அரக்கு நிறத்தில்
பட்டுப்பூச்சியின் வடிவெடுத்து அணிந்திருந்தாள்.
ஞானிகள் தங்கள்
ஏடுகளை அவசரமாகப் புரட்டினார்கள்.
ஆண்டாள் சிலைகள்
அத்தனையும் மல்லுக்கு நின்றன.
ஒரே ஒரு சொல்லுக்கு
உயிர் வேண்டி கெஞ்சின.
மொழிகள் தடுமாறி
உடைந்தான்.
காயங்கள் இதமாக
இருந்தன.
சொல்லியனுப்பியவன்
வல்லவனும்.
கள்ளனும்.
- சந்திரபால் .
- சந்திரபால் .
No comments:
Post a Comment