தீண்டும் மௌனம்
தீண்டும் மௌனத்திலே
தீராத கனவினிலே
ஒரு கவிதையாக காலம் களித்திருந்தேன்
நல்லதொரு கொள்கை வகுத்திருந்தேன்
நாளை வருவேனென்று நாட்கள் கடக்கிறதா?
நான்வரும் பாதையில் உன் இதயம் கிடக்கிறதா?
நான் உனக்காகத்தான்
என்றொரு பார்வையில் சத்தியம் செய்து கொடுத்தாய்!
நிலாவைக் கிழித்து விட்டாயடி – சகியே!
யாரிடம் நானிதைச் சொல்வேனடி
தேற்ற ஆளில்லை!
எது வந்தும் ஏக்கம் தீரவில்லை!
நான் குழைத்த அந்தரங்கத்தை
வீதியில் வாரி இறைத்தாயடி!
நீ என் முட்டாள் சிறுக்கி
கண்ணீர் வந்ததடி
கடந்த காலம் சுற்றி வளைத்ததடி
உலகம் வெறுத்ததடி
நிகழ்ந்த எதையும் இருதயம் நம்ப மறுத்ததடி
வானம் இடிந்ததடி - சகியே
வழக்கு வந்ததடி
மேகத்துளை வழியே
உதிரம் பொங்கி வழிந்ததடி
தீண்டும் மௌனத்திலே
தீராத கனவினிலே
ஒரு கவிதையாக காலம் களித்திருந்தேன்
நல்லதொரு கொள்கை வகுத்திருந்தேன்
நாளை வருவேனென்று நாட்கள் கடக்கிறதா?
நான்வரும் பாதையில் உன் இதயம் கிடக்கிறதா?
நான் உனக்காகத்தான்
என்றொரு பார்வையில் சத்தியம் செய்து கொடுத்தாய்!
நிலாவைக் கிழித்து விட்டாயடி – சகியே!
யாரிடம் நானிதைச் சொல்வேனடி
தேற்ற ஆளில்லை!
எது வந்தும் ஏக்கம் தீரவில்லை!
நான் குழைத்த அந்தரங்கத்தை
வீதியில் வாரி இறைத்தாயடி!
நீ என் முட்டாள் சிறுக்கி
கண்ணீர் வந்ததடி
கடந்த காலம் சுற்றி வளைத்ததடி
உலகம் வெறுத்ததடி
நிகழ்ந்த எதையும் இருதயம் நம்ப மறுத்ததடி
வானம் இடிந்ததடி - சகியே
வழக்கு வந்ததடி
மேகத்துளை வழியே
உதிரம் பொங்கி வழிந்ததடி
No comments:
Post a Comment