சாக்கடையில் மீன் பிடித்துக்
குழம்பு
ருசி பார்க்கிறதே இந்த ஜாதி வெறி
இன்னும்
எத்தனை ‘திவ்யா’க்கள்
இப்படி ?
களிமண்
பொம்மையாகிவிட்டாள் திவ்யா .
தர்மபுரி
எரிந்த போது
எந்தத்
தலைவர்களும் அறிக்கை விடவில்லை.
அரசியல்
பேசவில்லை .
எந்த
பக்கம் நின்று பேசினாலும்
குடிசைகள்
எரியும் !
பேருந்துகள்
உடையும் ! கல்லடிகள் நிச்சயம் கிடைக்கும் !
தற்கொலை
செய்தானா இளவரசன் ?
எழுதுகின்றன
செய்திகளை ஊடக விரல்கள்!
இதில்
நம்பிக்கயில்லை ! அழுகின்றன ஆயிரம் குரல்கள் !
‘தான்’மை கொண்ட தேசமிது
சலித்துப்
போன மடமையை நுரைக்க வைத்து
மூச்சு
முட்ட திண்ணும் வெறிக் கொள்ளும் நாசமிது .
இன்னும்
எத்தனை ‘திவ்யா’க்கள்
இப்படி ?
மனிதர்கள்
அனைவரும் பகுத்தறியும் பாவிகள் .
கல்
மனிதர்களாகவே இருந்திருக்கலாம் .
எதற்கிந்த
கலாச்சாரம் , எதற்கிந்த கம்பியூட்டர்கள் ,
எதற்கிந்த
பேனாக்கள் , எதற்கிந்த புத்தகங்கள் ,
எதற்கிந்த
ஆடைகள் , அலங்காரங்கள் .
மனிதர்கள்
அனைவரும் பகுத்தறியும் பாவிகள் .
-சந்திரபால் .
No comments:
Post a Comment