Friday 12 July 2013

இளவரசனின் மர்ம மரணம் கொலையா ? தற்கொலையா ?

சத்தியம் டி. வி.க்காக எழுதியது ....

இன்று நடக்கும் இந்த 2 ஆம் பிரேத பரிசோதனையில் , இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலை? என்பது முடிவுக்கு வரும் . ஆனால் இது முடிவு மட்டும் தான் . தீர்வு அல்ல . எதுவானாலும் பாதிப்பு உருவாகும் . அது பற்றி ……..

இன்று இளவரசனின் உடல் 2 ஆம் முறை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது . அதற்கு தமிழ் நாட்டு மருத்துவர்களின் மீது நம்பிக்கை வைக்காமல் , டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவர்களை வரவழைத்திருக்கிறார்கள்.

காதல் தோல்வியில் மரணமடைந்த இளவரசனின் உடல் இன்று மறு பிரேத பரிசேதனை செய்யப்படுகிறது . இதற்கு முன் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் , அறிக்கை சமர்ப்பித்த 2 டாக்டர்களும் இருவேறு கருத்துக்களைத் தெரிவித்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர்களை வைத்து இன்று பிரேத பரிசோதனை நடக்கப்போகிறது .

இந்த இரண்டாம் பிரேத பரிசோதனையில் ‘இளவரசனின் மரணம் கொலை தான்’ என்று அறிவிக்கப்பட்டால் மீண்டும் ஜாதி தீ மூளும் . கலவரங்கள் வெடிக்கும் . கல்லடிகளும் கிடைக்கும் . பேருந்து எரிந்து நாசமாகும் .

தமிழக அரசு தர்மபுரியில் தடை உத்தரவு பிறப்பித்தது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் என்றாலும் , பாதிக்கப்பட்டோரின் கோபத்தைக் கட்டுப்படுத்தும் காரியம் சிரமமானதாகும்.

ஒருவேளை இளவரசனின் மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டால் , பெற்றோரும் உறவினர்களும் உடலை வாங்க மறுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய கோருவார்கள்.

தாங்கள் விரும்பும் நீதிபதிகள் முன்பும் , மருத்துவர்கள் முன்பும் பிரேத பரிசோதனை நடத்த உரிமை கோருவார்கள்.

இளவரசன் உடல் நாளை அடக்கம் செய்யப்படும் . பெற்றோர்கள் தவிர வேறு யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை இளவரசனின் உடல் அடக்கம் செய்யப்படுமா ..? அடக்கம் செய்ய விடுவார்களா?

இறந்தும் இந்த பூமியில் இருந்து இன்னும் விடுதலை கிடைக்கவில்லை ! என்ன கொடுமை இது . இளவரசன் இறந்து இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன . இளவரசனின் ஆன்மா தான் இவர்களை மன்னிக்க வேண்டும்.   
- சந்திரபால் .

No comments:

Post a Comment