Thursday 20 June 2013

இன்னும் எத்தனை கொலைகள் ?


முகமறைத்து யாருடலில்
நான் கூடு பாய்ந்தலையட்டும் சொல்லுங்கள் …?

உங்களுக்குப் பிடித்தால்
நானொரு நாய்க்குட்டியாகிவிடவும் எனக்குச் சம்மதம்…!

என்னை எனக்கு
கொஞ்ச நாளாய் பிடிக்கவில்லை....!

எனக்கு விவரம் தெரிந்த அந்த நாளிலிருநந்து
இது தொடங்கியிருக்கலாம்….!

எல்லோரும் பைத்தியக்காரர்களாக நிற்கிறார்கள் …!

மொழி – கலாச்சாரம் கண்டுபிடித்து
விவரமறிந்து நடை பழகியதும் என்னைக் கொன்று விடுகிறார்கள் .       
  

No comments:

Post a Comment