Monday 25 June 2012

தீர்ந்து விடாத மழைத்துளி





தீர்ந்து விடாத மழைத்துளி போல
கரைகின்ற நிமிடங்கள் உயிர்வரைக்கும்
மௌனம் தொடாத வார்த்தைகளாகப்
புரிகின்ற வரைக்கும் வலி இருக்கும்

என் கனாவிலே வந்த வதனமடி
வெண்ணிலவிலே உந்தன் நடனமடி

செந்தேனே
உன்னைக் கண்டேனே
கண்டு கொண்டேனே....

[தீர்ந்து விடாத]

தினமும் கார்த்திகை வாராதோ
சிணுங்க ராத்திரி போதாதோ

எனக்குள் நீயாக வந்தாலே போதும்
கனக்கும் தானாக என்னோட தேகம்

உறையும் ராவும் உண்டு
குமையும் போரும் இங்கு
சொல்லாமல்
யாரும் சொல்லாமல்

முடிவில் தோற்பதாரு
இரவில் காதல் நூறு
சொல்லாமல்
யாரும் சொல்லாமல்...

[தீர்ந்து விடாத]

மனதில் வானவில் நீதானே
மழையின் குறிப்புகள் தந்தாயே

வெயிலின் மாயங்கள் இன்றோடு போதும்
வரட்டும் காயங்கள் நெஞ்சோரம் வேண்டும்

கதையில் பொய்கள் சொல்லி
வளைவில் கைகள் கொடு
செல்லாமல்
எங்கும் செல்லாமல்

கழுத்தில் சத்தமின்றி
கொழுத்த முத்தம் கொடு
செல்லாமல்
எங்கும் செல்லாமல்

[தீர்ந்து

No comments:

Post a Comment