Thursday 20 June 2013

இரட்டை வேடமணிந்து உறங்குகிறார்கள்.



சகாராவின்  ஒரு மார்கழி முன்பகலில் மழை பொறுக்காமல்
குடையின் ஒரு கண்ணில் சிந்தும் ஈரத்தில் 
அவனை அவன் பிரசவித்தான்…

வானம்பாடிகள் தங்கள் பங்குக்கு வாழ்த்தியிருக்கலாம்…

இருந்தும், வினா எதிர் வினாக்கள் அத்தனையும்
படைகளாயிரம் திரட்டி முரசறைந்திருக்கலாம்…

எல்லோரும் தலைகீழாட்டம் புரிகிறார்கள்…

அம்மணத்தின் அழகை 
ஏதேதோ சொல்லி மறைத்து விட்டார்கள்…

ஒரு கனவில் சப்பிக் கொண்டு, 
ஆண்களுக்குப் பெண்களாகவும்…
பெண்களுக்கு ஆண்களாகவும்….
இரட்டை வேடமணிந்து உறங்குகிறார்கள்.

அர்த்தம் தேடியழைந்த நிமிடங்களுக்காவே, 
கடைசி வரைக்கும் வாழமுடியாமல்….

No comments:

Post a Comment