Tuesday 26 June 2012

முல்லை....

முல்லை....

சிலுசிலுத்துச் சலசலக்கும்
ஒரு மாரிக்காலத்தில்
மாலை நேரக் காற்றின் தீரத்தில்
'கொழுநன்' வரவு நோக்கி
கொழுந்தின் பற்றுதல் ஏக்கமாக
வாசற்படி ஓரத்தில்
ஏதோ சிலவற்றை ஒத்திகையிட்டு
கடிகார முள் பார்த்துத் திகைக்கையில்
விரைந்து வினைமுடித்துத்
திடுமென வரும்
திருமுகம் கண்ட தருணம்.....

No comments:

Post a Comment