Wednesday 12 June 2013

தைலாங் குருவியின் குரொமோசோம்கள் .




இருப்பியல் அறுந்து நிலம் நடுங்க  
பக்கத்துக் கோள்களின் கனவில் கைகழுவி,

வாஸ்கோடகாமாவின் பாதை தேடி அலைந்தான்.

ஒரு அதிகாலையில் விழித்த நொடிகளைச் 
சுற்றி வளைக்கும் முற்றுகை போல,

பெரிதொன்றும் அவனுக்கில்லை.

தைலாங்குருவியின் குரொமோசோம்கள் வளர்ந்ததென்பதும் 
அவனுக்கு எதைச்சையாக நடந்ததில்லை.

டால்ஸ் டாயின் காதல் கடிதங்களில் 
மூர்ச்சையுற்ற இடைவெளியில் 
தன்னை நிரப்பி வைத்துக் கொள்ள அவனுக்குத் தெரியும்.

ஆனால், வனமந்திரத்தின்...
முதல் தேதியும் கடைசித் தேதியும் வேறுபட 
வாழ்தலென்பது அவனுக்கு உகந்ததல்ல.

முதுகு சொரியும் தத்துவங்களைத்
திராட்ச்சையில் ஒட்டும் ஈய்க்களுக்குச் சொல்லி விட்டு 
சகாராவின் மேசைகள் ஒரு ராப்பொழுதில் கூடியது.

சகாராவின் அறிக்கையை வாசித்ததும் 
ஒரு பனி மலை மொத்தமாக உருகி விட்டதென்பதை 
அகாலத்தில் மங்கிய வெளிச்சத்தில் பார்த்தார்கள். 

அந்த நேரத்தில் தானியங்கள் வேற்றுக் கிரகவாசிகளுக்கு
 
விண்ணப்பம் எழுத வேண்டுமென்பதைச் சொல்லி முளைத்தன.
  
- சந்திரபால் .  

No comments:

Post a Comment