Tuesday 26 June 2012

கொடுக்கு அரசியல் ! சதுரங்க அவியல் !

கண்டனம்
உலக செஸ் சாம்பியன் சீப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் 5 வது முறையாகப் பட்டம் பெற்று இருப்பது மிக்க பாராட்டுக்குரியது.

பெருமைப்படுவோம் -பெருமைப்படுத்துவோம். அதற்காகச் சாதனையாளன் ஆனந்துக்குத் தமிழக அரசு பட்டம் கொடுக்கலாம். அவர் பிஞ்சுகள் நெஞ்சத்தில் படர அவருடைய சார்பில் ஒர் அரங்கம் அமைத்து மெத்த தலைமை கொடுக்கலாம்.

ஆனால் விளிம்பு நிலையிலும் -முதல் தலைமுறையிலும் தவியாய் தவித்து போராடிக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கிடையில் தமிழக அரசு ஆனந்துக்கு 2 கோடி ரூபாய் கொடுத்து கௌரவப்படுத்துவது மிகவும் தவறான காரியம்... அது கண்டிக்கத்தக்கது ....

தகுந்த களம் கிடைக்காமல் வெறும் அனுதாபங்களோடும்-பகட்டுப் பரிதாபங்களோடும் தனக்குள்ளே தன்னைச் சுமையாக்கிக் கொண்டு அலையும் சிறகுகளைத் தரும்பிக் கூடப் பார்க்காத இந்தச் சாதனையாளனின் பரிவட்டமும் ஒரு சுயநலம் தான்....


மிக்க கடுகடுத்தேன்...................................

No comments:

Post a Comment