உணர்வுகளுக்குத்
தீணியிட முடியா பொழுதுகளில் ….
என்னை எடுத்து
மென்று விழுங்குகிறேன் .
தனிமையில் ரத்தம் கசியும் நான்
யாருடைய கனவிலோ
வாழ்கிறேன் .....!
என் வெறுமையின் பக்கங்களை
சகாராவில் வைத்து
விட்டு உறங்குகிறேன் .
ஒரு மத்தியானப் பொழுதோ அல்லது நடு இரவோ
எனக்குப் பகையாகலாம்
…!
இந்தக் கவிதையில் யாரோ எங்கோ வாழ்ந்து கொண்டிருக்காலாம் …!
- சந்திரபால் .
No comments:
Post a Comment