Wednesday 19 June 2013

வாழ்தல் என்பது



என்னை எனக்கே புரிந்து கொள்ள முடியாத
ஒரு நிசப்தத்தில் உன் வார்த்தைகள் மட்டுமே கேட்கின்றன.

அப்போது குறுக்கே ஓடும் காற்றின் விளையாட்டில்
உதிர்ந்த இலைகள் என் தனிமையைக் கலைக்கும்.

பூக்களை எல்லோரும் பார்க்கலாம் – ஆனால்
பூக்களைப் பூக்களாகப் பார்க்க எத்தனை பேருக்கு வாய்க்கும் ?

எல்லோராலும் இலைக் காம்பையும் சேர்த்து
ரசிக்க முடியுமா என்ன !

ஆயிரம் பேர்களுக்கு மத்தியிலும்
ஒருவன் அவனோடு மட்டும் பேசுகிறான் என்றால்
அதுதான் தனிமை .

அந்தப் பொழுதியில் …
எங்கிருந்தோ என்னை இயங்கிக் கொண்டிருக்கும்
உன்னை உணர்கிறேன் . – நான்
உன்னுடைய கனவிலும் வாழ்கிறேன் .

- சந்திரபால் .

No comments:

Post a Comment