Friday 5 July 2013

மீண்டும் நான் ...

இருப்பியல் தொலைந்த ஞாபகம்  வந்து போகும் போதெல்லாம்
எனக்குப் பயம் வருகிறது .

எனக்குள் என்னைச்  சித்திரவதை செய்கிறேன் .
மலினப் பிரச்சாரத்திற்கு நான் மட்டும் நடந்து போகிறேன் .

கண்ணீர் சிந்தாமல் நெடுநேரம் அழ முடிகிறது .
துருபடிந்த என் தோல்விகள் முத்தமிடுவதாய்
யாருக்கும் தெரியாமல் கீறி விட்டு போகின்றன .

என் வெறுமையில் பாறைகள் வந்திறங்கி 
அனிச்சைாய் வெடிக்கின்றன.

ஆயினும்….

சகாராவில் என்னை எடுத்துப் பேசும் போது, 
என் அத்தனை பலமும் சோலார் செல்லில் குவியும் ஒளியாய்
நான் வெளிச்சமிடுகிறேன் ….

மீண்டும் .....

No comments:

Post a Comment