Friday 5 July 2013

இன்னும் எத்தனை ‘திவ்யா’க்கள் இப்படி ?


சாக்கடையில் மீன் பிடித்துக்
குழம்பு ருசி பார்க்கிறதே இந்த ஜாதி வெறி

இன்னும் எத்தனை ‘திவ்யா’க்கள் இப்படி ?

களிமண் பொம்மையாகிவிட்டாள் திவ்யா .

தர்மபுரி எரிந்த போது
எந்தத் தலைவர்களும் அறிக்கை விடவில்லை.
அரசியல் பேசவில்லை .

எந்த பக்கம் நின்று பேசினாலும்
குடிசைகள் எரியும் !
பேருந்துகள் உடையும் ! கல்லடிகள் நிச்சயம் கிடைக்கும் !

தற்கொலை செய்தானா இளவரசன் ?
எழுதுகின்றன செய்திகளை ஊடக விரல்கள்!
இதில் நம்பிக்கயில்லை ! அழுகின்றன ஆயிரம் குரல்கள் !

‘தான்’மை கொண்ட தேசமிது
சலித்துப் போன மடமையை நுரைக்க வைத்து
மூச்சு முட்ட திண்ணும் வெறிக் கொள்ளும் நாசமிது .

இன்னும் எத்தனை ‘திவ்யா’க்கள் இப்படி ?

மனிதர்கள் அனைவரும் பகுத்தறியும் பாவிகள் .

கல் மனிதர்களாகவே இருந்திருக்கலாம் .
எதற்கிந்த கலாச்சாரம் , எதற்கிந்த கம்பியூட்டர்கள் ,
எதற்கிந்த பேனாக்கள் , எதற்கிந்த புத்தகங்கள் ,
எதற்கிந்த ஆடைகள் , அலங்காரங்கள் .

மனிதர்கள் அனைவரும் பகுத்தறியும் பாவிகள் . 

-சந்திரபால் .

No comments:

Post a Comment