Tuesday, 26 June 2012

நெய்தல்.....

நெய்தல்.....

பிரபஞ்சப் பேராழியில்
பேச்சு வார்த்தைகளைச் செவியுறாமல்
ஏதுமற்றவளாய் உயிர் திரட்டி
ஓரிருவேளை உண்ண மருத்தும்
உன் தேவை இழந்து
வாடைக்காற்றும் திரும்புகையில்
கரையில் விழுந்த மீனாக
உன் தனித்த சிறகுகள் துடித்துக்
காலம் பின்னோக்கி நகரும் போது
நீ ஞாபக மறதியின் எல்லை தொடுவாய்

No comments:

Post a Comment