நமக்கான
இடம் இங்கு காலியாக இருக்கிறது .
இந்த வானம்
– இந்த பூமி எல்லாம்
நம்மைக் கௌரவப்படுத்தும்
ஏற்பாடுகள் .
என்
விழகளைப் பார்த்து நீ விவரம் அறியும்
நம்
உடன்பாடுகள் .
உன்
செல்லக் கோபத்திற்காக என் குறும்புகள் செய்யும்
சின்னஞ்சிறு
முரண்பாடுகள் .
நீ என்னோடு
கலந்த நேரம் கூட தாமதம் என்று
என்
நெஞ்சம் சொல்கிறது .
இருந்தாலும்
உனக்கும் – எனக்கும்
இந்த ஒரு
பிறவியே போதுமென்கிறது .
அந்த
நந்தவனச் சாலையோரம் நாமிருவரும்
நடந்து
போகிறோம் .
இருவர்
வெப்பமும் இடம் மாறிக் கொள்ள சாரல்கள்
சடைசடையாய்
பொழிகின்றன .
உன் பிஞ்சு
விரல் என் முகம் தொட்டுத் தலை துவட்டுகிறது .
உடம்பெல்லாம்
குளிர் .
உயிரின்
ஒவ்வொரு அணுவிலும் ஈரம் .
அதோடு நீ
கொடுக்கும் அர்த்தமுள்ள ஒரு முத்தம் .
உன்
இதழ்கள் நடுங்க
சுவாசம்
கூட சப்தமிடுகிறது .
கண்கள்
மூடி மூடி
ஏதேதோ
பேசுகிறது .
எனக்கும்
அப்படி தான்.
முடிந்த
வரை நான் அதை மூடி மறைக்கப் பார்க்கிறேன் .
தூரத்துப்
பறவைகள் பேசிக் கொண்டு பறப்பது
நம்மைப்
பற்றியாகத் தான் இருக்கும் என்ற நினைப்பு நாமிருவருக்கும் .
பாதையில்
மழைத்துளிகள்
பாம்புக்
குட்டிகள் போல ஓடிக் கொண்டிருக்கின்றன.
துள்ளிக்
குதித்துக் கால்கள் நனைத்து
என்னை
நோக்கி நீ கையசைக்கிறாய் !
மீண்டும்
நாம் குழந்தைகளாகிறோம் .
தங்கக்
காசுகளைப் போல
சூரியத்
தாரையில் உன் முகம் ஜொலிக்கின்றன .
தண்ணீரின்
ஒவ்வொரு சொட்டிலும் அது
பட்டுத் மிதக்கின்றன
.
வானத்தில்
ஏதோ ஒரு மேகம்
சப்தமிட்டு
வாழ்த்துச் சொல்லி தூறலைத் தொடர்கிறது .
“எதாவது
பேசு” என்று
நீ கேட்பதற்கு முன்னால்
ஏதோ ஒன்றை
பற்றி முடிவில்லாமல் பேசிக்கொண்டியிருக்கிறேன் .
காலம்
நம்மைத் தடை செய்யாமல் இருப்பதால்
உன்னோடு
இருக்கும் இந்த ஒவ்வொரு பொழுதும்
அழகாய்
இருக்கின்றது .
இந்த
நேரத்தில்
நீ சூடிக்
கொள்வதற்காக மலர்கள்
என்னை
அழைப்பதாய் சொல்கிறேன் .
நீயும்
புன்னைத்து ‘ம்’ என்று
சொல்கிறாய் .
பதியமிட்டிருந்த
பூச்செடியை வேரோடு எடுத்து
உனக்குப்
பரிசளிக்கின்றேன் .
வாய்விட்டு
நீ சிரிக்கின்றாய் .
அங்கிருந்த
அனைத்து மொட்டுகளும்
மலர்ந்தும்
மலராமல் என்னை அழைக்கின்றன .
நீ ‘ம்’
என்று சொல்லி விட்டால்
நீ
இருக்கும் இடமெல்லாம் பூ வாசம் தான் .
அந்த
வேளையில் நீ இன்னும்
நனைந்து
கொண்டு இருக்கிறாய் .
தண்ணீர் சொட்டுகிறது
.
இன்னும்
மழைத் தூறக் கொண்டே இருக்கிறது .
- சந்திரபால்.
No comments:
Post a Comment