Monday 10 June 2013

ஒரு தாடிக்காரனின் கதை


“இந்தத் தாடியை ஏன் எடுக்கக் கூடாது” ….? என்று இன்று தான் மனோகரன் யோசிக்க ஆரம்பித்தான் . ஆனால் அவ்வளவு எளிதாக வளர்ந்த தாடியா அது . மனோகரனை மனோ என்று தான் அழைப்பார்கள் . பழக்கமான நண்பர்கள் ‘தாடி’ என குறும்பாகச் சொல்வார்கள் .

மனோகரனுக்கு நல்ல அகலமான மூஞ்சியென்பதால் “காரல் மார்க்ஸ் போல தாடி வைக்கனும்” என்று சொல்வார்கள் . “இந்த சின்ன வயசுல எதுக்குப்பா இம்புட்டு மயிரு” .? சிலர் கெட்ட வார்த்தைகளிலும் திட்டுவார்கள். அதற்காகவே தன் சொந்த ஊருக்கு திரும்பும் நினைப்பில்லாமல் மனோகரன் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்கராக வேலை செய்தான்.

எல்லோரலும் தாடி வைப்பது இயலாதது தான் . ஆனால் விஞ்ஞானிகளும் – எழுத்தாளர்களும் – சன்னியாசிகளும் – பைத்தியக்கார்களும் தாடி வைத்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலும் காதல் தோல்வியடைந்தவர்கள் தான் தற்காலிகமாகத் தாடி வைக்கிறார்கள் .

மனோகரன் படித்த படிப்புக்கு இந்த சில்லைரை வேலையெல்லாம் அவனுக்கு ஒத்து வராது தான். இருந்தாலும் அவன் சம்பளத்துக்காக வேலை செய்யவில்லை. மூச்சு வாங்க ஓடி வந்தவன் ஓட முடியால் கொஞ்சம் நின்று ஓய்வெடுப்பதாகவே இந்த வேலையை நினைத்தான் .

மனோகரன் MBA படித்து அதில் கோல்ட் மெடல் வாங்கியவன் .பிரபலத் தொழிலதிபர்கள் மனோகரனை விலைக்கு வாங்க அவரசப்பட்ட தருணம் , தன் காதல் லயத்தில் நெஞ்சுடைந்து தெம்பில்லாமல் விழுந்தான் . ஒரே கல்லூரியில் 5 வருடம் படித்த மனோகரனின் காதலுக்கான வயதும் ஐந்து தான்.

ஒரு மின்னல் வேகத்தில் வந்த காதல் 5 வருடங்கள் கடந்து வந்து , நேற்றுக்கு முந்தைய நாள் முடிவெடுத்து இரண்டு நாளுக்குள் திருமணம் நடந்தது. அது மூன்றாம் நாளே முடுவுக்கு வந்து விட்டது . பெற்றோர்கள் வண்டி வண்டியாக வந்திறங்கி அவன் மனைவியைத் அவர்கள் வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள் .

கைக் குழந்தையாகக் கதறினான் மனோகரன் . சாகத் துடித்தவனைக் கழுத்தறுத்து போட்டது போல ஒரு மக்கள் நல மன்றம் உதவுவதாகச் சொல்லி கோர்ட் வாசலில் வைத்து நிரந்தமாகவே மனைகரனை அவன் மனைவியிடமிருந்து பிரித்து வைத்தது . வகுப்பறையில், ஆசிரியரை உட்கார வைத்து பாடம் நடத்தியவன் கல்லூரியில் குறுகி நடக்க முடியாமல், தேர்வெழுதாமலே திரும்பி வந்தான். மனோகரன் தன் உடம்பைச் சுமக்க முடியாமல் நடந்தான் .

மூன்று வருடங்கள் மூலையிலே படுத்தும் உருண்டும் வளர்த்த தாடியோடு கிளம்பினான் . தன் இருப்பதைத் தக்க வைக்க தன்னை எழுந்து நிற்க வைக்க பழைய தெம்பை வலுக்கட்டாயமாக வரவழைத்தான் . நண்பர்களின் உதவியால் போன இடத்தில் உடனே வேலை கிடைத்தது . மிகக் குறைந்த சம்பளம் வாங்கினாலும் எந்தச் செலவும் இல்லாமல் வாரம் மீன் - தலைக் கரி என்று சகல வசதியோடும் நிம்மதியாக சமைத்து மனோகரன் நாட்களைக் கடத்தினான் .

பருவ மழையில் நனைந்ததில் காய்ச்சல் வந்து படுத்த மனோகரன் இருமலுடன் சுணங்கி விழுந்தான் . நண்பர்கள் கூப்பிட்டும் வராத மனோகரனுக்கு காய்ச்சல் முற்றி பெரும் வேதனையானது . ஒரு தனியார் மருத்துவ மனையில் மனோகரன் தங்கி வைத்தியம் பார்க்க நேர்ந்தது . மருத்துவ மனையில் தனக்கு பக்கத்துப் படுக்கையில் ஒரு இளம் பெண் சிகிச்சைக்காகப் படுத்திருத்திருப்பதை மனோகரன் பார்த்தான் .

முரட்டுத் தாடியோடு அந்தப் பெண்ணைப் பார்ப்பது மனோகரனுக்கு சங்கடமாக இருந்தது. இவனுக்கு நேராக இந்தப் பெண் படுத்திருப்பதால் இவன் என்ன செய்தாலும் அவள் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள் .

ஐந்தாறு நாட்கள் மனோகரனை பார்த்துச் சிரித்துக் கொண்டே இருந்தவளை வெகுளியாகவே மனோகரன் நினைத்தான். நல்லிரவில் மருத்துவ மனைக்கு வெளியே இருக்கும் கடைக்குச் சென்று பிளாஸ்டிக் டம்ளரில் டீ வாங்கிக் கொண்டு தன் படுக்கை நோக்கி வந்தான் மனோகரன் .

அந்த நேரம் தன் தாய் கீழே படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க அவள் தூங்காமல் மனோகரனைப் பார்த்துக் கூப்பிட்டாள். ”டீ கட இன்னம் இருக்குங்களா”…? என்று அவள் கேட்டவுன் மனோகரன் எதுவும் யோசிக்காமல் அருகில் செனறான் . “இந்தா இத குடிக்கங்க”.. டீக் கப்பை கொடுத்து விட்டு நகர்ந்தவுடன் அவள் கூப்பிட்டாள் .

“என்னங்க டீ கம்மியா இருக்கு…” அவள் கேட்டதற்கு சிறு புன்னகையுடன் மனோகரன் , “நான் குடிச்சுக்கிட்டே வந்தேன் … வேணும்னா குடிங்க… இல்லையினா கீழ ஊத்துக்கங்க ம் ….” சிரித்துக் கொண்டே தன் படுக்கையில் வந்து திரும்பி படுத்தான் , அவள் என்ன செய்வாளோ என்று திரும்பி பார்த்தான் . ஒரு சொட்டு விடாமல் மண்டி குடித்துக் கொண்டே அரைக் கண்ணில் மனோகரனைப் பார்த்தாள் அவள் .
மருத்துவ மனையில் நர்ஸூகளும் ஆயாக்களும் நோயாளிகளும் கூட நன்றாக தூக்கிக் கொண்டிருக்க இந்த இரவு முழுவதும் கண்களுக்குள் பதுக்கிய வார்த்தைகளை சமமாக இவர்கள் பகிர்ந்து கொண்டார்கள் .
அடுத்த நாள் அவளே வந்து மனோகரனின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு வீட்டுக் கிளம்பினாள். கிளம்பிப் போகும் போதே போன் செய்து பேசினாள் . அடுத்த நாளே சகலமும் பேசி கொஞ்சினாள் .

வாழக்கையின் அடுத்த பாதையில் தெரிகிறது. இவனும் இரண்டொரு நாளில் மருத்துவ மனையிலிருந்து தன்னுடைய அறைக்கு வந்தான் . இரவு முழுக்க எழுந்து உட்கார்ந்து யோசித்தான் . இந்த வெறுமையில் அனிச்சையாக வந்திருக்கும் சமாச்சாரங்களை உணர்ந்து மனோகரன் யாருக்கும் தெரியாமல் வெட்கப்பட்டான்.

காலை எழுந்தவுடன் சலூன் கடைக்குச் சென்று ,தாடியை எடுத்து விட்டு கொஞ்சமாய் இருந்த சடை முடியையும் குறைத்து அலுவலகம் சென்றான் . நண்பர்களுக்கு மனோகரனை பார்த்ததும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள் .

மனோகரன் வெட்கப்பட்டான் . புதுப் பொண்ணு போல கூச்சப்பட்டான். என்ன காரணம் சொல்வதென்று தெரியாமல் மருகினான் .

அலுவலகத்தில் இருக்கும் போதே அவள் போன் செய்தாள் . ஒளிந்து கொண்டே மனோகரன் பேசினான் . இப்படி போனிலே குடும்பம் நடத்தினார்கள். தன்னை திருமணம் செய்து கொள்வதாக அவள் மனோகரனிடம் சொன்னாள் . சொன்னதும் மனோகரன் தனக்கு நடந்த எல்லாம் கசப்புகளையும் மறைக்காமல் அவளிடம் சொன்னான் . அதையெல்லாம் அவள் பெரிதாகவே நினைக்கவில்லை .

அவளும் தன்னைப்பற்றி சொன்னாள். தனக்கு “மாடலிங்” விருப்பம் என்று சொன்னதும் மனோகரனுக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. “அங்கெல்லாம் தப்பான உறவுகள் இருக்கும்ல” என்று மனோகரன் கேட்டதற்கு , சற்றும் யோசிக்காமல், “அதெல்லாம் பார்த்தால் முடியுமா … அத பற்றியெல்லாம் எனக்கு கவலையே இல்ல” . என்று நிறுத்தாமல் சிரித்தாள் அவள் . மனோகரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . யாரிடமும் சொல்ல முடியவில்லை .

இன்று விடுமுறை என்பதால் , எப்போதும் சமைப்பது போல இல்லாமல் தூக்கிக் கொண்டே இருந்தான் . காலையிலே போன ரிக் அடித்தது. அவள் எதற்கு சிரி்க்கிறாள் என்றே தெரியாமல் சிரித்துக் கொண்டே பேசினாள். விருப்பமில்லாமல் மனோகரன் அவளிடம் பேசினான்.

வீட்டில் இன்று யாருமில்லை . என் தோழிகள் எல்லோரும் இன்று வருவார்கள் என்று அவள் சொன்னாள் . மேலு.ம் அவர்களோடு சேர்ந்து நான் சந்தோமாக இருப்பேன் என்று சொன்னாள் . மனோகரன் புரியாமலே கேட்டுக் கொண்டிருந்தான் . நான்கைந்து தோழிகளுடன் கதவை மூடிக் கொண்டு “Group sex செய்வோம்” என்று கூச்சமில்லாமல் மனோகரனிடத்தில் சொன்னாள் . மனைவியாக நினைத்து கனவிலே பிள்ளை பெற்று பார்த்தவன் ஒரு கணம் இறந்தான் .

கோபப்படக் கூட முடியாமல் சரி சரி என்று சொல்லி விட்டு எப்படியோ போனை வைத்தான் மனோகரன்.
இந்த தற்காலிகமான வலி தாங்க முடியாதது தான் . ஆனால் , இதோடு

போய் விட்டதே என்று மனசைத் தேற்றவும் முடியாமல் மனோகரன் எழுந்து கண்ணாடியைப் பார்த்தான் . தாடி லேசாக வளர்ந்திருந்தது இந்த முறை தாடி யாருக்காக வளர்கிறது. எப்போதுமே அவளுக்காக மட்டும் தான் !.

- சந்திரபால் ..

No comments:

Post a Comment