பெருமளவு
காற்றைக் குடித்து உறங்கினார்கள்
அவர்கள்
அத்தனைப் பேரையும்
பாதியில்
விழிக்கச் செய்கிறார்கள் தாஹீரா.
என்
பிராத்தனைகளின் மௌனத்தில்
அலறிக்கொண்டிருந்தாள்
என்றாலும்
ஒவ்வொரு
அலையிலும்
நான் நிதானமாகத்
தான் நீந்தினேன் .
பச்சை
ராத்திரிகளில்
விசும்பலின்
மீன்கள் கண்ணீர் சிந்தியதால்
எங்கள்
நனவோடையில் வெள்ளம் பெருக்கெடுத்திருக்கலாம் .
ஒரு
முத்தமிட்ட சாக்கில் அது முடிவுக்கு வந்திருக்கலாம் .
நாளுக்கு
நாள் துருவேறிக் கொண்டிருக்கும்
என்
காட்சித் துகள்களில்
அவளுக்கு
நானோ
எனக்கு
அவளோ குற்றத்தின் பெருங்கடலை
இதுவரைக்கும்
ஊற்றியதில்லை .
No comments:
Post a Comment