Monday 17 June 2013

எல்லோரும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்

மலர்களும்…
இன்னும் காய்ந்து விடாத பனித்துளிகளிலும்…
சகாராவில் இருப்பினும் தனிமையின் வேர்கள்
நெருப்பில் முளைத்திருக்கிறது.
மார்பக முகடுகளை நினைவுகள் கடக்கும் போது
பிசாசுகளும் சூனியக்காரிகளும் கைதட்ட நிகழ்கிறது.

உலகத்தின் எல்லை வரை நடக்க கால்த்தடங்கள்
மாறி மாறி இருட்டில் கதவு தட்டுகிறன.

கதவுகள் சுவருகளாக…
நாட்குறிப்பேட்டில்  சிவந்த வானம் திறக்கிறது.

மஞ்சள் பையோடு நடந்த தூரம் கால் சட்டைக்குள்
எறும்பு மொய்க்க மிக வேகமாக உதறுகிறது.

எல்லோரும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்….

பொத்தி வைத்த அணில் பிள்ளைகள் விழிக்கின்றன.

வயிறு பெருத்த நண்டுகளுக்கும் பேர்காலம்.

எதிர் வீட்டு சோவச்சி மகளோட ரெண்டாவது புள்ள இது.

- சந்திரபால்.




No comments:

Post a Comment