Tuesday 25 June 2013

குற்றத்தின் பெருங்கடல்

Photo: Tulips in Snow, Jeremy Ranch, Park City, Utah ஆயிரம் துறவிகள்
பெருமளவு காற்றைக் குடித்து உறங்கினார்கள்
அவர்கள் அத்தனைப் பேரையும்
பாதியில் விழிக்கச் செய்கிறார்கள் தாஹீரா.

என் பிராத்தனைகளின் மௌனத்தில்
அலறிக்கொண்டிருந்தாள் என்றாலும்
ஒவ்வொரு அலையிலும்
நான் நிதானமாகத் தான் நீந்தினேன் .

பச்சை ராத்திரிகளில்
விசும்பலின் மீன்கள் கண்ணீர் சிந்தியதால்
எங்கள் நனவோடையில் வெள்ளம் பெருக்கெடுத்திருக்கலாம் .
ஒரு முத்தமிட்ட சாக்கில் அது முடிவுக்கு வந்திருக்கலாம் .

நாளுக்கு நாள் துருவேறிக் கொண்டிருக்கும்
என் காட்சித் துகள்களில்
அவளுக்கு நானோ
எனக்கு அவளோ குற்றத்தின் பெருங்கடலை
இதுவரைக்கும் ஊற்றியதில்லை .

No comments:

Post a Comment