Tuesday 26 June 2012

இசை யாழ் யுவதி அவள் !

ஒருநாள்
நெடுநாள்
முறுவல் எதனால்
தையல் ?

நீ நெகிழ்ந்த மையல்
இமையில் கண்டேன்
இமையில் விழுந்த பார்வை
தரையில் கண்டேன்.

கண்கள் குளிரக்
காதலாகிக் கசிந்தேன்
நெஞ்சம் அதிர
யாதுமாகி வழிந்தேன்.


பெரிது மகிழ்ந்து நான்
எதற்கும் அஞ்சேல் .
 

நிகழுமிங்கெல்லாம்
நின்னை அல்லால்
செய்கை ஒன்றில்லை எனக்கு.
ஒரு சொல் இசையாதா !
விழி அசையாதா!
மெத்த மையல் கொண்ட முகிலே...
பொழிந்தால்
வழிந்தால்
மெல்ல நீ அவிழ்ந்தால்
அத்துணை சொட்டும்
பருகும் என் இருதயம்...

No comments:

Post a Comment