தமிழகம்
வித்தியாசமானது. வித்தியாசமான அரசியல் வாதிகள். பொது விவகாரங்களில் இவர்களின்
நிலைப்பாடு என்ன என்பதில் பொது மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது.
முதலில்
விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க போராடினார்கள். பின்னர்
ராஜிவ்காந்தியை கொலை செய்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை
தடைசெய்யக்கோரி போராடினார்கள். கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி
போராடினார்கள். புகையிலை உபயோகிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி
போராடுகிறார்கள். தற்பொழுது 144 தடையை நீக்ககோரி போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
தங்களுடைய
தனிப்பட்ட விருப்பு,வெறுப்புகளுக்காக இந்த போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.மக்கள் நலனை
யாரும் மனதில் கொள்வதில்லை. மக்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படுவதில்லை.தங்கள்
சுய நலம் வெற்றி பெற வேண்டும்.
தங்கள்
விருப்பத்திற்கு அரசு தலை வணங்க வேண்டும் என்ற வெறித்தனம்தான் இதில் தெரிகிறது. இது
முழுக்க முழுக்க அரசியல் மோசடி. மக்களை ஏமாற்றும் செயல்.மக்களை
நல்வழிப்படுத்தத்தான் அரசியல் வாதிகள் வேண்டும்.
அவர்களை
வெறுப்பேத்தி கலகம் உண்டாக்க அல்ல. அரசியல்வாதிகளுக்கு ஒரு வேண்டுகோள்.ஏமாற்றாதே !
ஏமாற்றாதே!
மக்களுக்கு
ஒரு வேண்டுகோள் ஏமாறாதே ! ஏமாறாதே !
No comments:
Post a Comment