Tuesday 26 June 2012

காதல் கொண்ட நெஞ்சம்


காதல் கொண்ட நெஞ்சம் இங்கு துடிக்குது
தேகம் அது அனலாய் கொதிக்குது
மேகம் அது சிலுசிலுசிலு துளியென தூவுது
காகம் அது குருகுருகுரு குயிலென கூவுது

காதல்... காதல்.....

பூமிப்பந்தினை நூறுமுறை பிளக்கிறேன்
உன் கால்சுவடினை தேடித்தேடி அலைகிறேன்

கடல்நீரும் ஒருநாளில் உப்புத்தனமை இழக்கும்
கண்ணீர் என் கண்ணீர்
அந்த உப்பின் குறையைப் போக்கும்

என்வானம் இங்கு தீப்பிடித்து எரிகையில்
மறைவிடம் தேடிஉன் மடியினில் ஒளிகிறேன்

என்பூமி இங்கு பூகம்பத்தில் இடிகையில்
புகலிடம் தேடித்தேடி பூவே உன்னில் நுழைகிறேன்

காதல்...

No comments:

Post a Comment