சத்தியம் டி. வி.க்காக எழுதியது ....
இன்று
நடக்கும் இந்த 2 ஆம் பிரேத பரிசோதனையில் , இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலை? என்பது
முடிவுக்கு வரும் . ஆனால் இது முடிவு மட்டும் தான் . தீர்வு அல்ல . எதுவானாலும்
பாதிப்பு உருவாகும் . அது பற்றி ……..
இன்று
இளவரசனின் உடல் 2 ஆம் முறை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது . அதற்கு தமிழ் நாட்டு
மருத்துவர்களின் மீது நம்பிக்கை வைக்காமல் , டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவர்களை வரவழைத்திருக்கிறார்கள்.
காதல்
தோல்வியில் மரணமடைந்த இளவரசனின் உடல் இன்று மறு பிரேத பரிசேதனை செய்யப்படுகிறது .
இதற்கு முன் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் , அறிக்கை சமர்ப்பித்த 2 டாக்டர்களும்
இருவேறு கருத்துக்களைத் தெரிவித்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர்களை
வைத்து இன்று பிரேத பரிசோதனை நடக்கப்போகிறது .
இந்த
இரண்டாம் பிரேத பரிசோதனையில் ‘இளவரசனின் மரணம் கொலை தான்’ என்று அறிவிக்கப்பட்டால் மீண்டும்
ஜாதி தீ மூளும் . கலவரங்கள் வெடிக்கும் . கல்லடிகளும் கிடைக்கும் . பேருந்து
எரிந்து நாசமாகும் .
தமிழக அரசு
தர்மபுரியில் தடை உத்தரவு பிறப்பித்தது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் என்றாலும்
, பாதிக்கப்பட்டோரின் கோபத்தைக் கட்டுப்படுத்தும் காரியம் சிரமமானதாகும்.
ஒருவேளை
இளவரசனின் மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டால் , பெற்றோரும் உறவினர்களும் உடலை
வாங்க மறுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கோருவார்கள்.
தாங்கள்
விரும்பும் நீதிபதிகள் முன்பும் , மருத்துவர்கள் முன்பும் பிரேத பரிசோதனை நடத்த
உரிமை கோருவார்கள்.
இளவரசன்
உடல் நாளை அடக்கம் செய்யப்படும் . பெற்றோர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளக்
கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை இளவரசனின் உடல் அடக்கம்
செய்யப்படுமா ..? அடக்கம் செய்ய விடுவார்களா?
இறந்தும்
இந்த பூமியில் இருந்து இன்னும் விடுதலை கிடைக்கவில்லை ! என்ன கொடுமை இது . இளவரசன்
இறந்து இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன . இளவரசனின் ஆன்மா தான் இவர்களை மன்னிக்க
வேண்டும்.
- சந்திரபால் .
No comments:
Post a Comment