ஒரு நிசப்தத்தில் உன்
வார்த்தைகள் மட்டுமே கேட்கின்றன.
அப்போது குறுக்கே ஓடும் காற்றின் விளையாட்டில்
உதிர்ந்த இலைகள் என் தனிமையைக்
கலைக்கும்.
பூக்களை எல்லோரும் பார்க்கலாம் – ஆனால்
பூக்களைப் பூக்களாகப் பார்க்க
எத்தனை பேருக்கு வாய்க்கும் ?
எல்லோராலும் இலைக் காம்பையும் சேர்த்து
ரசிக்க முடியுமா என்ன !
ஆயிரம் பேர்களுக்கு மத்தியிலும்
ஒருவன் அவனோடு மட்டும்
பேசுகிறான் என்றால்
அதுதான் தனிமை .
அந்தப் பொழுதியில் …
எங்கிருந்தோ என்னை இயங்கிக்
கொண்டிருக்கும்
உன்னை உணர்கிறேன் . – நான்
உன்னுடைய கனவிலும் வாழ்கிறேன் .
- சந்திரபால் .
No comments:
Post a Comment