Thursday 11 July 2013

சலுகைகளைப் பெற முதலில் உயிரோடு இருக்க வேண்டும் .



கோவை மாவட்டத்தில் இன்று காதல் ஜோடிகள் கொலை மிரட்டலுக்குப் பயந்து காவல்துறையிடம் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.

கோவை காவல் துறை கண்காணிப்பாளரிடம் “கொலை மிரட்டல் வந்துள்ளால் எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு கொடுங்கள்” என்று கேட்டுள்ளார்கள்.

பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் இதை பெரிதாக்கி வெளியிடும் அவசியம் என்ன ? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இளவரசன் – திவ்யா காதல் விவகாரம் இன்னும் ஆறாத நிலையில் , தமிழகத்தில் சென்ற மாதத்தில் மட்டும் 20 க்கும் மேற்பட்ட காதல் கொலைகள் நடந்தேறியிருக்கிறது என்ற அதிர்ச்சி புலனாய்வு தகவல்கள் ரகசியம் காத்து வருகின்றன .

கலப்பு திருமணங்களுக்கு சலுகைகளை பெயரளவிற்கு மட்டும் தெரிவிக்கும் அறிவிப்புகளைப் பெறுவதற்கு முதலில் உயிரோடு இருக்க வேண்டும்.

கௌவரக் கொலைகளுக்கென்று தனியான சட்டம் அமைத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் .  அதை விசாரணைகள் கவனிக்கப்பட வேண்டும் .


- சந்திரபால். 

No comments:

Post a Comment