முகமறைத்து யாருடலில்
நான் கூடு பாய்ந்தலையட்டும்
சொல்லுங்கள் …?
உங்களுக்குப்
பிடித்தால்
நானொரு நாய்க்குட்டியாகிவிடவும்
எனக்குச் சம்மதம்…!
என்னை எனக்கு
கொஞ்ச நாளாய்
பிடிக்கவில்லை....!
எனக்கு விவரம்
தெரிந்த அந்த நாளிலிருநந்து
இது தொடங்கியிருக்கலாம்….!
எல்லோரும் பைத்தியக்காரர்களாக
நிற்கிறார்கள் …!
மொழி – கலாச்சாரம்
கண்டுபிடித்து
விவரமறிந்து
நடை பழகியதும் என்னைக் கொன்று விடுகிறார்கள் .
No comments:
Post a Comment