Saturday 20 July 2013

போகிற போக்கில்………..


இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தீர்க்க முடியாத பிரச்னை என்று சில உண்டு. அவை,தீவிரவாதம்,தீண்டாமை,தெலுங்கானா, விலைவாசி,பெட்ரோல்விலை,வேலையில்லாத்திண்டாட்டம்,
 வறுமை,ஊழல், போன்றவை.



‘தெலுங்கானா’ போராட்டக்காரர்களுக்கு கானல்நீர். ஆட்சியாளர்களுக்கு மந்திரக்கோல்.



தெலுங்கானா மாநிலம் கோரி  தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி கட்சியும், தெலுங்கு தேசமும் போராடி வருகின்றனர். பா.ஜ.க.வும் தற்போது கொடிபிடித்திருக்கிறது.



ஆந்திராவில் 2014ல் சட்டமன்றத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் வரஉள்ளதால் காங்கிரஸும் பாஜகவும்  தெலுங்கானா அமைக்கப்படும் என போட்டி போட்டு அறிவித்திருக்கின்றன. ஆனால் இது சாத்தியமா என நடுநிலையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.



தெலுங்கானா அமைப்பதற்காக காங்கிரஸ் ஒருதிட்டத்தை தயாரித்துள்ளது. ஹைதராபாத்தை ஒரு யூனியன் பிரதேசமாகவும், கர்னூல், அனந்தப்பூர் ஆகியவற்றை தெலுங்கானா மாநிலத்துடன் இணைப்பது எனும் திட்டம். இதை சந்திரசேகரராவ் ஏற்கவில்லை.இதற்கு  இடையில் தெலுங்கானா பிரிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி பயமுறுத்தியுள்ளார்.



இது ஒருபுறம் இருக்க ஆந்திர காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஒருசிலர் தெலுங்கானா பிரிக்க வேண்டும் என்றும் பலர் பிரிக்கக்கூடாது என்றும் போராடி வருகின்றனர். காங்கிரஸ் இரு தலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கிறது. பா.ஜ.க இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளப்பார்க்கிறது.

அரசியல் சதுரங்கத்தில் தெலுங்கானாவை ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமாக காய் நகர்த்துகின்றன.எது எப்படியோ தெலுங்கானா தொட்டுவிடும் தூரத்தில் இல்லை . 




No comments:

Post a Comment