இதை ஆரிடம் சொல்வேனடா
“நாளைய உலகம்
நறுந்தமிழ் கழகம்
தாய்மொழி அழகன்
நீஅதன் புதல்வன்
இதைநீ உணர்வாயா!
விதை நீதான் உணர்வாயா!
வந்தேரிகள் வதைப்பார்நமை
உனக்கோ பலகூத்து!
அனுதாபமும் பரிதாபமும்
உதவாது அது எதற்கு?
பிணவாடைவரும்நனவோடைஅழும்
உயரேஎரிகிறது!
அதிகாரமெனும்சதிகாரவலம்
தமிழேஎதைஎழுதுவது?
இதைஆரிடம் சொல்வேனடா
அடடா தமிழா!
மிகச்சிறு சோம்பலும் இனிவேணடாம்
ஒரு கை கொடுடா தமிழா...! ”
No comments:
Post a Comment