Wednesday 19 June 2013

வார்த்தைகள் ......

என் வார்த்தைகள் தளர்ந்து விட்டன .

பொய்களும் புரட்டுகளும் ஏறி மிதித்த எலும்பு முறிவில்
வார்த்தைகள் தூர்ந்து போகின்றன …

நான் யாருக்காகவோ வாழ வேண்டியதில்லை ….
என்னை ஞாயப்படுத்த வில்லை ,
எனக்குள்ளும் மிருகம் கெக்களிக்கிறது.

நினைந்து நனைந்து போகிறேன. மாதக்கடைசிகளுக்கிடையில்
என் தனிமையின் கதவுகள் திறந்தே கிடந்தாலும்
பாதங்கள் கூசி வெளியே நிற்கின்றன .

என் கவிதைகளுக்கு
ஆயிரம் கற்பனைகள் பேச்சு கொடுக்கின்றன .

நான் எதற்கு அஞ்ச வேண்டும் …?

கவிதை தொடங்கும் போது வார்த்தை தளர்ந்து தான் இருந்தது ,
ஆனால் முடியும் போது அப்படி இல்லை .  

- சந்திரபால் .

No comments:

Post a Comment