Friday 20 July 2012

சதுப்பு நிலக் காடுகள்


அலையாத்திக் காடுகள், கடலோரத்தில் அடர்ந்து வளரும் வனாந்திரப் பசுமைகளின் சுயராஜ்யம்.

கடல் கொந்தளிப்பத் தடுக்கும் அவசியம்.

சதுப்பு நிலக்காடுகள் என்றழைக்கப்படும் அழையாத்திக் காடுகளில், ஆண்டு முழுக்க தேங்கும் நீரில் வலை போல வேர்கள் பின்னிக்கொண்டு,  எல்லா பருவ மாற்றத்தையும் தாங்கும் சுர புன்னை மரங்கள் வளர்கின்றன.

நீர் வாழ் பறவைகளும் பருவகாலங்களில் வெளிநாட்டுப் பறவைகளும் கீச்சிடும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும் இந்தப் புதர்க் காடுகளில்.

பல வகையான மீன்களும், மித வெப்ப ஈரப்பதத்தில் வாழக்கூடிய விலங்களும் படர்ந்த தாவரச் சுருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறன.

படகுகளிலும், மரப் படுக்கைகளிலும் அமைக்கப்பட்ட கடலோடிகளின் தற்காலிகக் குடித்தனங்கள் இந்த சதுப்பு நிலக் காடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

இங்கு களிமண்ணிலும், வண்டல் மண்ணிலும் தேங்கும் கடல் நீர், எந்த நேரத்திலும் வற்றுவதில்லை.

இந்தக் காடுகளில் உள்ள மரங்களின் இலை, கூளம், கனிகள்  போன்றவை நீர் மற்றும் நிலத்தில் விழுந்து, நுண்ணுயிர்களின் செயல்பாட்டினால் சிதைவுற்று மீன்நத்தை, நண்டு போன்ற நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாக மாறுகின்றன.

இங்கு வளரும் கண்டல் மரங்கள், இலை நுனி காம்புகள் முதல் வேர்வரை மருத்துவத்துக்காக பயன்படுகிறன.

ஏப்ரல் மாதங்களில் சுற்றுலா தளங்களின் நந்தவனமாக இருக்கும் இந்தச் கடலோரக் காடுகளுக்குப் பறவைகளைப் போல பயணிகள் வந்து போகிறார்கள்.

கடற்கரையோரப் பகுதிகளில் உப்பளங்களை விரிவுபடுத்தவும், நகர விரிவாகத்திற்காகவும் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
நகரமயமாக்கலின் நெருக்கடியில், புலம் மனிதர்களால், சதுப்புநிலக் காடுகள் செதுக்கப்படுகிறன. அழிக்கப்படுகின்றன.

உப்பளத் தொழில் தற்போது சதுப்புநிலக் காடுகளுக்கு சவால் விடும் வகையில் மாறி வருகிறது. உப்பளங்கள் துவங்க, பல இடங்களில் சதுப்பு நிலக்காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

உப்பளங்களின் கழிவுகள் பல இடங்களில் சதுப்பு நிலக்காடுகளில் விடப்படுகின்றன. இதனால் எண்ணற்ற தாவரங்கள் கருகி வருகின்றன.

கடலோரப் பகுதிகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய சதுப்பு நிலக்காடுகள் தற்போது, இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து வருவதற்கு உப்பளங்கள் காரணமாக உள்ளன.

வேலைவாய்ப்பு, வர்த்தகம் - போன்றவற்றுக்கு  உப்பளங்கள் தேவை தான் என்பதால், உப்பளங்களை தடை செய்யாமல் ஒழுங்கு செய்ய வேண்டும்.

சுனாமியின் நினைவை மறக்கமுடியாமல் இருந்தாலும், இருக்க இடமில்லாமல் சென்னை போன்ற பெரும் நகரங்களில், கடலோரப் பகுதியிலும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நெருக்கடியில், சுந்தர வனக்காடுகளான இந்த அலையாத்திக் காடுகளை உருவாக்குவது என்பது நடைமுறையில் சிக்கல் தான்.

ஆனால், இனிவரும் நூற்றாண்டுகளில்... 
உலகப்பேரழிவான சுனாமி மீண்டும் வருவது நிச்சயம். 

விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் பக்கத்துக் கோள்களுக்கே பட்டம் விட்டாலும் இயற்கையின் விளையாட்டை தாமறிக்க இயற்கைதான் வர வேண்டும். 

சுனாமியை தடுக்க சுந்தரவனக்காடுகள் தான்தோன்றியாக வளர்தால் மட்டுமே தகும்.






No comments:

Post a Comment