அவள் உச்சரிப்பின் இடைவெளிகளில்
அர்த்தம்
சுமக்கும் ஈரக்காடுகள் .
கண்களுக்குள்
தெறிக்கும்
வார்த்தைகளை
எடுத்து ஒலியமைத்தார்கள் .
ஒரு
மிருகத்தின் கால் தடம் கண்டு
குறி
வைத்தார்கள் .
“ நீயும்
தானியமானவள்
உனக்குள்ளும்
விதைகள் விழும்
இனிமேல்
காடுகள் முளைக்கும்”
பனிவனத்தின்
வீதியில் – இந்தக் களவாணிகள்
மூக்கில்
வீடு கட்டினார்கள்.
கோப்பு ஒழுகு நீரில் கரைந்து கொண்டே
நடுக்கம்
தாளாமல்
இலைக்குவியல்களை
எடுத்துப் போர்த்தினார்கள் .
ஊரணி
மீன்களின் கர்ப்பத்தில்
கல்முளைத்த
கிளிமாந்தன்
நிறங்களின்
மாயங்களில் அர்த்தம் தேடினான் .
- சந்திரபால் .
No comments:
Post a Comment