற்ப்படாது.

இன்று...

பழங்காலத்துச் சிற்பங்களில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளே, இன்றைய நவீன ஆடைகளுக்கான முன்மாதிரிகள்....

ஜீன்ஸ் பேன்ட்களும் இறுக்கமான டீசர்ட்களும் பெண்கள் அணிவது இன்றைய காலத்தில் மிகச் சாதாரணமாகி விட்டது.

திரைப்படங்களின் களைத்துப்போட்ட டிசைன்களில் பெண்களுக்கு விதவிதமான ஆடைகள் ஏராளம் வந்து விட்டன.

நேற்று வெளிவந்த சினிமாவில், கீரோயின் உடுத்திய கவுனும்,
ஜீன்ஸ் பேன்டும் மாடலாக வைத்து ஜவுளித் தொழிலாளர்கள், சந்தையில் எப்படி விற்பனை செய்யலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

நைட்டி என்கிற ஆடை வீட்டில் இருக்கும் பெண்களுக்கு முழு நேர ஆடையாக இருக்கிறது.

நீச்சல் ஆடை, உடற்பயிற்சி ஆடை, கர்ப்பகாலங்களில் உடுத்தும் ஆடை, என்று பெண்களுக்கான ஆடைகள் சூழ்நிலைக்கேற்ப வந்து விட்டன.

பியூட்டி பார்லர், பேஷன் டெக்னாலஜி போன்ற படிப்புகளுக்கான களங்கள் இன்று பெருகி விட்டன.

பேஷன் ஷோ கொண்டாட்டங்களில், அலங்கோலமாக பெண்கள் ஆடை அணிந்து வருவதற்காக மேக்கப் டிசைனர்கள் வித்தியாசமான முறையில் பெண்களுக்கான ஆடைகளை வடிவமைக்கிறார்கள்.

கண்ணாடிகள், ஜமிக்கிகள், மணிகள்,சிப்பிகள், பெரிய பட்டன்கள் என்று, பெண்களின் ஆடை மடிப்புகளில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

மாடலிங்க் என்ற பெயரில் வேடிக்கை காட்டுவதற்காக இன்றைய பெண்கள் அரை குறை ஆடைகளை உடுத்துவதில் பெருமைப்படுகிறார்கள்.

சாக்குகள், பிளாஸ்டிக் காகிதங்கள் என்று ஆடைகளில் புதிய முயற்சிகளைப் பேஷன் சோஷக்களில் பெண்கள் செய்து பார்க்கிறார்கள்.

ஆங்கில வாசகங்களும், பயங்கரமான படங்களும் கொண்ட டீசர்டுகளை அணிவதை இன்றைய பெண்கள் மகிழ்ச்சியாக நினைக்கிறார்கள்.

இன்னும் நைட்டி அணிய கூச்சப்படும் நடுத்தரவு வயது பெண்கள்  கிராமங்களில் இருக்கிறார்கள்.

இந்த நவீன உலகத்தில், குடும்பம் - வேலை காசு என்று, ஓடிக்கொண்டிருக்கும் அவசரத்தில், பலங்குடியினரில் குறிப்பிட்ட கூட்டம் மட்டும் ஆதி கால மனிதர்களின் சாயலில் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். 
  
நாளை...

காலம் ஒரு சுழி என்று சொல்வார்கள்....
அது தொடங்கிய இடத்துக்கே மீண்டும் சென்று நிற்கும்.

நாளைய உலகில், இலைகளும் மரப்பட்டைகளும், விலங்குகளின் தோல்களும் பெண்களுக்கான ஆடைகளாகும்.

மீண்டம் பருத்தி பட்டு சிந்தட்டிக் காட்டன் என்று தொடங்கும்.





No comments:

Post a Comment