எனக்குப் பயம் வருகிறது .
எனக்குள் என்னைச் சித்திரவதை
செய்கிறேன் .
மலினப் பிரச்சாரத்திற்கு நான் மட்டும் நடந்து போகிறேன் .
கண்ணீர் சிந்தாமல் நெடுநேரம் அழ முடிகிறது .
துருபடிந்த என் தோல்விகள் முத்தமிடுவதாய்
யாருக்கும் தெரியாமல் கீறி விட்டு போகின்றன .
என் வெறுமையில் பாறைகள் வந்திறங்கி
அனிச்சைாய் வெடிக்கின்றன.
ஆயினும்….
சகாராவில் என்னை எடுத்துப் பேசும் போது,
என் அத்தனை பலமும் சோலார் செல்லில் குவியும் ஒளியாய்
நான் வெளிச்சமிடுகிறேன் ….
No comments:
Post a Comment