Tuesday 26 June 2012

பாலை....

பாலை....

கால்நூற்றாண்டைத் தொடப்போகும்
வயதின் நீளத்தில் - ஒரு
கட்டாய நிமித்தமாக
மூங்கில் குழலின் முனங்களில்
நயமான சோகத்தின் நடுவில்
குதலை போல அன்னை அவள்
கதறிய துளிகளுக்குத் தேற்றுதல் இல்லாமல்
இலவம் பஞ்சுக்கு இறகுகள் தேவையில்லை என்றாலும்
சின்னதொரு விசும்பலில்
வாழ்க்கையின் இரண்டாம் பக்கத்தை
வாசிக்கப் பயணிப்பாய்....

No comments:

Post a Comment