Wednesday 29 August 2012

தையலும் தையல்காரர்களும்...


இன்றைய உலகத்தில் ஆடைகளின் வடிவங்களெல்லாம் பாரம்பரியங்களைக் கடந்து சென்று விட்டது.

அலங்கோலமாய் களைத்துப்போட்ட வடிவங்களே நடைமுறையில் ஆடைகளின் கலாச்சாரமாக இருக்கின்றன.

பெரும்பாலும், ஆண்களை விட பெண்களே, கவர்ச்சியாக உடையணிந்து வருதில் கூச்சப்படுவதில்லை.

சட்டை மற்றும் பேன்ட் மடிப்புகளில் பல நூறு டிசையின்கள் ஜவளிக்கடைகளில் குவிந்து கிடக்கின்றன.

ஆடைகளை இறுக்கமாகவும், இல்லையென்றால் மிகவும் நீளமாகவும் தைத்து அணிந்து கொள்கிறார்கள்.

எம்பிராய்டிங் என்ற முறையில் பெண்களுக்குப் பூக்களிலும் ஆண்களுக்கு கட்டஙகளிலும் உடைகள் தயார்செய்கிறார்கள்.

பனியன் கம்பெனிகளில் நடிகர்களையும் அல்லது கிரிக்கட் வீரர்களையும் பயங்கரமான படங்களாக அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள்.

திரைப்படத்துறையில் ஆடைகளுக்கான டிசைனர்கள் பிரமாதமாகச் செயல்படுகிறார்கள்.

இந்த சினிமா டிசைன்ரகளே இளைஞகர்கள் எந்த வடிவத்தால் ஆடைகளை உடுத்தலாம் என்பதை முடிவு செய்கிறார்கள்.

அழகிப் போட்டிகளி்ல், ஆடைகளில் வடிவங்கள் முக்கியமானதாக இருக்கின்றன.

வேலை வாய்ப்புகளில் இருக்கும் போது உடுத்தும் ஆடைகளில் நிறங்களும், வடிவங்களும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கின்றன.


ஆசிரியராக வேலை பார்ப்பவர்கள் விரசம் இல்லாத விதத்தில் ஆடைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பெரும்பாலும் ஒரே நேர்கோட்டில் நிர்ணையித்த வடிவங்களைத் துணிக்கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

இளைஞர்களை மையப்படுத்தி தயாரிக்கப்ட்ட ஜீன்ஸ் ஆடைகள் இன்றைய காலக் கட்டத்தில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை எல்லாதரப்புக்கும் பொதுவானதாக மாறிவிட்டன.

இந்த ஆடை டிசைன்களுக்கெல்லாம் பின்னால் இருக்கும் சமூகம் பல தரப்பட்ட நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

பெரும் முதலாளிகலாகவும், மிகவும் சிறிய குடிசைத் தொழில்களாகவும் இவற்றுக்கிடையில் இடைத்தரகர்களாகவும் இந்த மின்னணு உலக்த்தில் வாழ்க்கையைத் தொடர்ந்து பயணிக்கிறார்கள்.

பஞ்சிலிருந்து நூலாக நெய்யப்பட்ட தரியாக பெரும் பண்டல்களாக கொண்டுவரப்பட்ட துணியை, ஆடை வடிவமைப்பு வல்லுநர்கள் புதிய டிசைன்களில் வரைபடம் வரைகிறார்கள்.

ஒரே இடத்தில் பல பிரிவுகளில் குழுக்களாக இருந்து கொண்டு சில மணிநேரத்தில் நூற்றுக்கணக்கில் ஆடைகளை விதவிதமாகத் தைத்து அனுப்புகிறார்கள்.

தையல் முறைகளில் காஜா பட்டன் வைக்கும் தனித்த தொழிலமைப்பை மட்டும் வைத்து இயங்கும் கடைகள் ஏராளம் இருக்கின்றன.
மின்சாரத்தின் மூலம் அதிநவீன அயணிங் யந்திரங்கள் தினித்துறையாகச் செய்ல்படுகிறது.

நூற்றுக்கணக்கில் மட்டும் ஆடைகளைத் தயார் செய்யும் கார்மென்ஸ்களில் தினக்கூலிகளாக அயணிங் வேலையை நம்பி வாழ்க்கை நடத்துகிறார்கள்.

வீட்டில் இருந்து கொண்டே உருப்படிகளை வாங்கி எடுத்து பெண்கள் ஆடைகளைத் தைத்துக் கொடுக்கிறார்கள்.

திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் துணிக்கடைகளிலும் தையல்கடைகளிலும் மிகவும் நெருக்கடியாக இருக்கும்.

தையல் கடைகளுக்கு ஆட்கள் சரியாக அமையாமல் பெரும் ஏற்படுவது மிகச் சாதராணமாக இருக்கும்.

தையல் கடையில் தைப்பதற்காக அதிகமாக துணிகள் வரும் போதெல்லாம் தையல்காரர்கள் பெரும் குழப்பம் அடைகிறார்கள்.

இந்த அவர காலங்களைச் சமாளிக்க முடியாமல் தையல் தொழிலை விட்டு விடுகிறார்கள்.

எப்பேர்பட்ட டிசைன் வந்தாலும் யந்திரத்தேடு யந்திரமாக இந்தத் தையல்காரர்கள் செயல்படுகிறார்கள்.

தைக்கும் துணிகளை எங்கோ ஓர் தேசத்தில் யார் யாரோ அணியும் கொள்கிறார்கள்.

ஆனால் தைக்கும் துணிகளுக்கும் தையல்காரர்கள் உடுத்தும் ஆடைகளுக்கும் சம்மந்தம் இருப்பதில்லை. அவர்கள் மிகச் சாதாரமாண ஆடைகளையே அணிகிறார்கள்.

ஆடைகள் உடல் மறைக்கும் பங்கில் கவன ஈர்ப்பிலும் சரிபாதியாக இருக்கின்றன.

இதையே ஆள் பாதி ஆடை பாதி சொன்னால் அது மிக்க பொருத்தமானதாக இருக்கும்.


No comments:

Post a Comment