Tuesday 26 June 2012

ஈகை கவி ஓவிய கவி தோழமைக்கு !

என் நண்பனின் காதலி பிறந்த நாளுக்கு நண்பன் கேட்க நான் எழுதிக் கொடுத்தது......

வாழ்த்து...

நீ கருவறை மடிப்பில் தவழ்ந்தது
எனக்காக என்று
நினை ஓரங்கள் சொல்லித் தெரிந்து கொண்டேன்

உனைப் பார்த்தும் நான்
குழந்தையான ரகசியத்தை
இதுவரை உன்னிடத்தில் நான் சொன்னதில்லை...

உனக்கும் அப்படித் தான் என்ற நினைப்பெனக்கு...

உன் பருவத்தின் அடுத்த அடியை
நீ எடுத்து வைத்தாலும்
எனக்கு எப்போதுமே
நீ முதல் பார்வையின் பிம்பத் துகள் தான்...

உன் பிறந்த நாளுக்கு
வாழ்த்து சொல்வதற்காக
என்னையே நான் வாழ்த்திக் கொள்கிறேன்....!

No comments:

Post a Comment