நாளேடுகளில்
இன்று அதிகம் இடம் பெறும் செய்தி பாலியல்
பலாத்காரம்தான். மூன்று வயது சிறுமி முதல் , பருவமடைந்த பெண்கள் வரை இந்த கொடுமையை எல்லா
வயதினரும் அனுபவிக்கிறார்கள்.
படிப்பறிவில்லாதவர்கள்
மட்டுமல்ல மாணவர்களும் இதில் ஈடுபடுவதுதான் மிகப்பெரிய கொடுமை. பெண்ணைத் தாயாக
மதிப்பதுதான் நமது பண்பாடு. அதனால்தான் தாய் நாடு என்று சொல்கிறோம்.
பெண்ணை
இழிவு செய்வது தாய் நாட்டையே இழிவு செய்வது போலாகும். இன்றைய செய்தியில் கூட ஒரு
ஆசிரியையை ஒரு தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அந்தப்பெண் தற்கொலைக்கு
முயன்று மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விடுதியில்
ஒரு மாணவன் ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கைது
செய்யபட்டிருக்கிறார். ஒரு விதவைத் தாய் மூன்றாவது நபரிடம் பணம் பெற்றுக்கொண்டு தன்
மகளையும் அவனையும் உள்ளே வைத்து பூட்டி வெளியே இவரே காவலுக்கு நின்றிருக்கிறார். நாடு
மோசமான சூழ்நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இவையெல்லாம்
உதாரணங்கள்.
ஏன்
பள்ளியில் பாலியலை ஒரு பாடமாகக் கொண்டு வரக்கூடாது? அது மாணவர்களிடையே ஒரு
விழிப்புணர்வை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களுக்கு இந்த பாலியல் கல்வி மிகவும்
அவசியம்.
இது பாலியல்
உணர்வுகள் பற்றிய சிந்தனைகளை வளர்க்கும். மற்ற உணர்வுகள் போன்றே இதுவும் ஒரு
சாதாரண விஷயம்தான் என்ற எண்ணம் சிறு வயதிலேயே உருவாகி மனம் பக்குவமடைந்து விடும். பின்னர்
அது வாழ்க்கையின் எதார்த்தமான ஒன்றாகிவிடும்.
இந்திய
மரபு காப்பாற்றப்படும். கல்வியாளர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். வருங்கால
சந்ததியினர் ஒழுக்க நெறியுடன் வாழ உதவ வேண்டும்.
நாளேடுகளில்
இன்று அதிகம் இடம் பெறும் செய்தி பாலியல்
பலாத்காரம்தான். மூன்று வயது சிறுமி முதல் , பருவமடைந்த பெண்கள் வரை இந்த கொடுமையை எல்லா
வயதினரும் அனுபவிக்கிறார்கள்.
படிப்பறிவில்லாதவர்கள்
மட்டுமல்ல மாணவர்களும் இதில் ஈடுபடுவதுதான் மிகப்பெரிய கொடுமை. பெண்ணைத் தாயாக
மதிப்பதுதான் நமது பண்பாடு. அதனால்தான் தாய் நாடு என்று சொல்கிறோம்.
பெண்ணை
இழிவு செய்வது தாய் நாட்டையே இழிவு செய்வது போலாகும். இன்றைய செய்தியில் கூட ஒரு
ஆசிரியையை ஒரு தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று அந்தப்பெண் தற்கொலைக்கு
முயன்று மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விடுதியில்
ஒரு மாணவன் ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று கைது
செய்யபட்டிருக்கிறார். ஒரு விதவைத் தாய் மூன்றாவது நபரிடம் பணம் பெற்றுக்கொண்டு தன்
மகளையும் அவனையும் உள்ளே வைத்து பூட்டி வெளியே இவரே காவலுக்கு நின்றிருக்கிறார். நாடு
மோசமான சூழ்நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இவையெல்லாம்
உதாரணங்கள்.
ஏன்
பள்ளியில் பாலியலை ஒரு பாடமாகக் கொண்டு வரக்கூடாது? அது மாணவர்களிடையே ஒரு
விழிப்புணர்வை ஏற்படுத்தும். குறிப்பாக பெண்களுக்கு இந்த பாலியல் கல்வி மிகவும்
அவசியம்.
இது பாலியல்
உணர்வுகள் பற்றிய சிந்தனைகளை வளர்க்கும். மற்ற உணர்வுகள் போன்றே இதுவும் ஒரு
சாதாரண விஷயம்தான் என்ற எண்ணம் சிறு வயதிலேயே உருவாகி மனம் பக்குவமடைந்து விடும். பின்னர்
அது வாழ்க்கையின் எதார்த்தமான ஒன்றாகிவிடும்.
இந்திய
மரபு காப்பாற்றப்படும். கல்வியாளர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். வருங்கால
சந்ததியினர் ஒழுக்க நெறியுடன் வாழ உதவ வேண்டும்.
No comments:
Post a Comment