Tuesday 26 June 2012

மருதம்.....

மருதம்.....

விடிகாலை தாழ் திறந்து
வெயில்த் தாரை சொட்டப்போகும் காலவெளியில்
பரிமாறும் அழகிலே
பசி தீர்ந்து போகும் இணக்கத்தில்
அறுசுவையில் ஒன்று போல்
நீ கோபிக்கும் காரத்தில்
செல்லக்கோபத்தை ரசிப்பதற்காகச்
செய்த சின்னச் சின்னக் குரும்புகளில்
ஆம்பல் இதழில் ஒட்டாத நீர் போல
பிணக்கத்தின் முடிவில் இழையும்
பிரியத்தின் வெளிப்பாடுகள்.....

No comments:

Post a Comment