Tuesday 9 July 2013

பொய்யாகவே இருந்தாலும் நாங்கள் குனிந்து கொள்கிறோம் .

ஜூன் 4 தேதி இறந்து போன இளவரசனின் பிணத்தைக் கூட வாங்க முடியாமல் மருத்துவமனையின் சவக்கிடங்கு முன்னால் உறவினர்கள் தவித்து நிற்கிறார்கள். 

தினமும் எத்தனை வழக்குகள் – புலனாய்வு முடிவுகள் – இரண்டு முறை பிரேத பரிசோதனை என்று நிம்மதியில்லாமல் கிடக்கின்றன தர்மபுரி சனம்.

பா.ம.க.தான் இளவரசன் மரணத்துக்கு காரணம் என்று இளவரசனின் உறவினர்கள் கதறிக்கொண்டு இருப்பதற்கிடையில் திடீரென்று ஒரு புயல் திசை மாறுகிறது .

“என் தம்பி இளவரசன் இறப்பில் விடுதலை சிறுத்தை கட்சி என்ன உதவி செய்தது ?” என்று இளவரசனின் அண்ணன் பாலாஜி அக்கட்சி.யினர் முன்பு ஆவேசப்பட்டிருக்கிறார். 

மீண்டும் பிரேத பரிசோதனை வேண்டும் – வேண்டாம் என்று மாறி மாறி சொல்லி ஏன் என் தம்பியின் மரணத்தை அரசியல் படுத்துகிறீர்கள் ? மேலும் எங்களை காயப்படுத்தாதீர்கள் ! என்று கதறியுள்ளார்.

அந்த வலி சாதாரணமானதல்ல. 

இதே நெருக்கடி ஏன் திவ்யாவுக்கு இன்னும் வரவில்லை ?
வராது ! வந்தாலும் அது இன்னும் ஆபத்து தான் .

-         சந்திரபால்.
 

No comments:

Post a Comment