ஜூன் 4 தேதி
இறந்து போன இளவரசனின் பிணத்தைக் கூட வாங்க முடியாமல் மருத்துவமனையின் சவக்கிடங்கு
முன்னால் உறவினர்கள் தவித்து நிற்கிறார்கள்.
தினமும் எத்தனை
வழக்குகள் – புலனாய்வு முடிவுகள் – இரண்டு முறை பிரேத பரிசோதனை என்று
நிம்மதியில்லாமல் கிடக்கின்றன தர்மபுரி சனம்.
பா.ம.க.தான்
இளவரசன் மரணத்துக்கு காரணம் என்று இளவரசனின் உறவினர்கள் கதறிக்கொண்டு
இருப்பதற்கிடையில் திடீரென்று ஒரு புயல் திசை மாறுகிறது .
“என் தம்பி
இளவரசன் இறப்பில் விடுதலை சிறுத்தை கட்சி என்ன உதவி செய்தது ?” என்று இளவரசனின் அண்ணன் பாலாஜி
அக்கட்சி.யினர் முன்பு ஆவேசப்பட்டிருக்கிறார்.
மீண்டும்
பிரேத பரிசோதனை வேண்டும் – வேண்டாம் என்று மாறி மாறி சொல்லி ஏன் என் தம்பியின்
மரணத்தை அரசியல் படுத்துகிறீர்கள் ? மேலும் எங்களை காயப்படுத்தாதீர்கள் ! என்று
கதறியுள்ளார்.
அந்த வலி
சாதாரணமானதல்ல.
வராது !
வந்தாலும் அது இன்னும் ஆபத்து தான் .
No comments:
Post a Comment